Breaking

Showing posts with label LIC schemes. Show all posts
Showing posts with label LIC schemes. Show all posts

Saturday, October 01, 2022

October 01, 2022

இந்த திட்டத்தில் முதலீடு செய்தால் வெறும் 3 ஆண்டுகளில் ரூ.10 லட்சம் கிடைக்கும்! - If you invest in this scheme you will get Rs.10 lakhs in just 3 years!

இந்த திட்டத்தில் முதலீடு செய்தால் வெறும் 3 ஆண்டுகளில் ரூ.10 லட்சம் கிடைக்கும்! - If you invest in this scheme you will get Rs.10 lakhs in just 3 years!

எஸ்பிஐயில் 3 வருட எஃப்டிக்கு 6.10 சதவிகிதம் வட்டி கிடைக்கிறது, அதேசமயம் தபால் அலுவலகத்தில் 3 வருட டெபாசிட்டுக்கு 6.7% வட்டி கிடைக்கிறது.

வங்கிகளில் முதலீடு செய்வது உங்களுக்கு சிறந்த பாதுகாப்பை தருகிறது.

தபால் நிலையங்கள் அதிக வட்டியை தருகின்றன.

Unsav திட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு 6.60% வட்டி வழங்கப்படுகிறது.



பெரும்பாலான மக்கள் தங்களின் எதிர்கால நிதி தேவைகளை பூர்த்தி செய்திகொள்ள பல்வேறு முதலீடு திட்டங்களை தேர்வு செய்கின்றனர். இதற்கென்றே பல தனியார் வங்கிகள், அரசு வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் தபால் நிலையங்கள் பல்வேறு முதலீட்டு திட்டங்களை வழங்கி வருகின்றன. ஆனால் இதில் எந்த நிறுவனத்தில் தங்களது பணத்தை முதலீடு செய்வது என்கிற குழப்பம் மக்களுக்கு இருந்து வருகிறது. முதலீடு செய்யும் பணம் பாதுகாப்பானதாக இருக்குமா, முதலீட்டின் மூலம் நிலையான வருமானம் கிடைக்குமா என பல கேள்விகள் முதலீட்டாளரின் மனதுக்குள் ஓடிக்கொண்டே இருக்கிறது. இப்போது வங்கிகளில் முதலீடு செய்வது உங்களுக்கு சிறந்த பாதுகாப்பையும், பலனையும் தருமா அல்லது தபால் நிலையங்களில் முதலீடு செய்வது உங்களுக்கு பாதுகாப்பையும், பலனையும் தருமா என்பது பற்றி விரிவாக காண்போம்.


ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும் பணம் பிக்ஸட் டெபாசிட் என்றும், தபால் அலுவலகத்தில் டெபாசிட் செய்யப்படும் பணம் போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட் என்றும் அழைக்கப்படுகிறது. 1 முதல் 5 வருடங்கள் வரை போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட் கணக்குகளில் பணத்தை டெபாசிட் செய்யலாம், இங்கு 1 முதல் 3 ஆண்டுகள் வரையிலான டெபாசிட்டுக்கு 5.5% வட்டி கிடைக்கும், அதேசமயம் 3 வருட முதலீட்டுக்கு 6.7% வட்டி வழங்கப்படுகிறது. தபால் அலுவலகத்தில் ரூ. 8,35,000 முதலீடு செய்தால், 3 ஆண்டுகளுக்குப் பிறகு உங்களுக்கு ரூ.10,19,000 கிடைக்கும். இதில் ரூ.1,84,194 வட்டி சேர்த்து மொத்தம் ரூ.10,19,194 கிடைக்கும்.

எஸ்பிஐ அறிமுகப்படுத்தியுள்ள Unsav திட்டத்தில் அக்டோபர் 28, 2022 வரை கணக்கைத் திறக்கலாம். இந்த திட்டத்தில் முதலீடு செய்யும் பணத்திற்கு வருடத்திற்கு 6.10% வட்டி வழங்கப்படுகிறது, அதுவே மூத்த குடிமக்களுக்கு 6.60% வட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் நீங்கள் ரூ.8,35,000 முதலீடு செய்தால், 3 ஆண்டுகளுக்கு பிறகு ரூ.10 லட்சத்துக்கு மேல் கிடைக்கும். இதில் ரூ.1,66,000 வட்டி சேர்த்து மொத்தம் ரூ.10,01,296 கிடைக்கும். எஸ்பிஐயில் 3 வருட எஃப்டிக்கு 6.10 சதவிகிதம் வட்டியும், தபால் அலுவலக டெபாசிட்டுக்கு 6.7% வட்டியும் கிடைக்கிறது. இந்த இரண்டையும் வைத்து பார்க்கையில் எஸ்பிஐ வங்கி திட்டத்தில் முதலீடு செய்வதை காட்டிலும் தபால் அலுவலக திட்டத்தில் முதலீடு செய்வது சிறந்ததாக தெரிகிறது.

Monday, August 22, 2022

August 22, 2022

வெறும் ரூ.29 வீதம் முதலீடு; ரூ 4 லட்சம் ரிட்டர்ன்: இந்த திட்டம் தெரியுமா?

ரூ.2 லட்சத்து 14 ஆயிரத்து 696 முதலீடு செய்வீர்கள். இந்தத் தொகை முதிர்ச்சியடையும்போது உங்களுக்கு ரூ.3 லட்சத்து 97 ஆயிரம் கிடைக்கும்

எதிர்காலத்திற்காக முதலீடு செய்வது எப்போதுமே நல்ல யோசனையாகும். பொதுவாக இந்திய மக்கள் பாதுகாப்பான திட்டங்களில் முதலீடு செய்வதை பெரிதும் விரும்புகின்றனர்.

எல்ஐசி பாலிசிகளில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தும், தனிநபர் ஆயுள் காப்பீட்டுத் திட்டமான எல்ஐசி ஆதார் ஷீலா திட்டம் ஒரு வரப்பிரசாதமாக பார்க்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தில் ஒவ்வொரு நாளும் ரூ.29 முதலீடு செய்தால், இந்தக் திட்டத்தின் கீழ் ரூ.4 லட்சத்தைப் பெறலாம். இந்தத் திட்டம் பாதுகாப்பு மற்றும் சேமிப்பை ஒருங்கிணைக்கிறது. பாலிசிதாரரின் முதிர்ச்சிக்கு முன்னதாக பாலிசிதாரரின் இறப்பு உள்ளிட்ட துரதிர்ஷ்டவசமான நிகழ்வின் போதும், பாலிசிதாரரின் குடும்பத்திற்கு நிதியுதவி அளிக்கப்படும்.

கூடுதலாக, இந்தத் திட்டத்தில் கடன் வசதியும் உள்ளது. எல்ஐசி ஆதார் ஷீலா திட்டத்தின் கீழ் அதிகபட்ச அடிப்படை காப்பீட்டுத் தொகை ரூ. 3 லட்சத்தை தாண்டக்கூடாது, இந்த பாலிசியின் கீழ் குறைந்தபட்ச அடிப்படை காப்பீட்டுத் தொகை ரூ.75,000 ஆகும்.

எல்ஐசி ஆதார் ஷீலா பாலிசியில் ஒருவர் முதலீடு செய்யக்கூடிய அதிகபட்ச தொகை ரூ. 3 லட்சம் என்பதை இது குறிக்கிறது. இந்த பாலிசியின் முதிர்வு காலம் பத்து முதல் இருபது ஆண்டுகள் வரை இருக்கலாம்.

பிரீமியத்தை ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு காலாண்டிலும், ஒவ்வொரு அரையாண்டு அல்லது ஒவ்வொரு வருடமும் செலுத்தலாம். இந்தத் திட்டத்தில் தினந்தோறும் ரூ.29 வீதம் மாதம் ரூ.1000 முதலீடு செய்ய வேண்டும். அதாவது ஆண்டுக்கு தோராயமாக ரூ.10,959 செலுத்துவீர்கள்.

அந்த வகையில் ஒரு 20 ஆண்டுகள் முதலீடு செய்துள்ளீர்கள் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் 20 ஆண்டுக்கு ரூ.2 லட்சத்து 14 ஆயிரத்து 696 முதலீடு செய்வீர்கள். இந்தத் தொகை முதிர்ச்சியடையும்போது உங்களுக்கு ரூ.3 லட்சத்து 97 ஆயிரம் கிடைக்கும். இந்தத் திட்டத்தில் 8 வயது முதல் 55 வயது வரை உள்ள அனைத்துப் பெண்களுக்கும் முதலீடு செய்யலாம்.

Friday, August 19, 2022

August 19, 2022

காலாவதியான பாலிசிகளை புதுப்பிக்க LIC அறிமுகப்படுத்தும் புதிய திட்டம்

காலாவதியான பாலிசிகளை புதுப்பிக்க எல்ஐசி அறிமுகப்படுத்தும் புதிய திட்டம்

காலாவதியாகிவிட்ட பாலிசிகளை மீண்டும் புதுப்பித்துக் கொள்வதற்கான திட்டத்தை எல்ஐசி அறிமுகப்படுத்தியுள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பிரீமியம் தொகை செலுத்தாமல் காலாவதியான பாலிசிகளை வாடிக்கையாளா்கள் மீண்டும் புதுப்பித்துக் கொள்வதற்கான திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது.

புதன்கிழமை (ஆக. 17) தொடங்கிய இந்தத் திட்டம், அக்டோபா் 21-ஆம் தேதி வரை அமலில் இருக்கும்.

இந்த திட்டத்தின் கீழ், கடைசி பிரீமியம் செலுத்தி 5 ஆண்டுகள் வரை ஆன பாலிசிகளை வாடிக்கையாளா்கள் புதுப்பித்துக்கொள்ளலாம். யூலிப் பாலிசிகளைத் தவிர அனைத்து பாலிசிகளையும் இந்தத் திட்டத்தின்கீழ் புதுப்பித்துக்கொள்ளலாம்.

ரூ.3 லட்சம் வரையிலான நிலுவைத் தொகை இருந்தால் 25 சதவீதமும் அதற்கு மேல் நிலுவைத் தொகை இருந்தால் 30 சதவீதமும் தாமதக் கட்டணம் வசூலிக்கப்படும்.

எனினும், நிலுவைத் தொகையைப் பொருத்து அந்தக் கட்டணத்தில் ரூ.2,500 முதல் ரூ.3,500 வரை தள்ளுபடி செய்யப்படும். மைக்ரோ காப்பீட்டு பாலிசிகளுக்கு தாதமக் கட்டணம் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Total Pageviews

Search This Blog