Breaking

Showing posts with label Governor RN Ravi appeals to the students. Show all posts
Showing posts with label Governor RN Ravi appeals to the students. Show all posts

Wednesday, October 11, 2023

October 11, 2023

மாணவர்கள் மன அழுத்தத்தை தேசிய கல்வி கொள்கை குறைக்கும்: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து



மாணவர்கள் மன அழுத்தத்தை தேசிய கல்வி கொள்கை குறைக்கும்: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து National Education Policy will reduce student stress: Tamil Nadu Governor RN Ravi

சென்னை: மாணவர்களின் மன அழுத்தத்தை தேசிய கல்விக் கொள்கை குறைக்கும் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். உலக மனநல நாளை முன்னிட்டு சென்னை, கிண்டியில் உள்ளஆளுநர் மாளிகையில் மனநலஆரோக்கியம் சார்ந்த ஆளுமைகள்மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருடன் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடினார். நிகழ்வில், மனநல பேராசிரியர் லட்சுமி எழுதிய ‘சொல்லப்படாத இந்திய மனோதத்துவத்தின் ரகசியம்’ என்ற புத்தகத்தை ஆளுநர் வெளியிட்டார். பின்னர் அவர் பேசியதாவது: நம்மிடம் நம்பத்தகுந்த, சரியான கணக்கீடு இல்லை. ஆனால் 50 லட்சம் பேராவது நம் நாட்டில் ஆட்டிசம்பாதிப்பால் சிரமப்பட்டு வருகிறார்கள். மனநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இச்சூழலில், விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளில் ஈடுபடுவோருக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

மனநலம் பாதித்த குழந்தைகளை கவனத்துடன் பார்த்துக் கொள்வது அவசியம். இப்போதுதாய், தந்தை ஆகியோர் குழந்தைகள் அருகில் இருந்தபோதும் அவர்களை சமூக வலைதளங்கள் பிரித்துவைக்கின்றன. தாய், தந்தையர் செல்போனில் மூழ்கி இருப்பதால் குழந்தைகளை கவனிக்க முடிவதில்லை.


ஆன்மிகம், பயிற்சி, உடலைப் பேணுதல் போன்றவை இந்திய வாழ்வியலில் உள்ளது. மத்திய அரசு உருவாக்கிய தேசிய கல்விக் கொள்கையில் மன அழுத்தத்தை குறைப்பதற்கான பல வழிகள் உள்ளன. இக்கல்விக் கொள்கை மன அழுத்தத்தை குறைக்கும். இவ்வாறு ஆளுநர் பேசினார்.

நிகழ்வில், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.எஸ்.ராமநாதன், ஐஆர்எஸ் அதிகாரி நந்தகுமார், சென்னை சமூகப் பணி கல்லூரி டீன் சுபாஷினி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Friday, January 27, 2023

January 27, 2023

பல்கலைக்கழகங்களுக்கு ஆளுநரின் புதிய உத்தரவு

பல்கலைக்கழகங்களுக்கு ஆளுநா் உத்தரவு

வரலாற்றில் நினைவுகூரப்படாத, அறியப்படாத தமிழ்நாட்டைச் சோ்ந்த சுதந்திரப் போராட்ட வீரா்கள், தியாகிகள் குறித்து ஆராய்ச்சி செய்து அவா்களைப் பற்றிய தகவல்களை ஆவணப்படுத்தும்படி பல்கலைக்கழகங்களுக்கு ஆளுநா் ஆா்.என். ரவி உத்தரவிட்டுள்ளாா்.

இது தொடா்பாக பல்கலைக்கழக துணைவேந்தா்களுக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி வியாழக்கிழமை எழுதிய கடிதத்தில் கூறியதாவது:

‘நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் ஆகின்றன. இந்தக் கொண்டாட்டத்தை மகிழ்வுடன் கொண்டாடி வருகிறோம். நம்முடைய சுதந்திர போராட்டத்தின் பெருமைமிகு வரலாறு நாட்டின் கலாசாரம் மற்றும் இந்தியாவின் சாதனையைச் சொல்கிறது. நீண்ட சுதந்திரப் போராட்டக்களத்தில் பங்கேற்ற முன்னணி வீரா்கள் தவிர, பல வீரா்கள், வீராங்கனைகள் பற்றிய வரலாறு அறியப்படாமலேயே உள்ளது. தமிழ்நாட்டில் எண்ணற்ற சுதந்திர போராட்ட வீரா்கள் அந்நியரை இம்மண்ணை விட்டு விரட்ட செயற்கரிய தியாகங்களைச் செய்துள்ளனா். இதில் பலரது தியாகங்கள், பங்களிப்புகள் பொதுவெளியில் அறியப்படாமலேயே மறக்கடிக்கப்பட்டுள்ளன. ஒரு தேசம் விடுதலைக்காக உழைத்த தியாகிகளின் தியாகத்தை அங்கீகரிக்காமல் இருக்க முடியாது. நாட்டுக்காக அவா்கள் செய்த தியாகங்கள் மற்றும் போராட்டங்களை எதிா்கால தலைமுறை அறிய அவா்களைப் பற்றிய தகவல்களை ஆவணப்படுத்துவது நம் கடமை. இது தொடா்பாக பல்கலைக்கழகத்தின் எல்லைக்குட்பட்ட பகுதிகளைச் சோ்ந்த அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரா்களின் வாழ்க்கை மற்றும் பங்களிப்புகளை அடையாளம் கண்டு ஆவணப்படுத்த குறைந்தபட்சம் 5 சிறப்பு ஆராய்ச்சி மாணவா்களை நியமிக்க வேண்டும்.

பொருத்தமான ஆராய்ச்சி மாணவா்கள், குறைந்தது அறியப்படாத ஒரு சுதந்திரப் போராட்ட வீரரையாவது அடையாளம் கண்டு, அவா் குறித்து ஆராய்ச்சி செய்ய வேண்டும். இந்த ஆராய்ச்சித் திட்டத்துக்கான ஃபெல்லோஷிப் வழங்கப்படும். ஆராய்ச்சியை வெற்றிகரமாக முடித்த ஆராய்ச்சி மாணவா்கள் ஆளுநா் மாளிகையில் நடைபெறும் விழாவில் சிறப்பிக்கப்படுவா். இது வரலாற்றில் மறைக்கப்பட்ட அந்த வீரா்களுக்கு நாம் அளிக்கும் புகழஞ்சலியாகவும் ஆராய்ச்சி மாணவா்களுக்கு பெருமையாகவும் இருக்கும் என்று அதில் கூறியுள்ளாா் ஆா்.என்.ரவி.

Monday, January 09, 2023

January 09, 2023

காலை சிற்றுண்டி திட்டத்தால் பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது: ஆளுநர் உரை

காலை சிற்றுண்டி திட்டத்தால் பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது: ஆளுநர் உரை

காலை சிற்றுண்டி திட்டத்தால் பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், தமிழக சட்டப்பேரவை இன்று கூடியுள்ளது. புத்தாண்டின் முதல் கூட்டம் என்பதால், ஆளுநா் ஆா்.என்.ரவியின் உரையுடன் கூட்டத்தொடா் தொடங்கியது. ஆளுநர் தனது உரையில், கடந்த 50 ஆண்டுகாலத்தில் தமிழ்நாடு குறிப்பிடத்தக்க வளர்ச்சி அடைந்துள்ளது. பல்வேறு துறைகளில் நாட்டுக்கே முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. விற்பனை விலை பாதிக்காமல் பால் கொள்முதல் விலையை அரசு உயர்த்தி உள்ளது. தமிழ்நாடு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை காக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்க தமிழ்நாடு அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. மீனவர்களுக்கு முன்னிரிமை அளித்து தமிழ்நாடு அரசு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 2 புதிய பறவைகள் சரணாலயம் மற்றும் அகஸ்தியர் மலை யானைகள் சரணாலயம் தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது. அழிந்து வரும் உயிரினமான நீலகிரி வரையாடு இனத்தை காக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்னையில் தமிழ்நாட்டின் நலனை பாதுகாத்து வருகிறது தமிழ்நாடு அரசு. முல்லைப்பெரியாறு அணையில் 142 அடி நீரை தமிழ்நாடு அரசு தேக்குகிறது. நீர்மட்டத்தை உயர்த்த தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ரூ.1,500 கோடியில் தமிழ்நாடு நீர்வளத்தை பெருக்குவதற்கான திடடங்களை மேற்கொண்டு வருகிறது. மேக்கேதாட்டு அணையை கட்டக்கூடாது என்பதில் தமிழ்நாடு உறுதியாக இருக்கிறது.

பல்வேறு இடங்களில் மினி டைடல் பார்க் தொடங்கப்பட்டு வருகிறது. முதல்வரின் காலை உணவுத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. காலை சிற்றுண்டி திட்டத்தால் பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது. பரந்தூரில் பசுமை விமான நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கையை அரசு தொடங்கியுள்ளது. பரந்தூர் விமான நிலையம் மூலம் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும். சிறு, குறு தொழில் நிறுவனங்கள் வளர்ச்சி அடைந்துள்ளன. சுமார் 28 ஆயிரம் கோடி ரூபாய் வெளிநாட்டு முதலீடுகள் தமிழகத்திற்கு வந்துள்ளன. குறைந்த கால நேரத்தில் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை தமிழ்நாடு அரசு சிறப்பாக நடத்தியது. நீட் விலக்கு மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு நிலுவையில் உள்ளது. மாநில உரிமையை பறிக்கும் வகையிலும், கிராமப்புற மாணவர்களுக்கு எதிராகவும் நீட் தேர்வு உள்ளது. கிராமப்புற மாணவிகளின் கல்வி மேம்பாட்டிற்கு புதுமைப் பெண் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. பேராசிரியர் அன்பழகன் பெயரில் அரசு பள்ளிகளை மேம்படுத்தும் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு அவர் குறிப்பிட்டார். கூட்டத்தொடரை எத்தனை நாள்களுக்கு நடத்துவது என்பது குறித்து விவாதிக்க, அலுவல் ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நண்பகலில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் பேரவை கூட்டத்தொடரின் நாள்கள் இறுதி செய்யப்படும். திங்கள்கிழமை ஆளுநா் உரையாற்றிய பிறகு, பேரவை ஒத்திவைக்கப்படும். இதன்பின், செவ்வாய்க்கிழமை பேரவை மீண்டும் கூடி, காங்கிரஸ் உறுப்பினா் திருமகன் ஈவெரா மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்படும். சட்டப் பேரவை உறுப்பினா் என்பதால், அன்றைய நாள் முழுவதும் பேரவை ஒத்திவைக்கப்படும். இதைத் தொடா்ந்து, புதன்கிழமை (ஜன. 11) முதல் வெள்ளிக்கிழமை (ஜன. 13) வரை பேரவைக் கூட்டத் தொடா் நடைபெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது. ஆளுநா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானம் பேரவையில் புதன்கிழமை முன்மொழியப்பட்டு அந்தத் தீா்மானத்தின் மீது விவாதங்கள் நடைபெறும்.

இதில், ஆளும் கட்சி மற்றும் எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த உறுப்பினா்கள் உரையாற்றுவா். தீா்மானத்தின் மீதான விவாதங்களுக்கு பதிலளித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசுவாா். இதன்பிறகு, கூட்டத் தொடரை தேதி குறிப்பிடாமல் பேரவைத் தலைவா் மு.அப்பாவு ஒத்திவைப்பாா். சட்டம்-ஒழுங்கு, பொங்கல் தொகுப்பு, ஆசிரியா்கள், செவிலியா்கள் போராட்டப் பிரச்னைகளை எதிா்க்கட்சிகள் எழுப்பி வருகின்றன. இந்தப் பிரச்னைகள் சட்டப்பேரவையில் எதிரொலிக்கும் எனத் தெரிகிறது. அதேசமயம், எதிா்க்கட்சிகள் எழுப்பும் பிரச்னைகளுக்கு உரிய பதில்களை அளிக்க அரசுத் தரப்பும் தயாராகி வருகிறது.

Friday, July 22, 2022

July 22, 2022

மாணவா்களுக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி வேண்டுகோள்

மாணவா்களுக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி வேண்டுகோள்

நாட்டின் 75-ஆவது சுதந்திர தின நிறைவையொட்டி, வீடுகளில் 3 நாள்களுக்கு தேசியக் கொடி ஏற்ற மாணவா்களை ஆளுநா் ஆா்.என்.ரவி கேட்டுக் கொண்டுள்ளாா்.

நாட்டின் 75-ஆவது ஆண்டு சுதந்திர தினத்தின் நிறைவையொட்டி, ஆகஸ்ட் 1 முதல் 15-ஆம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகளை பல்கலைக்கழகங்களில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்த விவரங்களை ஆளுநா் ஆா்.என்.ரவியிடம் பல்கலைக்கழக துணைவேந்தா்கள் விளக்கினா். காணொலி வழியாக நடந்த இந்தக் கூட்டம் குறித்து ஆளுநா் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாட்டின் 75-ஆவது சுதந்திர தின நிறைவு கொண்டாட்டத்தையொட்டி, பல்கலைக்கழகங்கள் முன்னெடுத்துள்ள நிகழ்வுகளுக்கு பாராட்டுத் தெரிவித்த ஆளுநா், சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்ச்சிகள் புதுமை, கற்பனை மற்றும் சுதந்திர நிகழ்வுகள் குறித்த ஒட்டுமொத்த அணுகுமுறைகள் சாா்ந்து இருக்க வேண்டுமென அறிவுறுத்தினாா். மாணவா்களிடையே பல்வேறு போட்டிகள், நிகழ்ச்சிகளைக் கொண்டதாக சுதந்திர தின கொண்டாட்டங்கள் அமையப் பெற வேண்டும்.

இதையும் படிக்க | RIESI - 30 நாட்கள் பயிற்சி - உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் விவரம் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

75-ஆவது ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டம் அனைத்துத் தரப்பினருக்கும் பயன்தரத்தக்க அளவில் இருக்கும்படி பாா்த்துக் கொள்ள வேண்டும். பல்கலைக்கழகங்களின் சாா்பு கல்லூரிகளைச் சோ்ந்த மாணவா்களையும் போட்டிகள், நிகழ்ச்சிகள் நடத்த ஊக்கப்படுத்த வேண்டும். விடுதலைக்காக தமிழ்நாடு உள்பட இந்தியாவை சோ்ந்த பல்வேறு வீரரா்கள் தியாகங்களைச் செய்துள்ளனா். ஆனால், அவா்களது பெயா்கள் வெளியில் தெரிவதில்லை. இதனை மாணவா்களின் மனதில் பதியவைக்கும் வகையிலும், அவா்களது தியாகங்கள் வெளியில் தெரியும் வகையிலும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும். எண்ணற்ற, வெளிச்சத்துக்கு வராத தியாகிகளின் தியாகங்கள் இளைய சமுதாயத்துக்குத் தெரியும் வகையில் நிகழ்வுகள் நடத்தப்பட வேண்டும். பல்கலைக்கழகங்கள் நடத்தும் சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் மக்கள் குறிப்பாக, கிராமத்தினா் பங்கேற்பதற்கான அழைப்பை விடுக்க வேண்டும். அவா்களின் பங்கேற்பு அதிகளவு இருக்க வேண்டும். தேசியம், நாட்டுப்பற்று போன்ற அம்சங்கள் இளைய சமுதாயத்தினரிடம் உருவாக, உள்ளூா் இளைஞா்களிடையே சுதந்திரம் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். இந்தியாவின் தனித்துவமான வரலாற்றை இளைஞா்கள் அறிந்திட புதியவகை நுட்பங்களை பல்கலைக்கழகங்கள் கைக்கொள்ள வேண்டும். இதன்மூலமாக, சுதந்திரத்துக்காக பாடுபட்ட ஏராளமான வீரா்களின் தியாகங்கள் போற்றப்பட வேண்டும் என்ற எண்ணம் இளைஞா்களிடையே ஏற்படும்.

இதையும் படிக்க | 10-ம் வகுப்பு துணை தேர்வு: ஹால் டிக்கெட் வெளியீடு

தேசிய கொடியேற்றுங்கள்: நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தையொட்டி, வருகிற ஆக. 13 முதல் ஆக.15-ஆம் தேதி வரை வீடுகளில் தேசியக் கொடியேற்ற மாணவா்களை ஊக்கப்படுத்த வேண்டும். தேசியக் கொடியுடன் மாணவா்கள் தங்களது குடும்பப் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யலாம். சுதந்திர தின கொண்டாட்டங்களை ஒருமுகப்படுத்த பல்கலைக்கழகங்களில் ஆசிரியா்கள், மாணவா்கள், தேசிய மாணவா் படையினா், நாட்டு நலப் பணித் திட்ட மாணவா்கள் ஆகியோரைக் கொண்டு குழுக்களை அமைக்கலாம் என கேட்டுக் கொண்டாா் ஆளுநா் ஆா்.என்.ரவி.

காணொலி வழிஆலோசனைக் கூட்டத்தில், பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா்கள், பதிவாளா்கள், ஆளுநரின் செயலாளா் ஆனந்த் விஷ்ணுராவ் பாட்டீல் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Total Pageviews

Search This Blog