Breaking

Showing posts with label சென்னை ஐஐடி. Show all posts
Showing posts with label சென்னை ஐஐடி. Show all posts

Wednesday, August 10, 2022

August 10, 2022

ஒரே கல்வியாண்டில் அதிக எண்ணிக்கையிலான பணி நியமனம்; ஐஐடி மெட்ராஸ் சாதனை

ஒரே கல்வியாண்டில் அதிக எண்ணிக்கையிலான பணி நியமனங்களை பெற்று ஐஐடி மெட்ராஸ் சாதனை படைத்துள்ளது. சென்னையில் உள்ள ஐஐடி வளாக வேலைவாய்ப்புகள் வாயிலாக, ஒரே கல்வியாண்டில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிக எண்ணிக்கையிலான பணிநியமனங்கள் கிடைக்க செய்துள்ளது. 2021-22 கல்வியாண்டில் 380 நிறுவனங்களிடம் இருந்து 1,199 வேலைவாய்ப்புகள், கோடைகால உள்ளகப் பயிற்சியின் வாயிலாக 231 முன்வேலைவாய்ப்புகள் என மொத்தம் 1,430 வேலைவாய்ப்புகள் கிடைத்துள்ளன.

2018-19ம் கல்வியாண்டில் கிடைத்த 1,151 வேலைவாய்ப்புகளுடன் ஒப்பிடுகையில் இது முன்னெப்போதும் இல்லாத எண்ணிக்கையாகும். 14 நிறுவனங்களில் இருந்து பெறப்பட்ட 45 சர்வதேச வேலைவாய்ப்புகளும் இதில் அடங்கும். நடப்பு ஆண்டில் 61 எம்பிஏ மாணவர்களும் பணியமர்த்தப்பட்டு உள்ளதால், ஐஐடி மெட்ராஸின் மேலாண்மைக் கல்வித்துறை 100 விழுக்காடு வேலைவாய்ப்புக்கு வழிவகுத்துள்ளது. 2021-22ம் ஆண்டில் நடந்த வளாக வேலைவாய்ப்புகளை தேர்வு செய்தவர்களில் 80 விழுக்காடு மாணவர்கள் இதே ஆண்டில் பணிபுரிவதற்கு நியமனங்களை பெற்றுள்ளனர்.

Monday, August 08, 2022

August 08, 2022

ஐஐடியில் படித்த 80% மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு

இந்தாண்டு நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் ஐஐடி சென்னையில் படித்த மாணவர்களில் 1,199 பேருக்கு வேலை கிடைத்திருப்பதாக சென்னை ஐஐடி தகவல் தெரிவித்துள்ளது.



1959ஆம் ஆண்டு இந்திய அரசால் ஐஐடி சென்னை உருவாக்கப்பட்டது. 2021-2022 கேம்பஸ் பிளேஸ்மெண்டில் 80 சதவிகிதம் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.



இந்த வேலைவாய்ப்பில் 45 பணிகளுக்கான ஆணையை 14 சர்வதேச நிறுவனங்கள் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், 131 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் 199 பணி நியமனங்களையும் வழங்கியுள்ளது. 61 எம்பிஏ மாணவர்களுக்கு இதில் வேலை வாய்ப்பு கிடைத்தது. 100 சதவிகிதம் எம்பிஏ மாணவர்களுக்கு இந்தாண்டு வேலை வாய்ப்பு கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.



இந்த மாணவர்களின் சராசரி ஆண்டு வருமானம் ரூபாய் 21.48 லட்சம். இதில் ஒரு மாணவருக்கு அதிகபட்சமாக 250,000 டாலர் சம்பளத்துடன் வேலை வழங்கப்பட்டுள்ளது.



ஐஐடி சென்னை வேலைவாய்ப்பு ஆலேசகர் சி.எஸ். ஷங்கர் ராம், “இந்தாண்டு மாணவர்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தாண்டு வேலைவாய்ப்பு ஒரு புதிய சாதனை படைத்துள்ளது. ஐஐடி சென்னை சார்பாக தேர்வுசெய்த நிறுவனங்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறினார்.

Tuesday, August 02, 2022

August 02, 2022

சென்னை ஐஐடியில் புதிதாக 4 ஆண்டு படிப்பு அறிமுகம்

சென்னை ஐஐடியில் புதிதாக 4 ஆண்டு படிப்பு அறிமுகம்

சென்னை: கல்வி மற்றும் தொழில் துறையில் சிறந்த வாய்ப்புகளுக்கு வழி வகுக்கும் வகையில் 3 ஆண்டு படிப்பாக இருந்த பி.எஸ்.புரோகிராமிங் மற்றும் டேட்டா சயின்ஸ் பாடத்தை ஐஐடி மெட்ராஸ் தற்ேபாது 4 வருட படிப்பாக மாற்றியுள்ளது. சென்னை ஐஐடியில் பி.எஸ்சி. புரோகிராமிங் அண்ட் டேட்டா சயின்ஸ் என்ற 3 வருட படிப்பை, பி.எஸ். டேட்டா சயின்ஸ் அண்ட் அப்ளிகேஷன்ஸ் என மாற்றி 4 ஆண்டு பட்டப் படிப்பாக தற்போது அறிமுகப்படுத்தி உள்ளது. பி.எஸ். பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக, நிறுவனங்கள் அல்லது ஆராய்ச்சிக் கல்வி நிலையங்களில் மாணவர்கள் 8 மாத கால பணி பயிற்சியோ, ஆய்வுத் திட்டமோ மேற்கொள்ள முடியும். மாணவர்களுக்கு அவரவர் படிப்பிற்கு ஏற்ப சான்றிதழ், டிப்ளமோ, பட்டம் ஆகியவை வழங்கப்படுகின்றன. இதில், தற்போது 12ம் வகுப்பு படித்துவரும் மாணவர்களும் விண்ணப்பங்களை அனுப்பி மாணவர் சேர்க்கையை உறுதிசெய்து கொள்ளலாம். வயது வரம்பு ஏதும் இல்லை என்பதால் பத்தாம் வகுப்பில் ஆங்கிலம், கணிதம் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படும். பெருவாரியான தமிழக மாணவர்கள், அதற்கடுத்து மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேச மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என தற்போதுவரை 13,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த பாடத்திட்டத்தில் சேர்ந்துள்ளனர்.

இந்தியாவின் 111 நகரங்களில் உள்ள 115 தேர்வு மையங்களில் நேரடியாகத் தேர்வுகள் நடைபெறுகின்றன. ஐக்கிய அரபு அமீரகம் பஹ்ரைன், குவைத், இலங்கை ஆகிய நாடுகளிலும் தேர்வு மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. செப்டம்பர் 2022ல் ஆரம்பமாகும் டேட்டா சயின்ஸ் பாடத்திட்ட வகுப்புகளுக்கு விண்ணப்பிக்க வரும் 19ம் தேதி கடைசி நாளாகும். விருப்பமுள்ள மாணவர்கள் https://onlinedegree.itm.ac.in என்ற இணையமுகவரியில் விண்ணப்ப பதிவு செய்யலாம்.

Monday, August 01, 2022

August 01, 2022

சென்னை ஐஐடியில் பிஎஸ் பட்டப்படிப்பு: 10ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

இந்த பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக, நிறுவனங்கள் (அ) ஆராய்ச்சிக் கல்வி நிலையங்களில் மாணவர்கள் 8-மாத கால பணிப் பயிற்சியோ (apprenticeship), ஆய்வுத் திட்டமோ (project) மேற்கொள்ள முடியும்

சென்னை ஐஐடி தனது பி.எஸ்சி., புரோகிராமிங் அண்ட் டேட்டா சயின்ஸ் (B.Sc., in Programming and Data Science) பாடத்தை, நான்காண்டுப் பி.எஸ் பட்டப்படிப்பாக (BS in Data Science and Applications) அறிமுகப்படுத்தி உள்ளது. கடந்த 2020ம் ஆண்டு உலகின் முதல் இணையவழி (B.Sc) நிரலாக்கல், தரவு அறிவியலுக்கான இளநிலைப் பட்டப்படிப்பை சென்னை ஐஐடி தொடங்கியது. கேட் மதிப்பெண், வயது, அனுமதிக்கப்பட்ட இடங்கள் உள்ளிட்ட அனைத்து தடைகளையும் நீக்கி, தரமான உயர்கல்வியை படிக்க விரும்பும் அனைத்து மாணவர்களும் பயன்பெறும் வகையில் இந்த பட்டப்படிப்பைத் தொடரலாம். அதன்படி, 10ம்வகுப்பில் ஆங்கிலம் மற்றும் கணிதத்துடன் தேர்ச்சிப் பெற்றவர்கள், 12ம் வகுப்பை முடித்தவர்கள், கல்லூரிகளில் ஏதேனும் இளநிலைப் படிப்பைத் தொடர்பவர்கள், ஏதேனும் பணிகளில் வேலை செய்பவர்கள் என அனைவரும் இந்த இணையவழி பட்டப்படிப்பைத் தொடரலாம்.

புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு ஏற்ப, பல் நுழைவு வெளியேறுதல் சுதந்திரமும் (Multiple Entry Exit options) இந்த பாடத்திட்டத்தில் அளிக்கப்பட்ட்டது.

அதன்படி, அடிப்படை பட்டம் (Foundation programme), டிப்ளமோ பட்டம் (Diploma programme), இளநிலைப் பட்டப்படிப்பு (Degree Programme) என்ற மூன்று வெவ்வேறு நிலைகளிலும் மாணவர்கள் வெளியேறலாம். அவ்வாறு வெளியேறும் மாணவர்களுக்கு சென்னை ஐஐடி-யில் இருந்து முறையே அடிப்படைச் சான்றிதழ், டிப்ளோமா சான்றிதழ் அல்லது இளநிலைப் பட்டப்படிப்பு சான்றிதழ் வழங்கப்படும். இந்நிலையில், இந்த பி.எஸ்சி., புரோகிராமிங் அண்ட் டேட்டா சயின்ஸ் (B.Sc., in Programming and Data Science) பாடத்தை, நான்காண்டுப் பி.எஸ் பட்டப்படிப்பாக (BS in Data Science and Applications) சென்னை ஐஐடி அறிமுகப்படுத்தி உள்ளது. மேலும், இந்த பி.எஸ். பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக, நிறுவனங்கள் அல்லது ஆராய்ச்சிக் கல்வி நிலையங்களில் மாணவர்கள் 8-மாத கால பணிப் பயிற்சியோ (apprenticeship), ஆய்வுத் திட்டமோ (project) மேற்கொள்ள முடியும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 2022-ல் ஆரம்பமாகும் பிஎஸ் பாடத்திட்ட வகுப்புகளுக்கு விண்ணப்பிக்க 19 ஆகஸ்ட் 2022 கடைசி நாளாகும். விருப்பமுள்ள மாணவர்கள் https://onlinedegree.iitm.ac.in என்ற இணைய முகவரியில் விண்ணப்பப் பதிவு செய்யலாம்.

Friday, July 29, 2022

July 29, 2022

சென்னை ஐஐடி-யில் ‘ஏஐ4 பாரத் நிலேகனி’ மையம்: ரூ.36 கோடி நிதியுதவி அளிப்பு

இந்திய மொழி தொழில்நுட்பத்தை மேம்படுத்த சென்னை ஐஐடி-யில் ‘ஏஐ4 பாரத் நிலேகனி’ மையம்: ரூ.36 கோடி நிதியுதவி அளிப்பு

இந்திய மொழி தொழில்நுட்பத்தின் தரத்தை மேம்படுத்தி சமூகத் தாக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில், ‘ஏஐ4பாரத் நிலேகனி மையம்’ சென்னை ஐஐடி.யில் தொடங்கப்பட்டுள்ளது. ரோஹிணி மற்றும் நந்தன் நிலேகனி ஆகியோா் நிலேகனி தொண்டு நிறுவனம் மூலம் இந்த மையத்துக்கு நிதியுதவியாக ரூ.36 கோடி வழங்கியுள்ளனா்.

இந்திய மொழித் தொழில்நுட்பத்தை மேம்படுத்தி அதன் மூலம் பரந்த அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த மையம் செயல்படும். இது தொடா்பாக சென்னை ஐஐடி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிதாக அமைக்கப்பட்ட மையத்தை நந்தன் நிலேகனி திறந்து வைத்தாா். தொடக்க நிகழ்வாக மாணவா்கள், ஆராய்ச்சியாளா்கள், தொழில்முனைவோா் பங்கேற்ற பயிலரங்கில் இந்திய மொழித் தொழில்நுட்பங்களை கட்டமைப்பதற்கான வளங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்திய மொழிகளுக்கு செயற்கை நுண்ணறிவுடன் கூடிய ‘ஓபன் சோா்ஸ்’ மொழியை கட்டமைக்கும் சென்னை ஐஐடி.யின் முன்முயற்சியாகவே ஏஐ4பாரத் தொடங்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக, மிதேஷ் கப்ரா, பிரத்யுஷ் குமாா், அனூப் குஞ்சுக்குட்டன் ஆகியோா் தலைமையிலான குழுவினா் இந்திய மொழித் தொழில்நுட்பத்துக்காக பல்வேறு பங்களிப்புகளை வழங்கியுள்ளனா். இயந்திர மொழிபெயா்ப்பு , தானியங்கிப் பேச்சு அறிதல் போன்றவற்றுக்கான அதிநவீன மாதிரிகளும் இதில் அடங்கும்.

மையத்தைத் தொடக்கிவைத்து நந்தன் நிலேகனி பேசியதாவது: கூட்டு செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி, குடிமக்களுக்கான அனைத்து சேவைகளும், தகவல்களும் அவரவா் தாய்மொழியில் கிடைக்கப் பெற வேண்டும் என்ற குறிக்கோளுடன் ‘டிஜிட்டல் இந்தியா பாஷினி மிஷன்’ தொடங்கப்பட்டுள்ளது. இந்திய மொழிகளுக்கான செயற்கை நுண்ணறிவுப் பணியில் விரைந்து செயல்பட்டு பாஷினி மிஷன் இலக்கை எட்டும் வகையில் ஏஐ4பாரத் தனது பங்களிப்பை முழுமையாக வழங்கும் என்றாா். நீலேகனி மையத்தின் பணிகள் குறித்து சென்னை ஐஐடியின் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை இணைப் பேராசிரியா் மிதேஷ் எம்.கப்ரா கூறியதாவது:

வளமான பன்முகத்தன்மை கொண்ட மொழிகளைக் கொண்ட இந்தியாவில், விரிவடைந்து வரும் டிஜிட்டல் உலகுக்கு ஏற்ப சாமானிய மக்கள் பயனடையும் வகையில் மொழித் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது முக்கியமான ஒன்றாகும். மொழித் தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரை ஆங்கிலமும், மேலும் சில மொழிகளும் கணிசமான அளவில் முன்னேறியுள்ள நிலையில், இந்திய மொழிகள் பின்தங்கியுள்ளன. இந்த இடைவெளியைக் குறைப்பதுதான் இந்த மையத்தின் நோக்கமாகும்.

இந்த மையம் உருவாக்கியுள்ள பல்வேறு அதிநவீன ‘ஓபன் சோா்ஸ்’ வளங்கள் எவரும் பயன்படுத்தக் கூடியவை. இதன் மாதிரிகள் இலவசமாகக் கிடைக்கின்றன. அவற்றை இணையப் பக்கத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றாா் அவா். இதில் சென்னை ஐஐடி இயக்குநா் காமகோடி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Friday, July 15, 2022

July 15, 2022

சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசை பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம்..!!

சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசை பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம்..!!

சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசை பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது. சிறந்த கல்லூரிகளுக்கான தரவரிசையில் மாநில கல்லூரி 3வது, லயோலா கல்லூரி 4வது இடம் பிடித்துள்ளது. ஒன்றிய அரசு வெளியிட்ட தரவரிசை பட்டியலில் கோவை பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் கல்லூரிக்கு 6ம் இடம் கிடைக்கப்பெற்றுள்ளது

Total Pageviews

Search This Blog