Breaking

Showing posts with label Veterinary courses. Show all posts
Showing posts with label Veterinary courses. Show all posts

Friday, August 18, 2023

August 18, 2023

கால்நடை மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஓதுக்கீட்டு இடங்கள் அறிவிப்பு!



கால்நடை மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஓதுக்கீட்டு இடங்கள் அறிவிப்பு!

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் இளநிலைப் பட்டப்படிப்புகளில் கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பாராமரிப்பு பட்டப்படிப்பில் சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் 120 இடங்களும், நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், திருநெல்வேலி கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ஒரத்தநாடு கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் ஆகியவற்றில் தலா 100 இடங்களும், சேலம் தலைவாசல் கூட்டுரோடு, தேனி வீரப்பாண்டி, உடுமலைப்பேட்டை கால்நடை மருத்துவக்கல்லூரி ஆகியவற்றில் தலா 80 இடங்களும் என மொத்தம் 660 இடங்கள் உள்ளது.

உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்பில் (பிடெக்) கோடுவளி உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரியில் 40 இடங்களும், ஓசூர் மத்திகிரி கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்பு (பிடெக்) 40 இடங்களும், கோடுவளி உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரியில் பால்வளத் தொழில்நுட்ப பட்டபடிப்பில் 20 இடங்களும் நிரப்பட உள்ளது. கால்நடை மருத்துவ அறிவியல் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கு https://adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தின் மூலமாக ஜூன் 12 முதல் 30 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பம் சேர்க்கை நடைபெற்றது. இந்த நிலையில் கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு பட்டப்படிப்பில் சேர்வதற்கு 18,752 மாணவர்களும், பிடெக் தொழில்நுட்ப படிப்புகளில் சேர்வதற்கு 3,783 மாணவர்கள் என மொத்தம் 22,535 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.

அவர்களுக்கான தரவரிசைப்பட்டியல் 26ம் தேதி வெளியிடப்பட்டது.அதனைத் தொடர்ந்து பிவிஎஸ்சி மற்றும் ஏஎச் இளநிலை கால்நடை மருத்துவ அறிவியல், பிடெக் உணவுத் தொழில்நுட்பம், கோழியின தொழில்நுட்பம், பால்வளத் தொழில்நுட்பம் ஆகியவற்றில் சிறப்பு பிரிவினரான விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவ படை வீரர்களின் வாரிசுகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு கலந்தாய்வு நேற்று (ஆகஸ்ட் 16) நடைபெற்றது. அதில் 36 இடங்கள் நிரப்பப்பட்டது.

அதனைத்தொடர்ந்து இன்று (ஆகஸ்ட் 17) அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் ஒதுக்கீட்டில் (பிவிஎஸ்சி மற்றும் ஏஎச்) இளநிலை கால்நடை மருத்துவ அறிவியல், பிடெக் உணவுத் தொழில்நுட்பம், கோழியின தொழில்நுட்பம், பால்வளத் தொழில்நுட்பம் படிப்பிற்கான கலந்தாய்வு நடத்தப்பட்டது. அதில் மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு, தரவரிசைப்படி கலந்தாய்வு நடத்தப்பட்டது.மேலும், மாணவர்கள் கல்லூரியில் சேர்வதற்கான ஒதுக்கீட்டு உத்தரவுகனை தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் செல்வக்குமார் வழங்கினார்.அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில்,“அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு இன்று நடைபெற்றது. அதில் இளநிலை கால்நடை மருத்துவப்படிப்பில் கலையியல் பிரிவில் 109 மாணவர்கள் அழைக்கப்பட்டதில் 60 மாணவர்களும், தொழிற்கல்விப்பிரிவில் 8 மாணவர்களும் கலந்துக் கொண்டனர். பிடெக் உணவுத் தொழில்நுட்பம், கோழியினத் தொழில்நுட்பம், பால்வளத் தொழில் நுட்பப் படிப்பிற்கு 59 மாணவர்களுக்கு அழைப்பு அளிக்கப்பட்டதில் 9 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இளநிலை கால்நடைமருத்துவ அறிவியியல் படிப்பில் 45 இடங்களிலும், பிடெக் பட்டப்படிப்பில் உணவுத் தொழில்நுட்பம், கோழியினத் தொழில்நுட்பத்தில் தலா 3 மாணவர்களும், பால்வளத் தொழில்நுட்பத்தில் ஒரு மாணவரும் என 7 மாணவர்கள் சேர்க்கப்படுவர்” எனத் தெரிவித்தார். இளநிலை கால்நடை மருத்துவ அறிவியல் படிப்பில் 41 இடங்களும், பிடெக் படிப்பில் 4 இடங்களும் மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Wednesday, July 26, 2023

July 26, 2023

கால்நடை மருத்துவ படிப்பு தரவரிசை பட்டியலை வெளியிட்டது தமிழ்நாடு அரசு; அரியலூர் மாணவர் ராகுல் காந்த் தரவரிசையில் முதலிடம்

கால்நடை மருத்துவ படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல்

கால்நடை மருத்துவ படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் நாளை காலை 10 மணிக்கு வெளியிடப்படும்

கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அறிவிப்பு

கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு, பி.டெக் தொழில்நுட்ப பட்டப்படிப்புகளில் சேர்வதற்கான தரவரிசைப்பட்டியல் நாளை வெளியிடப்படுகிறது. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் இளநிலை பட்டப்படிப்புகளுக்கான இந்த தரவரிசைப்பட்டியல், நாளை காலை 10 மணிக்கு adm.tanuvas.ac.in, tanuvas.ac.in/ என்ற இணையதளங்களில் வெளியாகவுள்ளது.

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு ஜூன் 12-ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு, சேலம் தலைவாசல், உடுமலைப்பேட்டை, தேனி வீரபாண்டி ஆகிய 7 இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.

இந்தக் கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்புக்கு (பிவிஎஸ்சி - ஏஹெச்) 660 இடங்கள் உள்ளன.

சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய 4 கல்லூரிகளில் உள்ள 420 இடங்களில் மட்டும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 63 இடங்கள் (15 சதவீதம்) ஒதுக்கப்படுகின்றன.

இதுபோக, தமிழகத்துக்கு 597 இடங்கள் உள்ளன.
CLICK HERE TO DOWNLOAD தரவரிசைப் பட்டியல்

Monday, July 24, 2023

July 24, 2023

கால்நடை மருத்துவர்களுக்கு அதிக அளவிலான தேவை உள்ளது: பல்கலைக்கழக துணைவேந்தர் தகவல்



Veterinarians in high demand: University vice-chancellor information - கால்நடை மருத்துவர்களுக்கு அதிக அளவிலான தேவை உள்ளது: பல்கலைக்கழக துணைவேந்தர் தகவல் -

கால்நடை மருத்துவர்களுக்கான தேவை அதிகமாக உள்ளது என்று கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வக்குமார் தெரிவித்தார்.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் சென்னை கால்நடை மருத்துவ கல்லூரியில் ஆண்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் க.ந.செல்வக்குமார் தலைமை வகித்தார்.

அவர் பேசும்போது, ‘‘செயற்கை நுண்ணறிவு துறையில் மாணவர்களின் திறன் மேம்பாட்டுக்கான பயிற்சி களைவழங்க பல்கலைக்கழகம் முயற்சி மேற்கொண்டு வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் வேளாண் துறையின் வளர்ச்சி 1-2 சதவீதம் மட்டுமே உள்ள நிலையில், கால்நடை துறைவளர்ச்சி 7-8 சதவீதமாக உள்ளது. பட்டினி இல்லாத உலகம்,வறுமை ஒழிப்பு, உணவு, ஊட்டச்சத்து பாதுகாப்பு என முக்கியமான நிரந்தர வளர்ச்சி இலக்குகளை எட்டுவதில் கால்நடை துறை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. கால்நடை மருத்துவர்களுக்கான தேவை அதிகமாகஉள்ளது. இந்த வாய்ப்புகளைமாணவர்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார்.

சென்னை புறநகர் ஜிஎஸ்டி மற்றும் கலால் வரி ஆணையர் மு.க.தமிழ்வளவன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுவழங்கினார்.

அவர் பேசியபோது, ‘‘சுய விழிப்புணர்வு, சுய கட்டுப்பாடு, உள்ளுணர்வு, இரக்கம், சமூக உணர்வு, குழுவாக பிரச்சினைகளை கையாளுதல் ஆகிய 6 வழிமுறைகளை மாணவர்கள் பின்பற்ற வேண்டியது அவசியம்’’ என்றார்.

கல்லூரி முதல்வர் இரா.கருணாகரன் ஆண்டு அறிக்கை வெளியிட்டார். இறுதிஆண்டு மாணவர் பு.அபிநாஸ் வரவேற்புரையும், இறுதிஆண்டு மாணவி பி.ஜொம்லிஷா நன்றியுரையும் நிகழ்த்தினர்.

Friday, September 30, 2022

September 30, 2022

கால்நடை மருத்துவ படிப்புக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு... Applicants for veterinary courses have till October 6 to amend their application

கால்நடை மருத்துவ படிப்புக்கு விண்ணப்பித்தவர்கள் விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய அக்டோபர் 6 வரை அவகாசம் - Applicants for veterinary courses have till October 6 to amend their application

Applicants for veterinary courses have been given time till October 6 to amend their application. To amend the application, upload the certificate copy from 8 pm on October 3 to 8 pm on October 6. It was informed that the application can be edited through the registered mobile number and email at https://adm.tanuvas.ac.in.

கால்நடை மருத்துவ படிப்புக்கு விண்ணப்பித்தவர்கள் அவர்கள் விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய அக்டோபர் 6 வரை அவகாசம்

அளிக்கப்பட்டது. விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய, சான்றிதழ் நகல் பதிவேற்ற அக்டோபர் 3 இரவு 8 மணி முதல் அக்டோபர் 6 இரவு 8 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டது. பதிவு செய்த அலைபேசி மற்றும் மின்னஞ்சல் மூலம் https://adm.tanuvas.ac.in-ல் விண்ணப்பம் திருத்தலாம் என தெரிவிக்கப்பட்டது.

Saturday, September 10, 2022

September 10, 2022

கால்நடை மருத்துவ படிப்புக்கு ஆன்லைனில் 12-ம் தேதி முதல் விண்ணப்பம் - பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு வரும் 12-ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடை பெறுகிறது.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு, சேலம் தலைவாசல், உடுமலைப்பேட்டை, தேனி வீரபாண்டி ஆகிய 7 இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. 580 இடங்கள்

இந்த கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்புக்கு (பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச்) 580 இடங்கள் இருக்கின்றன. சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய 4 கல்லூரிகளில் உள்ள 420 இடங்களில் மட்டும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 63 இடங்கள் (15 சதவீதம்) ஒதுக்கப்படுகின்றன. தமிழகத்துக்கு 517 இடங்கள் உள்ளன.

திருவள்ளூர் மாவட்டம் கோடுவளியில் உள்ள உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரிகளில் உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு (பி.டெக்) 40இடங்கள், பால்வளத் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு (பி.டெக்) 20 இடங்கள் உள்ளன. இதில், உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கான (பி.டெக்) 40 இடங்களில் மட்டும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 6 இடங்கள் (15 சதவீதம்) போக, மீதமுள்ள 34 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன.

இதேபோல், ஓசூர் மத்திகிரியில் உள்ள கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு (பி.டெக்) 40 இடங்கள்உள்ளன. இந்த 3 பட்டப்படிப்புகளும் 4 ஆண்டுகள் கொண்டது.

இந்நிலையில், பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச் மற்றும் பி.டெக் படிப்புகளுக்கு 2022 - 23-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு https://adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் வரும் 12-ம் தேதி காலை10 மணி முதல் 26-ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

அயல்நாடு வாழ் இந்தியர், அயல்நாடு வாழ் இந்தியரின் வாரிசுகள், அயல்நாடு வாழ் இந்தியரின் நிதி ஆதரவு பெற்றோர் மற்றும் அயல்நாட்டினர் ஆகியோர்களுக்கான இடஒதுக்கீடு, இணையதள விண்ணப்ப வழிமுறைகள் மற்றும் இதர விபரங்களையும் இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

இந்த படிப்புகளுக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது என்று தமிழ்நாடு கால்நடைமருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

Total Pageviews

Search This Blog