Breaking

Showing posts with label Madurai Kamarasar University. Show all posts
Showing posts with label Madurai Kamarasar University. Show all posts

Tuesday, July 12, 2022

July 12, 2022

"மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்கிறோம்" - அமைச்சர் பொன்முடி பரபரப்பு பேட்டி

சென்னையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறுகையில், மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்கிறோம். பட்டமளிப்பு விழாவில் மாணவர்களிடம் அரசியலை புகுத்த கவர்னர் முயற்சிக்கிறார் என சந்தேகம் எழுந்துள்ளது. பட்டமளிப்பு விழா தொடர்பாக அரசிடம் எதுவும் ஆலோசிக்கவில்லை. மதுரை காமராஜர் பல்கலை. பட்டமளிப்பு விழா தொடர்பாக என்னிடம் எதுவும் தெரிவிக்கவில்லை; அரசை ஆலோசிக்காமல் காமராஜர் பல்கலை. பட்டமளிப்பு விழா அறிவிப்பு வெளியாகி உள்ளது. மத்திய அரசால் நியமிக்கப்படுவதால் மத்தியில் ஆளும் கட்சிக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. மாநில அரசின் கொள்கைகளை, திட்டங்களை நிறைவேற்றுவதே கவர்னரின் கடமை. கவர்னரின் செயல்பாடுகள் பாஜகவின் பிரசாரமாக உள்ளது. இந்திய நாட்டின் வரலாற்றை முதலில் கவர்னர் படிக்க வேண்டும். கவர்னர் எந்த '-ism' பின்பற்றுவேராக இருந்தாலும் 'Humanism' என்ற மனிதாபிமானத்தை பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Thursday, June 16, 2022

June 16, 2022

மதுரை காமராசர் பல்கலைக்கழகம் - செய்தி அறிக்கை

மதுரை காமராசர் பல்கலைக்கழகம்

செய்தி அறிக்கை

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முதுகலை உயிர்தொழில் நுட்பவியல்

என்னும் (M.Sc. Biotechnology) பட்டப்படிப்பு கடந்த 1985ம் ஆண்டு முதல் ஒன்றிய அரசின் அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகத்தின்கீழ் இயங்கி வரும் உயிர் தொழில் நுட்பத்துறையின் உதவியுடன் நடத்தப்பெற்று வருகின்றது. இப்பட்ட மேற்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை ஒன்றிய அரசின் இடஒதுக்கீட்டு முறையினைப் பின்பற்றி, ஒன்றிய அரசின் உயிர்தொழில்நுட்பத்துறை தற்பொழுது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. மதுரை காமராசர் பல்கலைக்கழகம், ஒரு மாநிலப் பல்கலைக்கழகம் என்பதனால், மேற்கண்ட மேற்படிப்பிற்கான இடஒதுக்கீட்டு விகிதாச்சாரம் தமிழக அரசின் இட ஒதுக்கீட்டு விதியின்படிதான் (69%) மாணவர் சேர்க்கை நடத்தப்பெற வேண்டும் எனும் கருத்துருவை வலியுறுத்தி மதுரை காமராசர் பலகலைக்கழகத்தின் துணைவேந்தர் ஒன்றிய அரசின் அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகத்தின்கீழ் இயங்கிவரும் உயிர் தொழில்நுட்பத்துறையின் செயலருக்கு ஒரு வலியுறுத்தல் கடிதத்தை 14.06.2022 அன்று சமர்ப்பித்துள்ளார்.

எனவே, முதுகலை உயிர் தொழில்நுட்பவியல் பட்ட மேற்படிப்பிற்கான, மாணவர் சேர்க்கை, தமிழக அரசின் இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றி கணக்கீடு செய்தால் அது கீழ்க்காணும் வகையில் அமையும்: அனுமதிக்கப்பட்ட மொத்த மாணவர் சேர்க்கை இடங்கள் : 30 இக்கல்வியாண்டில் (2022-2023), மேற்கண்ட மேற்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை மேற்குறிப்பிட்டுள்ள தமிழக அரசின் இடஒதுக்கீட்டு முறையைப் பின்பற்றியே நடத்தப்படும் என இதன் வாயிலாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Total Pageviews

Search This Blog