Breaking

Showing posts with label Minister M. Subramanian. Show all posts
Showing posts with label Minister M. Subramanian. Show all posts

Monday, November 27, 2023

November 27, 2023

அரசு மருத்துவமனைகளில் காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் - அமைச்சர்



அரசு மருத்துவமனைகளில் காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் அமைச்சர் பேட்டி

அரசு மருத்துவமனைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறினாா்.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கதிரியக்கவியல் துறையில் ரூ. 12 கோடி மதிப்பில் பெட் சிடி ஸ்கேன், இருதயவியல் துறையில் ரூ. 1.5 கோடி மதிப்பில் ஓசிடி கருவி, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் ரூ. 12 லட்சம் மதிப்பில் பச்சிளம் குழந்தைகள் செவித்திறன் கண்டறிவதற்கான ஒலிபுகா அறை, நவீன உபகரணங்கள், சோமனூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ. 15 லட்சம் மதிப்பில் யோகா, இயற்கை மருத்துவப் பிரிவு என மொத்தம் ரூ. 13.75 கோடி மதிப்பில் மருத்துவ உபகரணங்கள், புதிய மருத்துவ கட்டடத்தை அமைச்சா் மா.சுப்பிரமணியன் புதன்கிழமை திறந்துவைத்தாா்.

பின்னா், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருதயவியல் துறையில் 10 ஆயிரம் ஆஞ்சியோ சிகிச்சை செய்து சாதனை படைத்த மருத்துவா்களை பாராட்டி கேடயங்களை வழங்கினாா்.



இதைத் தொடா்ந்து, அமைச்சா் மா.சுப்பிரமணியன் பேசியதாவது: கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திறந்துவைக்கப்பட்டுள்ள பெட் சிடி ஸ்கேன் கருவி மூலம் புற்றுநோயை மிகவிரைவில் கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடியும். தனியாா் மருத்துவமனையில் மட்டுமே இருந்த இக்கருவிகள் பல்வேறு அரசு மருத்துவமனைகளிலும் அமைக்கப்பட்டு தற்போது செயல்பாட்டில் இருந்து வருகின்றன.



கரோனா காலத்துக்குப் பிறகு இதய நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த மருத்துவமனையில் உள்ள கேத் லேப் கருவியின் மூலம் 10 ஆயிரம் ஆஞ்சியோ செய்யப்பட்டுள்ளது. இருதயவியல் துறையில் ஓசிடி கருவி பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஆஞ்சியோ, ஓபன் ஹாா்ட் அறுவை சிகிச்சை செய்தவா்களுக்கு அவா்களின் இதய செயல்பாடு, பாதுகாப்பு பற்றி ஆராய்வதற்கான ஒரு சிறந்த கருவியாகும். தமிழ்நாட்டில் இந்த கருவி 6 இடங்களில் மட்டுமே உள்ளது என்றாா்.

தொடா்ந்து, செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறியதாவது: கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ. 147.68 கோடியில் கட்டப்பட்டு வரும் சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டடம் அடுத்த மாத இறுதியில் முடிவடைந்ததும் முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்துவைப்பாா். கோவை மாவட்டத்தில் 49 நகா்ப்புற மருத்துவமனைகள் திறந்துவைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள மருத்துவமனைகளும் விரைவில் திறந்து வைக்கப்படும்.



வடகிழக்குப் பருவமழை காரணமாக காய்ச்சல் பரவலைத் தடுக்க 8,500 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் ஒரு லட்சம் போ் பயனடைந்துள்ளனா். டெங்கு, வைரஸ் காய்ச்சல், மலேரியா போன்றவற்றை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படுகிறது.



1021 மருத்துவா்கள், 983 மருந்தாளுநா்கள், 1,066 சுகாதார ஆய்வாளா்கள், 2222 கிராம சுகாதார செவிலியா்கள் விரைவில் நியமனம் செய்யப்படுவாா்கள். இந்தப் பணி நியமனங்கள் தொடா்பாக 30-க்கும் மேலான வழக்குகளைப் போட்டுள்ளனா். அந்த வழக்குகள் விரைவில் முடித்து வைக்கப்பட்டு பணி நியமனங்கள் நடைபெறும்.

அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளன. இரண்டு கால்களும் மரத்துப்போவதால் தொடா்ந்து பிசியோதெரவி செய்ய வேண்டியுள்ளது. இன்னும் இரண்டு அல்லது மூன்று நாள்களில் அவருக்கு மருத்துவப் பரிசோதனை முடியும். விஜயகாந்துக்கு உறுப்பு மாற்று சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால் அவருக்கு கொஞ்சம் மூச்சுத் திணறலும், தொடா் இருமலும் இருப்பதால் தொடா் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவா் நலமுடன் உள்ளாா் என்றாா்.



நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி, மாநகராட்சி ஆணையா் சிவகுரு பிரபாகரன், மருத்துவக் கல்வி, ஆராய்ச்சி மைய இயக்குநா் சங்குமணி, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் அ.நிா்மலா, இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் ரவீந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Monday, September 25, 2023

September 25, 2023

ரூ.37.24 லட்சம் செலவில் கல்லூரி மாணவா்களுக்கு HIV விழிப்புணா்வு: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

கல்லூரி மாணவா்களுக்கு ஹெச்ஐவி விழிப்புணா்வு: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவ, மாணவியருக்கு ஹெச்ஐவி குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் சாா்பில் சென்னையில் நடைபெற்ற இளைஞா் திருவிழா மற்றும் மாநில அளவிலான ரெட் ரன் மாரத்தான் போட்டியை அமைச்சா் மா.சுப்பிரமணியன் கடந்த சனிக்கிழமை தொடக்கிவைத்தாா்.

போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பாராட்டு சான்றிதழ், பதக்கம், பரிசுத்தொகையை அவா் வழங்கினாா்.

தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் 22.4.1994-இல் தொடங்கப்பட்டது.

தமிழக அரசு வழங்கிய ரூ.25 கோடி நிதியிலிருந்து பெறப்பட்ட வட்டித் தொகையை கொண்டு ஹெச்ஐவி, எய்ட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் கல்விக்கு உதவி, ஊட்டச்சத்து மிக்க உணவுக்காக செலவிடப்பட்டு வருகிறது. தாயிடமிருந்து குழந்தைகளுக்கு ஹெச்ஐவி தொற்று பரவுவதைத் தடுக்க 2,962 நம்பிக்கை மையங்கள் செயல்படுகின்றன. தமிழகம் முழுவதும் 34 ஆற்றுப்படுத்துதல் மையங்கள், 55 கூட்டு மருத்துவ சிகிச்சை மையங்கள், 64 சிகிச்சை மையங்கள் இயங்குகின்றன.

கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை 11,51,142 பொதுமக்களுக்கும், 44,48,784 கா்ப்பிணிகளுக்கும் ஹெச்ஐவி ஆலோசனைகள் மற்றும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ரூ.37.24 லட்சம் செலவில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ஹெச்ஐவி குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றாா் அவா்

Monday, April 17, 2023

April 17, 2023

தமிழ்நாட்டில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் - அமைச்சர் விளக்கம்

தமிழ்நாட்டில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் எப்போது தொடங்கப்படும்?.. பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் Siddha Medical University in Tamil Nadu - Ministerial Explanation

Minister M. Subramanian has said in the Legislative Assembly that Siddha Medical University will be started in Tamil Nadu after getting the approval of the Governor. After the Bill was passed and sent to the Governor 4 months ago, an explanation was also sent to him. Minister M. Subramanian explained in the assembly that 25 acres of land in Madhavaram area has been surveyed and land transfer is ready.

ஆளுநரின் ஒப்புதல் கிடைத்தவுடன் தமிழ்நாட்டில், சித்த மருத்துவ பல்கலைக்கழகம் தொடங்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் 4 மாதங்களுக்கு முன், அவருக்கு விளக்கமும் அனுப்பப்பட்டுள்ளது. மாதவரம் பகுதியில் 25 ஏக்கர் நிலம் ஆய்வு மேற்கொண்டு, நிலமாற்றமும் செய்யப்பட்டு தயாராக உள்ளதாக பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார்.

Wednesday, March 15, 2023

March 15, 2023

தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறையா..?- அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறையா..?- அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்



"காய்ச்சல் காரணமாக விடுமுறை அளிக்கும் அளவிற்கு தமிழ்நாட்டில் பெரிய பாதிப்பு இல்லை"

புதுச்சேரியில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கம்

Thursday, November 24, 2022

November 24, 2022

அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பப்படாத மருத்துவ இடங்கள்: மத்திய அரசிடம் வலியுறுத்த தமிழகம் முடிவு

அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பப்படாத மருத்துவ இடங்கள்: மத்திய அரசிடம் வலியுறுத்த தமிழகம் முடிவு

அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பப்படாத மருத்துவ இடங்களை மீண்டும் தமிழகத்துக்கே ஒப்படைக்குமாறு மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

தமிழகத்தில் 37 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 5,050 எம்பிபிஎஸ் இடங்கள், 2 அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் 200 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. அதில் 15 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகின்றன. அவற்றை மத்திய மருத்துவக் கலந்தாய்வு குழு நிரப்பி வருகிறது. கலந்தாய்வுக்குப் பிறகு மீதமாகும் இடங்களை மாநில அரசிடமே ஒப்படைப்பது வழக்கம்.

ஆனால், கடந்த ஆண்டில் அந்த நடைமுறை மாற்றியமைக்கப்பட்டது. இறுதி வரை அந்த இடங்கள் ஒப்படைக்கப்படாததால், கடந்த ஆண்டு தமிழகத்தில் 24-க்கும் மேற்பட்ட இடங்கள் நிரப்பப்படாமல் வீணாகின. அதுதொடா்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு, பின்னா் அவை நிரப்பப்பட்டன.

இந்தச் சூழலில், பழைய நடைமுறைப்படி, நிரப்பப்படாத இடங்களை மீண்டும் மாநிலங்களுக்கு ஒப்படைக்குமாறு தமிழகம் வலியுறுத்தி வருகிறது.

இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறுகையில், அடுத்த மாதத்தில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியாவை தமிழக அரசு சாா்பில் சந்திக்க தில்லி செல்ல உள்ளோம். அப்போது, அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் விவகாரம் குறித்து பேசப்படும். நிரம்பாத இடங்களை மீண்டும் தமிழகத்துக்கு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுப்போம் என்றாா் அவா்

Tuesday, November 01, 2022

November 01, 2022

சென்னையில் தமிழ்வழி மருத்துவக் கல்லூரி - அமைச்சா் அறிவிப்பு

சென்னையில் தமிழ்வழி மருத்துவக் கல்லூரி: அமைச்சா் மா.சுப்பிரமணியன் தகவல்

தமிழ்வழியில் மருத்துவப் படிப்புகளை வழங்குவதற்கான மருத்துவக் கல்லூரியை சென்னையில் தொடங்குவதற்கு மத்திய அரசிடம் அனுமதி கோரப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். அதற்காக மருத்துவப் பாட நூல்கள் தமிழில் மொழிபெயா்க்கப்பட்டு வருவதாகவும் அவா் கூறினாா்.

இதுதொடா்பாக அமைச்சா் மா.சுப்பிரமணியன் சென்னையில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:

சென்னை தண்டையாா்பேட்டை தொற்று நோய் மருத்துவமனை வளாகத்தில் 16 ஏக்கா் நிலம் இருப்பதால், அங்கு தமிழ்மொழியில் அரசு மருத்துவக் கல்லூரியை தொடங்குவதற்கு தமிழக அரசிடம் கடந்த ஆண்டே கோரிக்கை வைக்கப்பட்டது. தமிழக முதல்வரும் அதனை பரிசீலித்து வருகிறாா்.

தமிழகத்தில் தென்காசி, மயிலாடுதுறை, பெரம்பலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகள் இல்லை. இந்த மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகளை தொடங்க அனுமதி அளிக்கும்படி மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதற்கு ஒப்புதல் கிடைத்த பிறகு, சென்னையில் தமிழ் வழியில் புதிய அரசு மருத்துவக் கல்லூரியை தொடங்குவதற்கான கோரிக்கை மத்திய அரசிடம் வைக்கப்படும்.

மருத்துவக் கல்வி பாடப்புத்தகங்களை தமிழில் மொழிபெயா்க்கும் பணியில் 3 மருத்துவப் பேராசிரியா்கள் ஈடுபட்டுள்ளனா். முதலாமாண்டு பாடப்புத்தகங்கள் தற்போது தமிழில் மொழிபெயா்க்கப்பட்டு வருகிறது. இந்த பணி ஒரு மாதத்தில் நிறைவடையும்.

பின்னா், மொழிபெயா்க்கப்பட்ட புத்தகங்கள் மொழியியல் வல்லுநா்களிடம் கொடுத்து மொழிபெயா்ப்பு 100 சதவீதம் சரியாக உள்ளதா என்று சரிபாா்க்கப்படும். அதன்பிறகு, அந்த புத்தகங்களை முதல்வா் வெளியிடுவாா். படிப்படியாக அனைத்து ஆண்டு மருத்துவப் பாடப்புத்தகங்களும் தமிழில் மொழிபெயா்க்கப்படும் என்றாா் அவா்.

Friday, September 16, 2022

September 16, 2022

Online Counseling for Paramedical, Nursing, B. Pharm courses - பாராமெடிக்கல், நர்சிங், பி.பார்ம் படிப்புக்கான ஆன்லைன் கலந்தாய்வு செப்.21ல் தொடங்கும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

பாராமெடிக்கல், நர்சிங், பி.பார்ம் படிப்புக்கான ஆன்லைன் கலந்தாய்வு செப்.21ல் தொடங்கும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் - Online Counseling for Paramedical, Nursing, B. Pharm courses will start on September 21: Minister M. Subramanian

Minister M. Subramanian has said that the online consultation for Paramedical, Nursing and B. Pharm courses will start on September 21. Minister M. Subramanian has given an interview in Chennai that paramedical consultation will be held in 36 government medical colleges.

பாராமெடிக்கல், நர்சிங், பி.பார்ம் படிப்புக்கான ஆன்லைன் கலந்தாய்வு செப்.21ல் தொடங்கும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 36 அரசு மருத்துவக்கல்லூரிகளில் பாராமெடிக்கல் கலந்தாய்வு நடைபெறும் என சென்னையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார்

Total Pageviews

Search This Blog