Breaking

Showing posts with label MBBS courses. Show all posts
Showing posts with label MBBS courses. Show all posts

Sunday, November 09, 2025

Sunday, March 10, 2024

Wednesday, December 27, 2023

December 27, 2023

MBBS மாணவர்களுக்கு உள்ளதைப்போல ஆயுஷ் மாணவர்களுக்கும் EXiT டெஸ்ட்: தேசிய மருத்துவ ஆணையம் அறிவிப்பு

எம்பிபிஎஸ் மாணவர்களுக்கு உள்ளதைப்போல ஆயுஷ் மாணவர்களுக்கும் எக்ஸிட் டெஸ்ட்: தேசிய மருத்துவ ஆணையம் அறிவிப்பு

எம்பிபிஎஸ் படித்து முடித்த மாணவர்கள் லைசென்ஸ் பெற்று மருத்துவ தொழில் செய்ய எக்ஸிட் டெஸ்ட் எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்று ஒன்றிய அரசு அறிவித்ததை தொடர்ந்து தற்போது ஆயுஷ் படிக்கும் மாணவர்களும் எக்ஸிட் டெஸ்ட் எழுத வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு ஒன்றிய அரசின் கெஸட்டில் வெளியாகியுள்ளது. நாட்டில் மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள் முதலில் நீட் தேர்வு எழுதிய பின் மருத்துவ படிப்புகளுக்கான இடங்களில் சேர முடியும். அதைத் தொடர்ந்து நான்கரை ஆண்டுகள் படித்து முடித்ததும் 1 ஆண்டு அந்த மாணவர்கள் பணியிடைப் பயிற்சி பெற வேண்டும். அதற்கு பிறகு அவர்களுக்கு சான்று வழங்கப்படும். இது தவிர வெளிநாடுகளில் சென்று மருத்துவப் படிப்பு முடித்து இங்கு வரும் மாணவர்கள் தேசிய மருத்துவ ஆணையம் நடத்தும் எக்ஸிட் டெஸ்ட் எழுதி தேர்ச்சி பெற்ற பிறகு தான் இங்கு அவர்கள் லைசென்ஸ் பெற்று மருத்துவ தொழில் செய்ய முடியும். இந்நிலையில், இந்திய தேசிய மருத்துவ ஆணையம் கடந்த ஜூன் மாதம் ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் எம்பிபிஎஸ் படித்து முடித்த மாணவர்களும் எக்ஸிட் டெஸ்ட் எழுத வேண்டும். முதுநிலை பட்டப் படிப்பு படிக்க விரும்பும் மாணவர்களும் எக்ஸிட் டெஸ்ட் எழுதி முடித்தால் தான் முதுநிலை படிப்புகளில் சேர முடியும். என்றும் அறிவித்தது.

இந்த அறிவிப்பு கடந்த ஜூன் மாதம் 27ம் தேதி கெஸட்டில் வெளியானது. இதனால் எம்பிபிஎஸ் மாணவர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். இந்நிலையில், ஆயுஷ் அமைப்பின் கீழ் வரும் ஆயுர்வேதம், சித்தா, யுனானி உள்ளிட்ட இந்திய மருத்துவ முறைகள் தொடர்பான படிப்புகளை படிக்கும் மாணவர்களும் தேசிய மருத்துவ ஆணையம் நடத்தும் எக்ஸிட் டெஸ்ட் எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்றும் 22.12.2023 தேதியிட்ட கெஸட்டில் அறிவித்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ள விவரம் வருமாறு: இந்த டெஸ்ட் எழுதி தேர்ச்சி பெற்றால் தான் இந்திய மருத்துவ முறையின் அந்தந்த துறையின் மருத்துவ பயிற்சியாளராக பயிற்சி பெற உரிமம் வழங்கப்படும். மேலும் இந்திய மருத்துவ முறையின் பதிவு செய்யப்பட்ட மருத்துவப் பயிற்சியாளராகவும் மாநில பதிவு அல்லது தேசிய பதிவேட்டில் பதிவு செய்வதற்கு இந்த எக்ஸிட் டெஸ்ட் எழுதி தேர்ச்சி பெற வேண்டும். இந்த டெஸ்ட் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி அல்லது ஆகஸ்ட் மாதங்களில் வழக்கமாக நடத்தமாக நடத்தப்படும். இந்த தேர்வு எழுத விரும்பும் ஆயுஷ் மாணவர்கள் குறைந்தபட்சம் 270 நாட்கள் இன்டர்ன்ஷிப் முடித்த பயிற்சியாளராகவோ அல்லது ஆயுவர்வேதா, சித்தா, யுனானி பட்டதாரிகள் ஒரு வருட கட்டாயப் பயிற்சி முடித்திருக்க வேண்டும். இந்த டெஸ்ட் எழுதி தேர்ச்சி பெறாத ஆயுவர்வேத பட்டதாரிகள், சித்தா பட்டதாரிகள், யுனானி பட்டதாரிகள் மாநிலத்தில் மருத்துவம் செய்ய தகுதியற்றவர்கள்.

இந்த தேர்வு எழுத கால வரம்பு ஏதும் இல்லை. தேர்வில் 50 சதவீதம் அல்லது அதற்கு மேலும் மதிப்பெண்கள் பெறுவோர் தகுதி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவார்கள். இந்த தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களின் பட்டப்படிப்பு, மருத்துவப் பதிவு ஆகியவை அனைத்து வேலை வாய்ப்புகள், கல்வி கற்றல் போன்றவற்றின் போது பரிசீலிக்கப்படும். இது மருத்வத் தொழில் செய்வதற்கும், வேலை பெறுவதற்கும் இன்றியமையாதது. இவ்வாறு தேசிய மருத்துவ ஆணையத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Saturday, October 21, 2023

October 21, 2023

MBBS கலந்தாய்வு செல்லாது: NMC அறிவிப்பு!



செப்.30-க்குப் பிறகு நடந்த எம்பிபிஎஸ் கலந்தாய்வு செல்லாது: தேசிய மருத்துவ ஆணையம் அறிவிப்பு

நடப்பாண்டில் செப்.30-ம் தேதிக்கு பின்னர் நடத்தப்பட்ட எம்பிபிஎஸ் கலந்தாய்வு செல்லாது என்று தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தேசிய மருத்துவ ஆணையத்தின் இளநிலை மருத்துவக் கல்வி வாரிய இயக்குநர் சாம்பு சரண் குமார் வெளியிட்ட அறிவிப்பு: நடப்பாண்டு எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கையை செப்.30-க்குள் நிறைவு செய்ய வேண்டும் என ஏற்கெனவே தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்தியிருந்தது. ஆனால், சில மாநிலங்களில் அதற்குப் பிறகும் இணையவழி மற்றும் நேரடி கலந்தாய்வு மூலம்எம்பிபிஎஸ் இடங்கள் நிரப்பப்பட்டதாகத் தெரிகிறது.

இந்தச் செயல்பாடுகள் ஆணையத்தின் விதிகளுக்கும், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கும் புறம்பானது. காலியாக இடங்கள் உள்ளது என்பதற்காகவே மாணவர் சேர்க்கைக்கான காலக்கெடுவை நீட்டிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தீர்ப்பளித்துள்ளது.

எனவே, தேசிய மருத்துவ ஆணையத்தின் அறிவுறுத்தலை மீறி நடத்தப்பட்ட கலந்தாய்வு செல்லாது. ஒருவேளை மாணவர்களை கல்லூரிகளில் சேர்த்திருந்தால் அவர்களை விடுவிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Saturday, September 23, 2023

September 23, 2023

தமிழ்நாட்டில்இனி கூடுதலாக மருத்துவக் கல்லூரிகள் கட்ட முடியாது! - தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிகளால் முட்டுக்கட்டை!

தமிழ்நாட்டில் இனி கூடுதலாக மருத்துவக் கல்லூரிகள் கட்ட முடியாது! தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிகளால் முட்டுக்கட்டை!

தேசிய மருத்துவ ஆணையத்தின்புதிய விதிகளின்படி தமிழ்நாட்டில் இனிபுதிதாக மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்க முடியாது. அதைப்போல ஏற்கனவே உள்ள கல்லூரிகளில் கூடுத லாக மாணவர்களையும் சேர்க்க முடியாது.

கல்வித்துறையானது மாநிலப்பட்டியலிலும் உள்ளது; மத்திய அரசின் பட்டியலிலும் உள்ளது. மத்திய அரசு சார்பில் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் நடத்தப்படுகின்றன. உயர்கல்வியில்ஐ.ஐ.டி. போன்ற பொறியியல் கல்வி நிறுவனங்களையும், எய்ம்ஸ் போன்ற மருத்துவக் கல்லூரிகளையும் மத்திய அரசே நடத்துகின்றது

Thursday, February 09, 2023

February 09, 2023

வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோா் தகுதிச் சான்றுக்கு மாா்ச் 8-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோா் தகுதிச் சான்றுக்கு விண்ணப்பிக்கலாம்

வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோருக்கான திறனறித் தோ்வில் பங்கேற்பதற்கான தகுதிச் சான்றிதழுக்கு வியாழக்கிழமை (பிப்.9) முதல் விண்ணப்பிக்கலாம் என தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பு: வெளிநாடுகளில் மருத்துவப் படிப்பை நிறைவு செய்தவா்கள் இந்தியாவில் மருத்துவ சேவைகளில் ஈடுபட தகுதித் தோ்வில் தோ்ச்சி பெறுவது அவசியம். அந்தத் தோ்வு நிகழாண்டில் வரும் ஜூன் மாதம் நடைபெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

அந்தத் தோ்வில் பங்கேற்பதற்கு தகுதிச் சான்றிதழ் கட்டாயம். அதை தேசிய மருத்துவ ஆணையத்தின் இணையப் பக்கத்தின் வாயிலாக வியாழக்கிழமை (பிப்.9) முதல் மாா்ச் 8-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

கூடுதல் விவரங்களுக்கு தேசிய மருத்துவ ஆணைய இணையப் பக்கத்தை அணுகலாம்.

Friday, January 06, 2023

January 06, 2023

MBBS மாணவா் சோ்க்கை விவரங்கள்: இணையவழியில் பதிவேற்ற அவகாசம் நீட்டிப்பு

எம்பிபிஎஸ் மாணவா் சோ்க்கை விவரங்கள்: இணையவழியில் பதிவேற்ற அவகாசம் நீட்டிப்பு
நிகழாண்டில் எம்பிபிஎஸ் படிப்பில் சோ்க்கப்பட்டுள்ள மாணவா்கள் குறித்த விவரங்களை இணையவழியில் பதிவேற்றுவதற்கான அவகாசத்தை ஜன. 10-ஆம் தேதி வரை நீட்டிக்க தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக ஆணையத்தின் இளநிலை மருத்துவக் கல்வி வாரிய இயக்குநா் சாம்பு சரண் குமாா் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

எம்பிபிஎஸ் மாணவா் சோ்க்கை தேசிய மருத்துவ ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, வெளிப்படைத் தன்மையுடன் மேற்கொள்ளப்படுவது அவசியம். நீட் தோ்வு தகுதி அடிப்படையிலும், அனுமதிக்கப்பட்ட இடங்களின் அடிப்படையிலுமே மாணவா் சோ்க்கையை நடத்த வேண்டும்.

அதன்படி, நிகழாண்டில் அனுமதிக்கப்பட்ட மாணவா்களின் விவரங்கள், மதிப்பெண் விவரம், இடஒதுக்கீடு விவரம், கட்டண விவரம் உள்ளிட்டவற்றை என்எம்சி இணையப் பக்கத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கான தெரிவுப் பகுதியில் கடந்த 31-ஆம் தேதிக்குள் பதிவேற்ற வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது அந்த அவகாசம் ஜன. 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Friday, December 30, 2022

December 30, 2022

மருத்துவ கவுன்சிலில் MBBS படிப்பை மட்டுமே பதியலாம்: ஐகோர்ட் கிளை உத்தரவு - Only MBBS course can be registered in Medical Council: iCourt Branch Order

மருத்துவ கவுன்சிலில் MBBS படிப்பை மட்டுமே பதியலாம்: ஐகோர்ட் கிளை உத்தரவு - Only MBBS course can be registered in Medical Council: iCourt Branch Order

Manokaran, Malaichami and Balu, who have completed their B.Sc (Social Health) degree from the government, have applied for registration with the Tamil Nadu Medical Council. The Medical Council refused to accept this and rejected the BSc (Social Health) course as non-registrable. They petitioned the Madurai branch of the ICourt to cancel this and seek an order to register them with the Medical Council.

Judge GR Swaminathan, who heard this petition, said, 'Only MBBS degree course can be registered in the Medical Council. The medical council has said that it is not possible to register other courses. Petitioners have aspired too much. Considered equivalent to MBBS and above. As there is no merit in their request, this petition is dismissed. அரசால் அங்கீகரிக்கப்பட்ட பிஎஸ்சி (சமூக சுகாதாரம்) இளங்கலை பட்டப்படிப்பை முடித்த மனோகரன், மலைச்சாமி மற்றும் பாலு ஆகியோர், தங்களை தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்யக் கோரி விண்ணப்பித்துள்ளனர். இதை ஏற்க மறுத்த மருத்துவ கவுன்சில், பிஎஸ்சி (சமூக சுகாதாரம்) படிப்பை பதிவு செய்ய முடியாது என நிராகரித்தது. இதை ரத்து செய்யவும், தங்களை மருத்துவ கவுன்சிலில் பதிவு ெசய்யுமாறு உத்தரவிடக் கோரியும் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ‘மருத்துவ கவுன்சிலில் எம்பிபிஎஸ் பட்டப் படிப்பை மட்டுமே பதிவு செய்ய முடியும். இதர படிப்புகளை பதிவு செய்ய முடியாது என மருத்துவ கவுன்சில் தரப்பில் கூறப்பட்டுள்ளது. மனுதாரர்கள் மிக அதிகமாய் ஆசைப்பட்டுள்ளனர். எம்பிபிஎஸ் மற்றும் அதற்கு மேலான படிப்பிற்கு சமமானதாக நினைக்கின்றனர். அவர்களது கோரிக்கையில் எந்த முகாந்திரமும் இல்லை என்பதால் இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’ என உத்தரவிட்டுள்ளார்.

Total Pageviews

Search This Blog