Breaking

Showing posts with label Departments of Higher Education. Show all posts
Showing posts with label Departments of Higher Education. Show all posts

Saturday, November 09, 2024

November 09, 2024

அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் பட்டப் படிப்புகள், ஆராய்ச்சிப் படிப்புகள், மாணவர்கள் சேர்க்கை முதலான விவரங்கள் அனைத்தையும் வழங்கும் உதவி மையம் (Help Desk) அமைக்கப்படும் - -உயர்கல்வித் துறை அமைச்சர்

Thursday, February 01, 2024

February 01, 2024

நாட்டில் உள்ள உயர்கல்வி நிறுவனங்கள் இனி A++, A+ Grade போன்ற தரங்களின் படி தரவரிசைப் படுத்தப்படாது: NAAC

நாட்டில் உள்ள உயர்கல்வி நிறுவனங்கள் இனி A++, A+ Grade போன்ற தரங்களின் படி தரவரிசைப் படுத்தப்படாது: NAAC Higher education institutions in the country will no longer be ranked according to grades like A++, A+ Grade: NAAC

'அங்கீகாரம் பெற்றவை' அல்லது 'அங்கீகாரம் பெறாதவை' என்று மட்டுமே வகைப்படுத்தப்படும் என தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று கவுன்சில்(NAAC) அறிவிப்பு

நாட்டில் உள்ள உயர்கல்வி நிறுவனங்கள் இனி A++, A+ Grade போன்ற தரங்களின் படி தரவரிசைப் படுத்தப்படாது என்று தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று கவுன்சில்(NAAC) அறிவித்துள்ளது.

உயர்கல்வி நிறுவனங்களின் கல்வித் தரத்தை மதிப்பீடு செய்யும் இந்த கமிட்டி, இனிவரும் காலங்களில் 'அங்கீகாரம் பெற்றவை' அல்லது 'அங்கீகாரம் பெறாதவை' என்று மட்டுமே வகைப்படுத்தப்படும் என்று NAAC அறிவித்துள்ளது

Wednesday, January 17, 2024

January 17, 2024

முதுநிலை, உயர் கல்வி மாணவர் விவரங்களை பதிவேற்ற உத்தரவு



முதுநிலை, உயர் கல்வி மாணவர் விவரங்களை பதிவேற்ற உத்தரவு Order to upload details of Master, Higher Education students

தேசிய மருத்துவ ஆணையத்தின் முதுநிலை மருத்துவக் கல்வி வாரிய துணைச் செயலர் அஜேந்தர் சிங், அனைத்து மாநில மருத்துவக் கல்வி இயக்குநர்களுக்கும், மருத்துவக் கல்லூரிகளின் டீன்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: முதுநிலை மருத்துவப் படிப்புகள் மற்றும் உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தேசிய மருத்துவ ஆணையத்தின் (என்எம்சி) வழிகாட்டுதலின்படி வெளிப்படைத்தன்மையுடன் மேற்கொள்ளப்பட வேண்டும். நீட் தேர்வு தகுதி மற்றும் அனுமதிக்கப்பட்ட இடங்களின் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும்.

அதன்படி, நடப்பாண்டில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் விவரங்கள், படிப்பின் விவரம், இடஒதுக்கீடு விவரம் உள்ளிட்டவற்றை என்எம்சி இணையதளத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கான தெரிவுப் பகுதியில் பதிவேற்ற வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Friday, November 24, 2023

November 24, 2023

Increase in Higher Education Fees for Children of Teachers - ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கான உயர்கல்வி கட்டணத் தொகை அதிகரிப்பு: பள்ளிக்கல்வித் துறை



அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கான உயர்கல்வி கட்டணத்தொகை உயர்வு

கல்வித்துறை தகவல் - CLICK HERE TO DOWNLOAD PDF

ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கான உயர்கல்வி கட்டணத் தொகை அதிகரிப்பு: பள்ளிக்கல்வித் துறை Increase in Higher Education Fees for Children of Teachers: Department of School Education

சென்னை: உயர்கல்வி பயிலும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கான கல்விக் கட்டண தொகையை ரூ.50 ஆயிரம் வரை உயர்த்தி பள்ளிக்கல்வித் துறை அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை சார்பில் வெளியிடப்பட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும், ஓய்வுபெற்ற, பணியின்போது உயிரிழந்த ஆசிரியர்களின் குழந்தைகள், தொழில்நுட்பக் கல்வி, டிப்ளமோ, பட்டப்படிப்பு போன்ற உயர்கல்வி படிப்பதற்கான கல்விக் கட்டணத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, 2021-22 கல்வியாண்டு வரை பட்டப் படிப்புக்கு ரூ.5 ஆயிரம், டிப்ளமோ படிப்புக்கு ரூ.2,500 என வழங்கப்பட்டது.


இந்த தொகை 2022-23 கல்வியாண்டு முதல் பட்டப்படிப்புக்கு ரூ.10 ஆயிரம், டிப்ளமோ படிப்புக்கு ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்பட்டது. இந்நிலையில், முதல்வர் அறிவிப்பின்படி மாநில தேர்வுக்குழு தேர்வு செய்யும் தகுதியுள்ள ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு தொழிற்கல்வி பட்டப்படிப்பு படிக்க கல்வி நிறுவனங்களால் நிர்ணயிக்கப்படும் உயர்கல்வி கட்டணத் தொகை அல்லது ரூ.50 ஆயிரம், தொழிற்கல்வி டிப்ளமோபடிக்க கல்லூரிகளால் நிர்ணயிக்கும் கல்வி கட்டணத் தொகை அல்லது ரூ.15 ஆயிரம் இதில் எது குறைவோ அந்த தொகை அளிக்கப்படும். இந்த உயர்கல்வி கட்டணத் தொகை, தேசிய ஆசிரியர் நலநிதியில் வைப்பீடு செய்யப்பட்டுள்ள தொகையில் பெறப்படும் வட்டித் தொகையில் இருந்து மட்டுமே வழங்கப்பட வேண்டும். இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

Thursday, November 09, 2023

November 09, 2023

உயர்கல்வி நிறுவனங்களில் சேர 25க்கும் மேற்பட்ட நுழைவுத்தேர்வு - மாணவர்கள் விண்ணப்பிக்க சிறப்பு ஏற்பாடு



The engineering entrance exams applicable for the admissions to top engineering colleges in Tamil Nadu are JEE Main, TANCET, NATA, GATE, VITMEE, IMU CET and others. Applicants shortlisted on the basis of performance in entrance exam will be called for the counselling and admission process later.

உயர்கல்வி நிறுவனங்களில் சேர 25க்கும் மேற்பட்ட நுழைவுத்தேர்வு - மாணவர்கள் விண்ணப்பிக்க சிறப்பு ஏற்பாடு More than 25 Entrance Exams for Higher Education Institutions - Special arrangement for students to apply

நுழைவுத்தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்க சிறப்பு ஏற்பாடு இதுகுறித்து, பள்ளி கல்வியின் சமக்ர சிக் ஷா என்ற ஒருங்கிணைந்த கல்வி திட்ட பிரிவு சார்பில், முதன்மை கல்வி அலுவலர்கள் வழியே, அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு உள்ளன.அதில் கூறியிருப்பதாவது:

பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், ஐ.ஐ.டி., போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர, ஜே.இ.இ., போன்ற, 25க்கும் மேற்பட்ட நுழைவு தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அவற்றில் சேருவதற்கு உரிய வழிமுறைகளை தெரிவிக்க வேண்டும்.நுழைவு தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க, அரசு பள்ளிகளிலேயே உரிய ஏற்பாடுகளை மேற்கொண்டு, மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க ஆசிரியர்கள் உதவ வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Monday, October 02, 2023

October 02, 2023

Incentive salary hike for teachers - உயர்கல்வி முடித்த ஆசிரியருக்கு மீண்டும் ஊக்க ஊதிய உயர்வு!

உயர்கல்வி முடித்த ஆசிரியருக்கு மீண்டும் ஊக்க ஊதிய உயர்வு! Incentive salary hike for teachers who have completed higher education!

உயர்கல்வி முடித்த ஆசிரியருக்கு ஊக்க ஊதிய உயர்வு: மீண்டும் வழங்க மாவட்ட செயற்குழுவில் தீர்மானம்

'உயர்கல்வி முடித்த ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்க ஊதிய உயர்வை, மீண்டும் வழங்க வேண்டும்' என, செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின், மாவட்ட செயற்குழு கூட்டம், நாமக்கல்லில் நேற்று நடந்தது. மாநில துணை தலைவர் அத்தியப்பன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் முத்து வரதப்பன் வரவேற்றார். மாநில சட்ட ஆலோசகர்

சக்திவேல் முன்னிலை வகித்தார். மாநில தலைவர் தியாகராஜன் கோரிக்கை குறித்து விளக்கினார். நேரடி நியமன முதுகலை ஆசிரியர் சங்க மாநில தலைவர் ராமு, துணை பி.டி.ஓ., ராஜேந்திர பிரசாத் ஆகியோர் பேசினர்.

கூட்டத்தில், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஆசிரியர்களுக்கு பணிப்பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஈட்டிய விடுப்பை ஒப்படைப்பு செய்து, பணப்பலனை பெற்றுத்தர வேண்டும். பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டத்தில், ஒவ்வொரு பாடத்திற்கும், 10 மதிப்பெண்கள் அக மதிப்பீடு மதிப்பெண்களாக வழங்கப்படுவது போல, பத்தாம் வகுப்பு பாடத்திட்டத்திலும், அனைத்து பாடத்திற்கும் அகமதிப்பீடு மதிப்பெண்கள் வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஆசிரியர் எண்ணிக்கை உயர்நிலைப்பள்ளிக்கு, -8, மேல்நிலைப்பள்ளிக்கு, -11 என்ற பழைய முறையே தொடர வேண்டும். உயர்கல்வி முடித்த ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்க ஊதிய உயர்வை, மீண்டும் வழங்க வேண்டும். பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து, ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் மற்றும் சிறந்த ஆசிரியர், மாணவர்களை பாராட்டி பரிசுகள் வழங்கப் பட்டன

Friday, September 29, 2023

September 29, 2023

மாணவர்களுக்கு உயர்கல்வித்துறை இயக்குநர் எச்சரிக்கை!



வாட்ஸ்அப்பில் அறிமுகம் இல்லாத நபர்களின் வீடியோ அழைப்பை கல்லூரி மாணவர்கள் ஏற்க வேண்டாம் என புதுச்சேரி மாநில உயர்கல்வித்துறை இயக்குநர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதிகரித்து வரும் சைபர் கிரைம் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் விதமாக புதுச்சேரி உயர்கல்வித்துறை இயக்குநர் அமன் சர்மா கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். அதில் கல்லூரி மாணவர்கள் தேவையில்லாத, அவர்களது செல்போன்களுக்கு வரும் அறிமுகம் இல்லாதா வாட்ஸ்அப் வீடியோ அழைப்புகளை ஏற்க வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார். சமூக வலைத்தளத்தில் தங்களின் புகைப்படங்களை பதிவிடவோ, பகிரவோ வேண்டாம் என்றும் தேவையில்லாத இணையதள முகவரிக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சைபர் கிரைம் தொடர்பான புகார்களுக்கு (0413-2276144) கீழ்கண்ட எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

Tuesday, August 29, 2023

August 29, 2023

உயர்கல்வி நிறுவன விழிப்புணர்வு: தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ‘சிறந்த வழிகள்’ நிகழ்ச்சி



உயர்கல்வி நிறுவன விழிப்புணர்வு: தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ‘சிறந்த வழிகள்’ நிகழ்ச்சி

பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) செயலர் மணீஷ் ஆர்.ஜோஷி, அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்திய உயர்கல்வி நிறுவனங்கள் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கில், கடந்த 26-ம் தேதி முதல் ஒவ்வொரு சனிக்கிழமையும் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ‘சிறந்த வழிகள்’ என்ற தொடர் நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுகிறது. இந்தத் தொடரின் மூலம், உயர்கல்வி நிறுவனங்கள் தங்களது வளாகம், நிறுவனத்தின் வசதிகள் உள்ளிட்டவற்றை காட்சிப்படுத்தவும், துணைவேந்தர்கள் மற்றும் இயக்குநர்களுடனான நேர்காணல் உரையாடல்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்களுடனான கலந்துரையாடல்களை வெளிகொணரவும் முடியும். எனவே, அனைத்து உயர் கல்வி நிறுவனங்களும், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 9.30 மணிக்கு தூர்தர்ஷன் தொலைக்காட்சி ஒளிபரப்பைப் பார்க்க ஊக்குவிக்க வேண்டும்.

Total Pageviews

Search This Blog