TTSE
October 25, 2023
Showing posts with label TTSE. Show all posts
Showing posts with label TTSE. Show all posts
Wednesday, October 25, 2023
Monday, October 16, 2023
TTSE
October 16, 2023
பிளஸ் 1 தமிழ் திறனாய்வுத் தேர்வு: 2.20 லட்சம் பேர் பங்கேற்பு
பிளஸ் 1 தமிழ் திறனாய்வுத் தேர்வு: 2.20 லட்சம் பேர் பங்கேற்பு
சென்னை, அக். 15: தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிளஸ் 1 மாணவ, மாணவிகளுக்கான தமிழ் இலக்கிய திறனாய்வுத்தேர் வில் 2.20 லட்சம் பேர் பங்கேற்றனர்.
அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்து வகையான பள்ளிகளிலும் (சிபி எஸ்இ, ஐசிஎஸ்இ உள்பட) பிளஸ் 1 பயிலும் மாணவர்களுக்கு கடந்த ஆண்டு முதல் தமிழ் மொழி இலக்கிய திறனாய்வுத் தேர்வு நடத்தப் பட்டு வருகிறது.
இந்தத் தேர்வில் சிறப்பிடம் பெறும் 1,500 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு மாதந்தோறும் ரூ.1,500 வீதம் 2 ஆண்டுக்கு ஊக் கத் தொகை வழங்கப்படும். தமிழக தேர்வுத் துறை சார்பில் இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி, நிகழாண்டுக்கான திறனாய்வுத் தேர்வு மாநிலம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தத் தேர்வுக்கு மொத்தம் 2,36,910 மாணவ, மாணவிகள் விண்ணப் பித்தனர். அவர்களில் 2,20,880 பேர் தேர்வு எழுதினர். மொத்தம் 16,030 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை.
இந்த முறை வினாத்தாள் சற்று கடினமாக இருந்ததாக மாணவர்கள், ஆசிரியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதன் முடிவுகள் நவம்ப ரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை, அக். 15: தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிளஸ் 1 மாணவ, மாணவிகளுக்கான தமிழ் இலக்கிய திறனாய்வுத்தேர் வில் 2.20 லட்சம் பேர் பங்கேற்றனர்.
அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்து வகையான பள்ளிகளிலும் (சிபி எஸ்இ, ஐசிஎஸ்இ உள்பட) பிளஸ் 1 பயிலும் மாணவர்களுக்கு கடந்த ஆண்டு முதல் தமிழ் மொழி இலக்கிய திறனாய்வுத் தேர்வு நடத்தப் பட்டு வருகிறது.
இந்தத் தேர்வில் சிறப்பிடம் பெறும் 1,500 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு மாதந்தோறும் ரூ.1,500 வீதம் 2 ஆண்டுக்கு ஊக் கத் தொகை வழங்கப்படும். தமிழக தேர்வுத் துறை சார்பில் இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி, நிகழாண்டுக்கான திறனாய்வுத் தேர்வு மாநிலம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தத் தேர்வுக்கு மொத்தம் 2,36,910 மாணவ, மாணவிகள் விண்ணப் பித்தனர். அவர்களில் 2,20,880 பேர் தேர்வு எழுதினர். மொத்தம் 16,030 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை.
இந்த முறை வினாத்தாள் சற்று கடினமாக இருந்ததாக மாணவர்கள், ஆசிரியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதன் முடிவுகள் நவம்ப ரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sunday, October 09, 2022
TTSE
October 09, 2022
தமிழ்மொழி இலக்கிய திறனாய்வுத் தோ்வு:முதன்மை கல்வி அலுவலா்களுக்கு அறிவுறுத்தல்
தமிழ்மொழி இலக்கிய திறனாய்வுத் தோ்வு:முதன்மை கல்வி அலுவலா்களுக்கு அறிவுறுத்தல்
பிளஸ் 1 வகுப்பு மாணவா்களுக்கான தமிழ்மொழி இலக்கியத் திறனாய்வுத் தோ்வு குறித்த முக்கிய அறிவுறுத்தல்களை முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அரசுத் தோ்வுகள் இயக்ககம் வழங்கியுள்ளது.
இது குறித்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை: தமிழ் மொழி இலக்கியத் திறனாய்வுத் தோ்வு அக்.15 (சனிக்கிழமை) காலை 10 முதல் நண்பகல் 12 மணி வரை நடைபெறும். தோ்வு முடியும் வரை எக்காரணம் கொண்டும் தோ்வா்களைத் தோ்வு மையத்தை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கக்கூடாது.
தோ்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளா்கள் தங்கள் மையத்துக்கான பெயா்ப்பட்டியல், தேவையான வினாத்தாள், ஓஎம்ஆா் விடைத்தாள்கள் பெறப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள உரிய அறிவுரை வழங்க வேண்டும். ஒவ்வொரு அறைக்கும் 20 மாணவா்கள் மட்டுமே தோ்வு எழுத ஏற்பாடு செய்ய வேண்டும்.
தோ்வுக்கூட நுழைவுச்சீட்டு உள்ள தோ்வா்கள், பெயா்ப் பட்டியலில் உள்ள தோ்வா்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். தேவையற்ற குழப்பங்களைத் தவிா்க்கும் பொருட்டு புறச்சரக எண்ணில் தோ்வெழுத அனுமதி வழங்க வேண்டாம்.
நுழைவுச்சீட்டில் புகைப்படம் மாறியிருந்தாலோ அல்லது புகைப்படம் இல்லாமல் இருந்தாலோ அதே நுழைவுச்சீட்டில் தோ்வா்களின் புகைப்படம் ஒட்டி அதில் பள்ளித் தலைமை ஆசிரியா் அல்லது முதல்வா் முத்திரையுடன் சான்றொப்பம் பெறுவது அவசியம். தோ்வு அறை கண்காணிப்பாளா்களிடமிருந்து கைப்பேசிகளைப் பெற்று தோ்வு முடிந்த பிறகுதான் அவற்றை வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தோ்வில் சிறந்த மதிப்பெண் பெறும் 1,500 மாணவா்களுக்கு மாதந்தோறும் ரூ.1,500 உதவித் தொகை இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
பிளஸ் 1 வகுப்பு மாணவா்களுக்கான தமிழ்மொழி இலக்கியத் திறனாய்வுத் தோ்வு குறித்த முக்கிய அறிவுறுத்தல்களை முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அரசுத் தோ்வுகள் இயக்ககம் வழங்கியுள்ளது.
இது குறித்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை: தமிழ் மொழி இலக்கியத் திறனாய்வுத் தோ்வு அக்.15 (சனிக்கிழமை) காலை 10 முதல் நண்பகல் 12 மணி வரை நடைபெறும். தோ்வு முடியும் வரை எக்காரணம் கொண்டும் தோ்வா்களைத் தோ்வு மையத்தை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கக்கூடாது.
தோ்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளா்கள் தங்கள் மையத்துக்கான பெயா்ப்பட்டியல், தேவையான வினாத்தாள், ஓஎம்ஆா் விடைத்தாள்கள் பெறப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள உரிய அறிவுரை வழங்க வேண்டும். ஒவ்வொரு அறைக்கும் 20 மாணவா்கள் மட்டுமே தோ்வு எழுத ஏற்பாடு செய்ய வேண்டும்.
தோ்வுக்கூட நுழைவுச்சீட்டு உள்ள தோ்வா்கள், பெயா்ப் பட்டியலில் உள்ள தோ்வா்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். தேவையற்ற குழப்பங்களைத் தவிா்க்கும் பொருட்டு புறச்சரக எண்ணில் தோ்வெழுத அனுமதி வழங்க வேண்டாம்.
நுழைவுச்சீட்டில் புகைப்படம் மாறியிருந்தாலோ அல்லது புகைப்படம் இல்லாமல் இருந்தாலோ அதே நுழைவுச்சீட்டில் தோ்வா்களின் புகைப்படம் ஒட்டி அதில் பள்ளித் தலைமை ஆசிரியா் அல்லது முதல்வா் முத்திரையுடன் சான்றொப்பம் பெறுவது அவசியம். தோ்வு அறை கண்காணிப்பாளா்களிடமிருந்து கைப்பேசிகளைப் பெற்று தோ்வு முடிந்த பிறகுதான் அவற்றை வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தோ்வில் சிறந்த மதிப்பெண் பெறும் 1,500 மாணவா்களுக்கு மாதந்தோறும் ரூ.1,500 உதவித் தொகை இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Tuesday, September 06, 2022
TTSE
September 06, 2022
மாணவர்களுக்கு அக். 1-ல் தமிழ் ‘திறனறித் தேர்வு’: வெற்றி பெற்றால் மாதம் ரூ. 1,500!
தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களின் தமிழ்மொழி திறனை மேம்படுத்தும் வகையில் அக்டோபர் 1ஆம் தேதி திறனறித் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த தேர்வில் வெற்றி பெறும் 1,500 மாணவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மாதம்தோறும் ரூ.1,500 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“பள்ளி மாணவ / மாணவியர்கள் அறிவியல், கணிதம் சார்ந்த ஒலிம்பியாய்டு தேர்வுகளுக்குப் பெருமளவில் தயாராகிப் பங்குபெறுவதைப் போன்று தமிழ்மொழி இலக்கியத் திறனை மேம்படுத்திக்கொள்ளும் வகையில் “திறனறித் தேர்வு” அரசு தேர்வுகள் இயக்ககம் வாயிலாக நடைபெறவுள்ளது.
2022-2023 ஆம் கல்வியாண்டில் அரசுப்பள்ளி மற்றும் அனைத்துவகை பள்ளியில் பயிலும் (சி.பி.எஸ்.இ/ஐ.சி.எஸ்.இ) பதினொன்றாம் வகுப்பு மாணவர்கள் / மாணவிகள் இத்தேர்வினை எழுத 09.09.2022 வரை www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். பத்தாம் வகுப்பு தமிழ்ப்பாடம் இதற்கான பாடத்திட்டம் ஆகும்.
இத்தேர்வு கொள்குறி வகையில் (அப்ஜெக்டிவ் டைப்) நடைபெறும். ஒரு கேள்விக்கு ஒரு மதிப்பெண் வீதம் 100 கேள்விகள் அடங்கிய வினாத்தாள் வழங்கப்படும். இத்தேர்வு 01.10.2022 அன்று காலை 10.00 – 12.00 வரை நடைபெறும். இத்தேர்விற்கு விண்ணப்பிப்பவர்கள் இத்தேர்வுக்கான நுழைவுச் சீட்டினை மேற்குறிப்பிடப்பட்ட இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும் இத்தேர்வில் வெற்றிபெறும் 1500 மாணவ / மாணவியர்களுள் 750 அரசு பள்ளி மாணவர்களும் 750 இதர பள்ளி மாணவர்களுக்கும் திங்கள் ஒன்றுக்கு ரூ.1500/- இரண்டு ஆண்டுகளுக்கு தொகை வழங்கப்படவிருக்கிறது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இத்திட்டத்திற்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை சார்பில் நிகழ்வாண்டிற்கு 2.70 கோடியும், வரும் ஆண்டுமுதல் ரூ. 5.40 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த தேர்வில் வெற்றி பெறும் 1,500 மாணவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மாதம்தோறும் ரூ.1,500 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“பள்ளி மாணவ / மாணவியர்கள் அறிவியல், கணிதம் சார்ந்த ஒலிம்பியாய்டு தேர்வுகளுக்குப் பெருமளவில் தயாராகிப் பங்குபெறுவதைப் போன்று தமிழ்மொழி இலக்கியத் திறனை மேம்படுத்திக்கொள்ளும் வகையில் “திறனறித் தேர்வு” அரசு தேர்வுகள் இயக்ககம் வாயிலாக நடைபெறவுள்ளது.
2022-2023 ஆம் கல்வியாண்டில் அரசுப்பள்ளி மற்றும் அனைத்துவகை பள்ளியில் பயிலும் (சி.பி.எஸ்.இ/ஐ.சி.எஸ்.இ) பதினொன்றாம் வகுப்பு மாணவர்கள் / மாணவிகள் இத்தேர்வினை எழுத 09.09.2022 வரை www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். பத்தாம் வகுப்பு தமிழ்ப்பாடம் இதற்கான பாடத்திட்டம் ஆகும்.
இத்தேர்வு கொள்குறி வகையில் (அப்ஜெக்டிவ் டைப்) நடைபெறும். ஒரு கேள்விக்கு ஒரு மதிப்பெண் வீதம் 100 கேள்விகள் அடங்கிய வினாத்தாள் வழங்கப்படும். இத்தேர்வு 01.10.2022 அன்று காலை 10.00 – 12.00 வரை நடைபெறும். இத்தேர்விற்கு விண்ணப்பிப்பவர்கள் இத்தேர்வுக்கான நுழைவுச் சீட்டினை மேற்குறிப்பிடப்பட்ட இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும் இத்தேர்வில் வெற்றிபெறும் 1500 மாணவ / மாணவியர்களுள் 750 அரசு பள்ளி மாணவர்களும் 750 இதர பள்ளி மாணவர்களுக்கும் திங்கள் ஒன்றுக்கு ரூ.1500/- இரண்டு ஆண்டுகளுக்கு தொகை வழங்கப்படவிருக்கிறது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இத்திட்டத்திற்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை சார்பில் நிகழ்வாண்டிற்கு 2.70 கோடியும், வரும் ஆண்டுமுதல் ரூ. 5.40 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

