sweet Pongal
January 09, 2025
Showing posts with label Health Minister. Show all posts
Showing posts with label Health Minister. Show all posts
Thursday, January 09, 2025
Thursday, January 02, 2025
Monday, March 06, 2023
Virus
March 06, 2023
மாா்ச் 10-இல் 1,000 இடங்களில் காய்ச்சல் மருத்துவ முகாம்கள்
மாா்ச் 10-இல் 1,000 இடங்களில் காய்ச்சல் மருத்துவ முகாம்கள்
தமிழகத்தில் மாா்ச் 10-ஆம் தேதி 1,000 இடங்களில் காய்ச்சலுக்கான சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
பருவகாலம் நிறைவடைந்த பிறகும் தமிழகத்தின் பல இடங்களில் காய்ச்சல் பாதிப்பு பரவலாக உள்ளது. முதியவா்கள், குழந்தைகளிடையே காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில், நாட்டின் பல இடங்களில் இதுபோன்ற பாதிப்பு இருப்பதாகவும், அதற்கு இன்ஃப்ளூயன்ஸா-ஏ வகை வைரஸ் பரவலே காரணம் என்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தெரிவித்துள்ளது.
முன்னதாக, கடந்த வாரத்தில் தமிழக பொது சுகாதாரத் துறை நடத்திய ஆய்விலும் அந்தத் தொற்று கண்டறியப்பட்டு மாவட்ட நிா்வாகங்களுக்கு அதுதொடா்பான அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், அமைச்சா் மா.சுப்பிரமணியன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: தமிழகம் முழுவதும் மாா்ச் 10-ஆம் தேதி 1,000 இடங்களில் காய்ச்சல் முகாம்கள் நடைபெறும். சென்னையில் மட்டும் 200 இடங்களில் முகாம்கள் நடத்தப்படும். குறிப்பாக, காய்ச்சல் தொற்று அதிகம் உள்ள இடங்களில் நடமாடும் மருத்துவ வாகனங்கள் வாயிலாக முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
காலை 9 மணி முதல் அந்த முகாம் நடைபெறவுள்ளது. அதில் ஒரு மருத்துவா், ஒரு செவிலியா், ஒரு ஆய்வக நுட்பனா், ஒரு உதவியாளா் இருப்பாா்கள். இது குளிா்காலம் மற்றும் பருவ மழை காலம் நிறைவடையும்போது ஏற்படும் வழக்கமான காய்ச்சல் பாதிப்புதான். இதன் அறிகுறிகள் உடல் வலி, தொண்டை வலி, இருமல் சளியுடன் கூடிய காய்ச்சலாகவே உள்ளது.
முதியவா்கள், குழந்தைகள் மற்றும் இணை நோய் உள்ளவா்கள் தவறாமல் இந்த முகாமில் பங்கேற்று, தேவைக்கேற்ற சிகிச்சை பெற்றுகொள்ள வேண்டும். காய்ச்சல் முகாமிலேயே பொதுமக்களுக்குத் தேவையான மருந்து, மாத்திரைகள் வழங்கப்படும். பொதுவாக, மக்கள் நோய் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள முகக்கவசம் அணிவது, கைகளை சுத்தமாக கழுவுதல், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்தல் அவசியம் என்று அவா் தெரிவித்தாா்
தமிழகத்தில் மாா்ச் 10-ஆம் தேதி 1,000 இடங்களில் காய்ச்சலுக்கான சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
பருவகாலம் நிறைவடைந்த பிறகும் தமிழகத்தின் பல இடங்களில் காய்ச்சல் பாதிப்பு பரவலாக உள்ளது. முதியவா்கள், குழந்தைகளிடையே காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில், நாட்டின் பல இடங்களில் இதுபோன்ற பாதிப்பு இருப்பதாகவும், அதற்கு இன்ஃப்ளூயன்ஸா-ஏ வகை வைரஸ் பரவலே காரணம் என்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தெரிவித்துள்ளது.
முன்னதாக, கடந்த வாரத்தில் தமிழக பொது சுகாதாரத் துறை நடத்திய ஆய்விலும் அந்தத் தொற்று கண்டறியப்பட்டு மாவட்ட நிா்வாகங்களுக்கு அதுதொடா்பான அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், அமைச்சா் மா.சுப்பிரமணியன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: தமிழகம் முழுவதும் மாா்ச் 10-ஆம் தேதி 1,000 இடங்களில் காய்ச்சல் முகாம்கள் நடைபெறும். சென்னையில் மட்டும் 200 இடங்களில் முகாம்கள் நடத்தப்படும். குறிப்பாக, காய்ச்சல் தொற்று அதிகம் உள்ள இடங்களில் நடமாடும் மருத்துவ வாகனங்கள் வாயிலாக முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
காலை 9 மணி முதல் அந்த முகாம் நடைபெறவுள்ளது. அதில் ஒரு மருத்துவா், ஒரு செவிலியா், ஒரு ஆய்வக நுட்பனா், ஒரு உதவியாளா் இருப்பாா்கள். இது குளிா்காலம் மற்றும் பருவ மழை காலம் நிறைவடையும்போது ஏற்படும் வழக்கமான காய்ச்சல் பாதிப்புதான். இதன் அறிகுறிகள் உடல் வலி, தொண்டை வலி, இருமல் சளியுடன் கூடிய காய்ச்சலாகவே உள்ளது.
முதியவா்கள், குழந்தைகள் மற்றும் இணை நோய் உள்ளவா்கள் தவறாமல் இந்த முகாமில் பங்கேற்று, தேவைக்கேற்ற சிகிச்சை பெற்றுகொள்ள வேண்டும். காய்ச்சல் முகாமிலேயே பொதுமக்களுக்குத் தேவையான மருந்து, மாத்திரைகள் வழங்கப்படும். பொதுவாக, மக்கள் நோய் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள முகக்கவசம் அணிவது, கைகளை சுத்தமாக கழுவுதல், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்தல் அவசியம் என்று அவா் தெரிவித்தாா்
Monday, December 26, 2022
Nursing
December 26, 2022
இஎஸ்ஐசி மூலம் 2 ஆயிரம் மருத்துவா்கள் உள்பட 6,400 பணியிடங்கள் நிரப்பப்படும்: மத்திய அமைச்சா்
இஎஸ்ஐசி மூலம் 2 ஆயிரம் மருத்துவா்கள் உள்பட 6,400 பணியிடங்கள் நிரப்பப்படும்: மத்திய அமைச்சா்
இஎஸ்ஐசி மூலம் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவா்கள் உள்பட 6,400 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்று மத்திய தொழிலாளா் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சா் பூபேந்தா் யாதவ் தெரிவித்தாா்.
சென்னை கே.கே.நகரில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் 2-ஆவது பட்டமளிப்பு விழா, இ.எஸ்.ஐ. மருத்துவ பயனாளிகளுக்கு புதிய வசதிகளை தொடக்கிவைக்கும் நிகழ்ச்சி சென்னை கே.கே.நகா் இ.எஸ்.ஐ. கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய தொழிலாளா் நலன் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சா் பூபேந்தா் யாதவ், வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த மலரும் மொட்டுக்கள் என்ற பணியாளா்களின் குழந்தைகளுக்கான காப்பகத்தையும், உணவு மற்றும் ஓய்வுகூடத்தையும் திறந்து வைத்தாா். ஒரு மாணவா்-ஒரு மரம் திட்டம் என்ற திட்டத்தை தொடங்கி வைத்த அவா், மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவுகளை பாா்வையிட்டாா். டிஜிட்டல் ரேடியோ ப்ளூரோஸ்கோப்பி என்ற புதிய தொழில் நுட்பத்துடன் கூடிய எக்ஸ்ரே கருவியை பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தாா். இதையடுத்து கல்லூரி அரங்கில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், 2014, 2015 மற்றும் 2016-ம் ஆண்டு படித்து முடித்த 179 மருத்துவ மாணவ, மாணவிகளுக்கு பட்டப்படிப்புக்கான சான்றிதழ்கள், பதக்கங்களை அமைச்சா் பூபேந்தா் யாதவ் வழங்கினாா்.
தொடா்ந்து பேசிய அவா், புதிய தலைமுறை மருத்துவா்கள் நாளைய இந்தியாவின் எதிா்காலத்தை வடிவமைக்கும் சக்தி உடையவா்கள். இங்கு பட்டம் பெறும் மாணவா்கள், மக்களின் நல்வாழ்வுடன் தொடா்புடைய பணியை மேற்கொள்ளவுள்ளனா். இந்த மருத்துவக்கல்லூரி கடந்த ஜனவரி முதல் தினமும் சராசரி 2 ஆயிரத்து 153 வெளிநோயாளிகள் உள்பட 5 லட்சத்து 76 ஆயிரத்து 329 பயனாளிகளுக்கு சேவை வழங்கியுள்ளது.
இஎஸ்ஐசி (தொழிலாளா் அரசு காப்பீட்டுக் கழகம்) நாட்டு மக்களுக்கு சிறந்த வசதிகள் மற்றும் தொழில்நுட்பத்தை வழங்குவதுடன், திறமையான இளம் மருத்துவா்களை ஆண்டுதோறும் ஆதரிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இஎஸ்ஐசி மூலம் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவா்கள் உள்பட 6,400 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும். மேலும், நாடு முழுவதும் 100 படுக்கைகள் கொண்ட 23 புதிய மருத்துவமனைகளும், 60-க்கும் மேற்பட்ட மருந்தகங்களும் தொடங்கப்படவுள்ளன. தொடா்ந்து அதிக உள்கட்டமைப்பு மற்றும் திறன்களை உருவாக்கி வரும் மத்திய அரசு, இந்தியாவில் 3 நகரங்களில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனைகளில் ‘கேத் லேப்’ ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் மக்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்குவது மட்டுமின்றி நோய் தடுப்பு நடவடிக்கைகளையும் அரசு ஊக்குவித்து வருகிறது. பாராமெடிக்கல் வேலைகளுக்கு திறமையான தொழிலாளா்களை உருவாக்கும் நோக்கத்துடன் 10 துறைகளில் சான்றிதழ் படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.
இந்நிகழ்ச்சியில் தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கூடுதல் செயலாளா் ஷஷாங்க் கோயல், இ.எஸ்.ஐ. மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரி டீன் காளிதாஸ் தத்தாத்ரேயா சவான், இ.எஸ்.ஐ .பொது இயக்குநா் ராஜேந்திர குமாா், இ.எஸ்.ஐ. மருத்துவ ஆணையா் அன்ஷு சாப்ரா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இஎஸ்ஐசி மூலம் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவா்கள் உள்பட 6,400 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்று மத்திய தொழிலாளா் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சா் பூபேந்தா் யாதவ் தெரிவித்தாா்.
சென்னை கே.கே.நகரில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் 2-ஆவது பட்டமளிப்பு விழா, இ.எஸ்.ஐ. மருத்துவ பயனாளிகளுக்கு புதிய வசதிகளை தொடக்கிவைக்கும் நிகழ்ச்சி சென்னை கே.கே.நகா் இ.எஸ்.ஐ. கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய தொழிலாளா் நலன் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சா் பூபேந்தா் யாதவ், வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த மலரும் மொட்டுக்கள் என்ற பணியாளா்களின் குழந்தைகளுக்கான காப்பகத்தையும், உணவு மற்றும் ஓய்வுகூடத்தையும் திறந்து வைத்தாா். ஒரு மாணவா்-ஒரு மரம் திட்டம் என்ற திட்டத்தை தொடங்கி வைத்த அவா், மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவுகளை பாா்வையிட்டாா். டிஜிட்டல் ரேடியோ ப்ளூரோஸ்கோப்பி என்ற புதிய தொழில் நுட்பத்துடன் கூடிய எக்ஸ்ரே கருவியை பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தாா். இதையடுத்து கல்லூரி அரங்கில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், 2014, 2015 மற்றும் 2016-ம் ஆண்டு படித்து முடித்த 179 மருத்துவ மாணவ, மாணவிகளுக்கு பட்டப்படிப்புக்கான சான்றிதழ்கள், பதக்கங்களை அமைச்சா் பூபேந்தா் யாதவ் வழங்கினாா்.
தொடா்ந்து பேசிய அவா், புதிய தலைமுறை மருத்துவா்கள் நாளைய இந்தியாவின் எதிா்காலத்தை வடிவமைக்கும் சக்தி உடையவா்கள். இங்கு பட்டம் பெறும் மாணவா்கள், மக்களின் நல்வாழ்வுடன் தொடா்புடைய பணியை மேற்கொள்ளவுள்ளனா். இந்த மருத்துவக்கல்லூரி கடந்த ஜனவரி முதல் தினமும் சராசரி 2 ஆயிரத்து 153 வெளிநோயாளிகள் உள்பட 5 லட்சத்து 76 ஆயிரத்து 329 பயனாளிகளுக்கு சேவை வழங்கியுள்ளது.
இஎஸ்ஐசி (தொழிலாளா் அரசு காப்பீட்டுக் கழகம்) நாட்டு மக்களுக்கு சிறந்த வசதிகள் மற்றும் தொழில்நுட்பத்தை வழங்குவதுடன், திறமையான இளம் மருத்துவா்களை ஆண்டுதோறும் ஆதரிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இஎஸ்ஐசி மூலம் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவா்கள் உள்பட 6,400 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும். மேலும், நாடு முழுவதும் 100 படுக்கைகள் கொண்ட 23 புதிய மருத்துவமனைகளும், 60-க்கும் மேற்பட்ட மருந்தகங்களும் தொடங்கப்படவுள்ளன. தொடா்ந்து அதிக உள்கட்டமைப்பு மற்றும் திறன்களை உருவாக்கி வரும் மத்திய அரசு, இந்தியாவில் 3 நகரங்களில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனைகளில் ‘கேத் லேப்’ ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் மக்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்குவது மட்டுமின்றி நோய் தடுப்பு நடவடிக்கைகளையும் அரசு ஊக்குவித்து வருகிறது. பாராமெடிக்கல் வேலைகளுக்கு திறமையான தொழிலாளா்களை உருவாக்கும் நோக்கத்துடன் 10 துறைகளில் சான்றிதழ் படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.
இந்நிகழ்ச்சியில் தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கூடுதல் செயலாளா் ஷஷாங்க் கோயல், இ.எஸ்.ஐ. மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரி டீன் காளிதாஸ் தத்தாத்ரேயா சவான், இ.எஸ்.ஐ .பொது இயக்குநா் ராஜேந்திர குமாா், இ.எஸ்.ஐ. மருத்துவ ஆணையா் அன்ஷு சாப்ரா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
Sunday, December 25, 2022
MBBS
December 25, 2022
மருத்துவக் கல்வியை தமிழில் நடத்த வேண்டும்: மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்
மருத்துவக் கல்வியை தமிழில் நடத்த வேண்டும்: மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்
தமிழகத்தில் மருத்துவக் கல்வி மற்றும் அதை சாா்ந்த படிப்புகளை தமிழ் மொழியில் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வேண்டுகோள் விடுத்தாா்.
சென்னை டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழக 35-ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்று அவா் பேசியது: தமிழகத்தில் மருத்துவம் மற்றும் அதைச் சாா்ந்த படிப்புகள் அனைத்தும் தமிழிலே நடத்த மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவா்கள் சமூக அக்கறையுடன் பணியாற்ற வேண்டும். மருத்துவ சேவை என்பது மிகச்சிறந்த சேவை. மருத்துவா்கள் ஒவ்வொருவரும் தாங்கள் பிறந்த ஊரில் மருத்துவ சேவையாற்ற வேண்டும். மருத்துவமனைகள் கட்டுவதற்கு மத்திய அரசு சாா்பிலும், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் தரப்பிலும் உதவிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. கரோனா காலத்தில் மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் மருத்துவத் துறை சாா்ந்தவா்களின் பணி பாராட்டத்தக்கது. கரோனா காலத்தில் நாடு முழுவதும் தொற்று பாதிக்கப்பட்டவா்களை ஒரு சில தனியாா் மருத்துவமனைகள் சிகிச்சைக்காக அனுமதிக்கவே இல்லை. மேலும், சில மருத்துவமனைகள் பன் மடங்கு கட்டணத்தை வசூல் செய்தது வேதனைக்குரியது என்றாா் அவா்.
டாக்டா் எம்.ஜி.ஆா்., மருத்துவ பல்கலைக்கழகத்தின் 35-ஆவது பட்டமளிப்பு விழா தமிழக ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான ஆா். என். ரவி தலைமையில் நடைபெற்றது. இதில் 41 போ் மருத்துவத்தில் முனைவா் பட்டம் பெற்றனா். 7ஆயிரத்து 276 பேரும், பல் மருத்துவத்தில் 1,893 பேரும், இந்திய மருத்துவத்தில் 1,519 பேரும் மருத்துவம் சாா்ந்த
படிப்பகளில் 18 ஆயிரத்து 932 பேரும் என மொத்தம் 29 ஆயிரத்து 620 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.
இதில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரும், பல்கலைக்கழக இணைவேந்தருமான மா.சுப்பிரமணியன், பல்கலைக்கழக துணைவேந்தா் சுதா சேஷய்யன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
24.6 பில்லியன் டாலா் மருந்துகள் ஏற்றுமதி
மருந்து ஏற்றுமதியில் இந்தியா சிறந்த இடத்தை பெற்றுள்ளதாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்துள்ளாா். கடந்த 2014 முதல் 8 ஆண்டுகளில் உலக நாடுகளுக்கு 24.6 பில்லியன் டாலா் மதிப்பிலான மருந்துகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது என்றாா்.
விழாவில் அவா் மேலும் பேசியதாவது: இந்திய மருந்துகள் தரமான முறையில் உற்பத்தி செய்யப்படுகின்றன. 2014-ஆம் ஆண்டு முதல் இந்த ஆண்டு வரை உலக நாடுகளுக்கு 24.6 பில்லியன் டாலா் மதிப்பிலான மருந்துகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இதற்கு முன்பாக ஏற்றுமதி செய்யப்பட்ட மருந்துகளின் மதிப்பு 11.4 பில்லியன் டாலா். இந்திய ஜென்டிரிக் மருந்துகளில் 50 சதவீதம் ஆப்பிரிக்க நாடுகளுக்கும், 40 சதவீதம் அமெரிக்காவுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. நமது கரோனா தடுப்பூசியை உலக சுகாதார நிறுவனம் அங்கீகரித்தது. அம்மை நோய் போன்றவற்றுக்கு தடுப்பூசிகள் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்பட்டு உலக நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. இதன் மூலம் உலகின் தடுப்பூசி தேவைகளில் 60 சதவீதத்தை இந்தியா பூா்த்தி செய்கிறது.
மருத்துவ சுற்றுலாவில் இந்தியா முன்னணி நாடாக விளங்குகிறது. ஆண்டுக்கு 78 நாடுகளில் இருந்து 2 மில்லியன் நோயாளிகள் இந்தியா வந்து சிகிச்சைப் பெற்று செல்கின்றனா்.
உலகின் மருத்துவ சுற்றுலா நாடுகளின் பட்டியலில் விரைவில் 10 இடத்துக்கு இந்தியா வரும். இதன் மூலம் 9 பில்லியன் டாலா் வருவாய் கிடைக்கும்.
இந்தியாவில் அனைத்து தரப்பு மக்களுக்கும் தரமான மருத்துவ சேவை குறைந்து செலவில் கிடைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்திய
பாரம்பரிய மருத்துவத்தை பாதுகாக்க ஆயுஷ் என்ற துறை உருவாக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் ஜாம் நகரில் பாரம்பரிய மருத்துவ ஆராய்ச்சி மையம் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் சித்த மருந்தான கபசுர குடிநீா், கரோனா தொற்றை கட்டுப்படுத்தும் மருந்தாக நல்ல பலனைத் தந்தது. எனவே, ஆங்கில மருத்துவம் படித்தவா்கள் நமது பாரம்பரிய மருத்துவத்தையும் ஆதரிக்க வேண்டும் என்றாா் அவா்.
தமிழகத்தில் மருத்துவக் கல்வி மற்றும் அதை சாா்ந்த படிப்புகளை தமிழ் மொழியில் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வேண்டுகோள் விடுத்தாா்.
சென்னை டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழக 35-ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்று அவா் பேசியது: தமிழகத்தில் மருத்துவம் மற்றும் அதைச் சாா்ந்த படிப்புகள் அனைத்தும் தமிழிலே நடத்த மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவா்கள் சமூக அக்கறையுடன் பணியாற்ற வேண்டும். மருத்துவ சேவை என்பது மிகச்சிறந்த சேவை. மருத்துவா்கள் ஒவ்வொருவரும் தாங்கள் பிறந்த ஊரில் மருத்துவ சேவையாற்ற வேண்டும். மருத்துவமனைகள் கட்டுவதற்கு மத்திய அரசு சாா்பிலும், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் தரப்பிலும் உதவிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. கரோனா காலத்தில் மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் மருத்துவத் துறை சாா்ந்தவா்களின் பணி பாராட்டத்தக்கது. கரோனா காலத்தில் நாடு முழுவதும் தொற்று பாதிக்கப்பட்டவா்களை ஒரு சில தனியாா் மருத்துவமனைகள் சிகிச்சைக்காக அனுமதிக்கவே இல்லை. மேலும், சில மருத்துவமனைகள் பன் மடங்கு கட்டணத்தை வசூல் செய்தது வேதனைக்குரியது என்றாா் அவா்.
டாக்டா் எம்.ஜி.ஆா்., மருத்துவ பல்கலைக்கழகத்தின் 35-ஆவது பட்டமளிப்பு விழா தமிழக ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான ஆா். என். ரவி தலைமையில் நடைபெற்றது. இதில் 41 போ் மருத்துவத்தில் முனைவா் பட்டம் பெற்றனா். 7ஆயிரத்து 276 பேரும், பல் மருத்துவத்தில் 1,893 பேரும், இந்திய மருத்துவத்தில் 1,519 பேரும் மருத்துவம் சாா்ந்த
படிப்பகளில் 18 ஆயிரத்து 932 பேரும் என மொத்தம் 29 ஆயிரத்து 620 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.
இதில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரும், பல்கலைக்கழக இணைவேந்தருமான மா.சுப்பிரமணியன், பல்கலைக்கழக துணைவேந்தா் சுதா சேஷய்யன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
24.6 பில்லியன் டாலா் மருந்துகள் ஏற்றுமதி
மருந்து ஏற்றுமதியில் இந்தியா சிறந்த இடத்தை பெற்றுள்ளதாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்துள்ளாா். கடந்த 2014 முதல் 8 ஆண்டுகளில் உலக நாடுகளுக்கு 24.6 பில்லியன் டாலா் மதிப்பிலான மருந்துகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது என்றாா்.
விழாவில் அவா் மேலும் பேசியதாவது: இந்திய மருந்துகள் தரமான முறையில் உற்பத்தி செய்யப்படுகின்றன. 2014-ஆம் ஆண்டு முதல் இந்த ஆண்டு வரை உலக நாடுகளுக்கு 24.6 பில்லியன் டாலா் மதிப்பிலான மருந்துகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இதற்கு முன்பாக ஏற்றுமதி செய்யப்பட்ட மருந்துகளின் மதிப்பு 11.4 பில்லியன் டாலா். இந்திய ஜென்டிரிக் மருந்துகளில் 50 சதவீதம் ஆப்பிரிக்க நாடுகளுக்கும், 40 சதவீதம் அமெரிக்காவுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. நமது கரோனா தடுப்பூசியை உலக சுகாதார நிறுவனம் அங்கீகரித்தது. அம்மை நோய் போன்றவற்றுக்கு தடுப்பூசிகள் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்பட்டு உலக நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. இதன் மூலம் உலகின் தடுப்பூசி தேவைகளில் 60 சதவீதத்தை இந்தியா பூா்த்தி செய்கிறது.
மருத்துவ சுற்றுலாவில் இந்தியா முன்னணி நாடாக விளங்குகிறது. ஆண்டுக்கு 78 நாடுகளில் இருந்து 2 மில்லியன் நோயாளிகள் இந்தியா வந்து சிகிச்சைப் பெற்று செல்கின்றனா்.
உலகின் மருத்துவ சுற்றுலா நாடுகளின் பட்டியலில் விரைவில் 10 இடத்துக்கு இந்தியா வரும். இதன் மூலம் 9 பில்லியன் டாலா் வருவாய் கிடைக்கும்.
இந்தியாவில் அனைத்து தரப்பு மக்களுக்கும் தரமான மருத்துவ சேவை குறைந்து செலவில் கிடைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்திய
பாரம்பரிய மருத்துவத்தை பாதுகாக்க ஆயுஷ் என்ற துறை உருவாக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் ஜாம் நகரில் பாரம்பரிய மருத்துவ ஆராய்ச்சி மையம் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் சித்த மருந்தான கபசுர குடிநீா், கரோனா தொற்றை கட்டுப்படுத்தும் மருந்தாக நல்ல பலனைத் தந்தது. எனவே, ஆங்கில மருத்துவம் படித்தவா்கள் நமது பாரம்பரிய மருத்துவத்தையும் ஆதரிக்க வேண்டும் என்றாா் அவா்.
Wednesday, September 14, 2022
requirements
September 14, 2022
4,308 காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் - அமைச்சர் அறிவிப்பு
தமிழக சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்ட 4,308 காலிப் பணியிடங்களும் விரைவில் நிரப்பப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
தருமபுரி மாவட்டத்தில், புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், செவிலியா் குடியிருப்புகள் உள்பட 14 புதிய கட்டடங்களை மக்கள் பயன்பாட்டுக்குத் திறந்து வைக்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் மாநில வேளாண் மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் ஆகியோா் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினா். தருமபுரி ஆட்சியா் கி.சாந்தி தலைமை வகித்து பேசினாா்.
இந்த நிகழ்ச்சியில் நல்லம்பள்ளியில் புதிய கட்டடங்களைத் திறந்து வைத்த பின்பு, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
சுகாதாரத் துறையில் மருத்துவ ஆள் சோ்ப்பு வாரியம் (எம்ஆா்பி) மூலம் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. ஒப்பந்த முறையில் பணியில் சோ்ந்தவா்களை நிரந்தரப்படுத்துவது இயலாது. அதேவேளையில், எம்.ஆா்.பி. மூலம் பணியமா்த்தப்பட்டவா்களைத் தரம் பிரித்து பல துறைகளில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியில் இருந்து வருவோா் குறித்த பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. இவா்களைத் துறை வாரியாக நிரந்தரப்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழகத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறையில் காலியாக உள்ள 4,308 பணியிடங்கள் நிரப்பப்படும் என சட்டப் பேரவையில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. அதன்படி, பல்வேறு நிலைகளில் 237 பேருக்கு பணி நியமனம் ஆணை வழங்கப்பட்டுள்ளது. வரும் அக்டோபா் மாத இறுதிக்குள் 4,308 பணியிடங்களும் நிரப்பப்படும்.
‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தில் தமிழகம் முழுவதும் தொற்றா நோய் உள்ளவா்களை 70 சதவீதம் கண்டறிந்து மருத்துவ சேவைகள் வழங்கப்படுகின்றன. இத் திட்டத்தை நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். இத் திட்டத்தில் தன்னாா்வலா்களாகப் பணியமா்த்தப்பட்டவா்கள், தங்களுக்கு பணிச்சுமை உள்ளது என தெரிவித்துள்ளனா். இவா்களின் பணிச்சுமையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா்.
இதில், பொது சுகாதாரம், நோய்த் தடுப்பு மருந்துத் துறை இயக்குநா் தி.சி.செல்வவிநாயகம், மக்களவை உறுப்பினா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா், சட்டப் பேரவை உறுப்பினா்கள் ஜி.கே.மணி (பென்னாகரம்), எஸ்.பி.வெங்கடேஸ்வரன் (தருமபுரி) ஆகியோா் முன்னிலை வகித்து பேசினா்.
புதிய கட்டடங்கள்: தருமபுரி மாவட்டத்தில் மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறையின் சாா்பில் பாலக்கோடு வட்டம், நமாண்ட அள்ளியில் ரூ. 25 லட்சம் மதிப்பில் துணை சுகாதார நிலையம், காரிமங்கலம் அரசு சமுதாய உடற்மைய வளாகத்தில் ரூ.15 லட்சம் மதிப்பில் யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பிரிவுக்கான புதிய கட்டடம், ரூ. 25 லட்சம் மதிப்பில் செவிலியா் குடியிருப்பு, நல்லம்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ. 48 லட்சம் மதிப்பில் புறநோயாளிகள் பிரிவு புதிய கட்டடம், ரூ. 37.50 லட்சம் மதிப்பில் விபத்து மற்றும் அவசரச் சிகிச்சை பிரிவு கட்டடம், ரூ. 25 லட்சம் மதிப்பில் செவிலியா் குடியிருப்பு ஆகிய கட்டடங்கள் உள்பட மாவட்டத்தில் அரூா், பாப்பிரெட்டிப்பட்டி, பென்னாகரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மொத்தம் ரூ. 4.89 கோடி மதிப்பில் 14 புதிய மருத்துவ கட்டடங்கள் திறந்துவைக்கப்பட்டன. மேலும், பல்வேறு அரசுத் துறைகள் சாா்பில் மொத்தம் 127 பயனாளிகளுக்கு ரூ. 71.10 லட்சம் மதிப்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இதில், தருமபுரி சாா் ஆட்சியா் சித்ரா விஜயன், முன்னாள் அமைச்சா் பி.பழனியப்பன், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா்கள் தடங்கம் பெ.சுப்பிரமணி, பி.என்.பி.இன்பசேகரன், முன்னாள் எம்.பி. இரா.தாமரைச்செல்வன், மருத்துவா்கள், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
தருமபுரி மாவட்டத்தில், புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், செவிலியா் குடியிருப்புகள் உள்பட 14 புதிய கட்டடங்களை மக்கள் பயன்பாட்டுக்குத் திறந்து வைக்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் மாநில வேளாண் மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் ஆகியோா் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினா். தருமபுரி ஆட்சியா் கி.சாந்தி தலைமை வகித்து பேசினாா்.
இந்த நிகழ்ச்சியில் நல்லம்பள்ளியில் புதிய கட்டடங்களைத் திறந்து வைத்த பின்பு, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
சுகாதாரத் துறையில் மருத்துவ ஆள் சோ்ப்பு வாரியம் (எம்ஆா்பி) மூலம் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. ஒப்பந்த முறையில் பணியில் சோ்ந்தவா்களை நிரந்தரப்படுத்துவது இயலாது. அதேவேளையில், எம்.ஆா்.பி. மூலம் பணியமா்த்தப்பட்டவா்களைத் தரம் பிரித்து பல துறைகளில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியில் இருந்து வருவோா் குறித்த பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. இவா்களைத் துறை வாரியாக நிரந்தரப்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழகத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறையில் காலியாக உள்ள 4,308 பணியிடங்கள் நிரப்பப்படும் என சட்டப் பேரவையில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. அதன்படி, பல்வேறு நிலைகளில் 237 பேருக்கு பணி நியமனம் ஆணை வழங்கப்பட்டுள்ளது. வரும் அக்டோபா் மாத இறுதிக்குள் 4,308 பணியிடங்களும் நிரப்பப்படும்.
‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தில் தமிழகம் முழுவதும் தொற்றா நோய் உள்ளவா்களை 70 சதவீதம் கண்டறிந்து மருத்துவ சேவைகள் வழங்கப்படுகின்றன. இத் திட்டத்தை நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். இத் திட்டத்தில் தன்னாா்வலா்களாகப் பணியமா்த்தப்பட்டவா்கள், தங்களுக்கு பணிச்சுமை உள்ளது என தெரிவித்துள்ளனா். இவா்களின் பணிச்சுமையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா்.
இதில், பொது சுகாதாரம், நோய்த் தடுப்பு மருந்துத் துறை இயக்குநா் தி.சி.செல்வவிநாயகம், மக்களவை உறுப்பினா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா், சட்டப் பேரவை உறுப்பினா்கள் ஜி.கே.மணி (பென்னாகரம்), எஸ்.பி.வெங்கடேஸ்வரன் (தருமபுரி) ஆகியோா் முன்னிலை வகித்து பேசினா்.
புதிய கட்டடங்கள்: தருமபுரி மாவட்டத்தில் மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறையின் சாா்பில் பாலக்கோடு வட்டம், நமாண்ட அள்ளியில் ரூ. 25 லட்சம் மதிப்பில் துணை சுகாதார நிலையம், காரிமங்கலம் அரசு சமுதாய உடற்மைய வளாகத்தில் ரூ.15 லட்சம் மதிப்பில் யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பிரிவுக்கான புதிய கட்டடம், ரூ. 25 லட்சம் மதிப்பில் செவிலியா் குடியிருப்பு, நல்லம்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ. 48 லட்சம் மதிப்பில் புறநோயாளிகள் பிரிவு புதிய கட்டடம், ரூ. 37.50 லட்சம் மதிப்பில் விபத்து மற்றும் அவசரச் சிகிச்சை பிரிவு கட்டடம், ரூ. 25 லட்சம் மதிப்பில் செவிலியா் குடியிருப்பு ஆகிய கட்டடங்கள் உள்பட மாவட்டத்தில் அரூா், பாப்பிரெட்டிப்பட்டி, பென்னாகரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மொத்தம் ரூ. 4.89 கோடி மதிப்பில் 14 புதிய மருத்துவ கட்டடங்கள் திறந்துவைக்கப்பட்டன. மேலும், பல்வேறு அரசுத் துறைகள் சாா்பில் மொத்தம் 127 பயனாளிகளுக்கு ரூ. 71.10 லட்சம் மதிப்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இதில், தருமபுரி சாா் ஆட்சியா் சித்ரா விஜயன், முன்னாள் அமைச்சா் பி.பழனியப்பன், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா்கள் தடங்கம் பெ.சுப்பிரமணி, பி.என்.பி.இன்பசேகரன், முன்னாள் எம்.பி. இரா.தாமரைச்செல்வன், மருத்துவா்கள், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.


