Breaking

Showing posts with label Today Kalviseithi. Show all posts
Showing posts with label Today Kalviseithi. Show all posts

Monday, September 05, 2022

September 05, 2022

LLM சட்டப்படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்!

எல்எல்எம் படிப்பில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

திருச்சி: ஸ்ரீரங்கம் சட்டப்பள்ளியில் எல்எல்எம் படிப்பில் சேர திங்கள்கிழமை(செப்.5) முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

கடந்த 2012-2013 கல்வி ஆண்டு முதல் திருச்சி நவலூர் குட்டப்பட்டியில் தேசிய சட்டப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு ஒருங்கிணைக்கப்பட்ட ஐந்தாண்டு இளநிலை சட்டப் படிப்புகளும், இரண்டாண்டு முதுநிலை பட்டப்படிப்புகளும் பயிற்றுவிக்கப்படுகிறது. இச்சட்டப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிப்பதற்கு பொது சட்ட நுழைவுத் தேர்வில் (CLAT) தேறியிருக்க வேண்டும்.

இந்நிலையில், எல்எல்எம் படிப்பில் சேர திங்கள்கிழமை(செப்.5) முதல் www.tndalu.ac.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tuesday, August 30, 2022

August 30, 2022

MA படிப்பு: செப்., 30 வரை அவகாசம்!

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

தமிழ்க் கல்வியில் உயராய்வினை வளப்படுத்துதல், தமிழாய்வாளருக்குத் தேவையான ஆவணங்களை உருவாக்குதல், தமிழ், தமிழர், இலக்கியம், வரலாறு, மருத்துவம், கல்வி, கலை, சமுதாயம், பண்பாடு, அறிவியல் எனத் துறைதோறும் தமிழாய்வை மேம்படுத்துதல், தமிழின் பெருமையை அயலவருக்குச் சிறப்பாக எடுத்துரைத்தல், உலகத் தமிழறிஞரிடையே தொடர்பு கொண்டு தமிழறிஞர்களும், நிறுவனமும் பயன்கொளும் நிலையில் தமிழாய்வினை வளர்த்தல் என்பன உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் அடிப்படை இலக்காக, தலையாய நோக்கமாக அமைகின்றன.

தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத பிற இந்திய மொழியினருக்கும் பிற நாட்டினருக்கும் கற்பித்தல் என்பது பிறிதொரு நோக்கமாகும். இவற்றின் அடிப்படையில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் பல்வேறு திட்டங்களின் வழிச் செயலாற்றி வருகிறது.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில், ஒருங்கிணைந்த ஐந்தாண்டு தமிழ் முதுகலை படிப்புக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம், செப்., 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில், ஐந்தாண்டு கால முதுகலை தமிழ் படிப்பு உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க இந்த மாதம் வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. தற்போது, மாணவர்களின் வேண்டுகோளை ஏற்று, செப்., 30 வரை அவகாசம் நீட்டிக்கப் பட்டுள்ளது. இதற்கான சேர்க்கை விண்ணப்பங்களை, www.ulakaththamizh.in என்ற இணையதளம் வாயிலாக பெறலாம்.

மேலும் விபரங்களுக்கு, 'இயக்குனர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மைச் சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை -- 113' என்ற முகவரியில், நேரில் அணுகி தெரிந்து கொள்ளலாம். மேலும், 044 - 2254 2992 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Friday, August 26, 2022

August 26, 2022

B.Sc., (Life Science) முடித்த SC / ST மாணவர்களுக்கு மருத்துவத் துறை சார்ந்த மென்பொருள் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு! செய்தி வெளியீடு எண் : 1464 நாள் : 25.08.2022

B.Sc., (Life Science) முடித்த SC / ST மாணவர்களுக்கு மருத்துவத் துறை சார்ந்த மென்பொருள் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு!

செய்தி வெளியீடு எண் : 1464

நாள் : 25.08.2022

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகம்

B.Sc (Life Science) முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ/மாணவியருக்கு இலவசமாக தாட்கோ மூலம் Medical Coding Training பயிற்சி அளித்து பல்வேறு மருத்துவத்துறை சார்ந்த மென்பொருள் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு வழங்கும் திட்டம்

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இளங்கலை அறிவியல் (ite Science) முடித்த மாணவர் மற்றும் மாணவியர்களுக்கு இலவசமாக Medical Coding Training குறுகிய கால பயிற்சியாக அளித்து பல்வேறு மருத்துவத் துறை சார்ந்த மென்பொருள் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு அளிக்க கூடிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதற்கான தகுதிகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியிளர் மாணவர் மற்றும் மாணவியர்களாக இருக்க வேண்டும். இளங்கலை அறிவியல் (Life Science) பட்டப்படிப்பில் மொத்த மதிப்பெண்களில் 60 சதவீதம் பெற்றிருக்கவேண்டும் தகுதி வாய்ந்த நிறுவனங்கள் மூலம் இணையதளம் வழியாக மூன்று மாதங்கள் பயிற்சி அளிக்கப்படும் பயிற்சிக்கான கட்டணத் தொகை ரூ.15,000/ தாட்கோ வழங்கும். பயிற்சி முடிந்தவுடன் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டு தேர்வு பெற்ற மாணக்கர்களுக்கு i50 (nternational. Organization for Standardization) தரத்துடன் கூடிய சான்றிதழ் அளிக்கப்படும் மேலும் பயிற்சியில் தேர்ந்த மாணக்கர்களுக்கு நேர்முக தேர்வின் மூலம் நூறு சதவீதம் மருத்துவத் துறை மென்பொருள் நிறுவனங்கள் மூலம் வேலை வாய்ப்பு பெற்றுத் தரப்படும் வேலையில் சேர்ந்து 6 மாதங்களுக்கு பிறகு வீட்டிலிருந்த படியே அந்நிறுவனத்தின் மூலம் தொடர்ந்து பணி மேற்கொள்ளலாம்.

ஆரம்ப கால மாத ஊதியமாக ரூ12,000/- முதல் ரூ.15,000/-வரை பெறலாம். பின்னர் திறமைக்கேற்றவாறு ரூ,50,000/- முதல் ரூ.70,000/-வரை பதவி உயர்வின் அடிப்படையில் குறுகிய காலத்தில் மாத ஊநியமாக பெறலாம். இத்திட்டத்தில் பதிவு செய்வதற்கு நாட்கோ இணையதளம் www.tahdco.com என்ற முகவரியில் பதிவு மேற்கொள்ளலாம்.

வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9

Thursday, August 25, 2022

August 25, 2022

சுய வேலைவாய்ப்பு திட்டம்: சிறப்புப் பிரிவுக்கு சலுகைகள்

சுய வேலைவாய்ப்பு திட்டம்: சிறப்புப் பிரிவுக்கு சலுகைகள்

வேலைவாய்ப்பற்றோருக்கு சுய வேலைவாய்ப்பு அளிக்கும் திட்டத்தில், சிறப்புப் பிரிவினா் பயன்பெறும் வகையில் நிபந்தனைகள் தளா்த்தப்பட்டுள்ளன. இதற்கான உத்தரவை சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறைச் செயலா் வி.அருண்ராய் பிறப்பித்துள்ளாா். அவரது உத்தரவு:

வேலைவாய்ப்பு இல்லாத இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரும் திட்டம் 2010-2011-ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டம் முழுவதும் தமிழ்நாடு அரசின் நிதியுதவியால் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நிதி சாா்ந்த உதவிகள் அளிக்கப்படுகின்றன.

இந்தத் திட்டத்தில் இணைய குறைந்தபட்ச வயது 18 ஆகவும், அதிகபட்ச வயது 35 ஆகவும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினா், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினா், பிற்படுத்தப்பட்ட வகுப்பினா், பெண்கள், சிறுபான்மையினா், முன்னாள் ராணுவ வீரா்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோா் 45 வயது வரை இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். எட்டாம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருப்பதுடன், ஆண்டு குடும்ப வருமானம் ரூ.5 லட்சத்தைத் தாண்டக் கூடாது.

மாற்றுத் திறனாளிகள், மனநலன் பாதிக்கப்பட்ட குழந்தைகளை கொண்டிருக்கக் கூடிய பெற்றோா்கள் இந்தத் திட்டத்தின் கீழ் பயன் பெறுவதற்கான வயது வரம்பு 45-லிருந்து 55 ஆக உயா்த்தப்படுகிறது. மேலும், கல்வித் தகுதி 8-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற நிபந்தனையும் நீக்கப்படுகிறது. இதற்கான உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது.

Tuesday, August 23, 2022

August 23, 2022

இல்லம் தேடிக்கல்வித் திட்ட தன்னாா்வலா்கள் பயிற்சி முகாம்

இல்லம் தேடிக்கல்வித் திட்ட தன்னாா்வலா்கள் பயிற்சி முகாம்

மதுரையில் இல்லம் தேடிக்கல்வித்திட்ட தன்னாா்வலா்களுக்கு நான்காம் கட்ட பயிற்சி முகாம் நடைபெற்றது.

மதுரை தென்சரகம், என்.எஸ்.எம். உயா்நிலைப் பள்ளியில் இல்லம் தேடிக் கல்வித்திட்ட தன்னாா்வலா்களுக்கான நான்காம் கட்டப் பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. முகாமை வட்டாரக் கல்வி அலுவலா் சீனிவாசன் தொடக்கி வைத்துப்பேசினாா்.

சிறப்பாக கற்றல் உபகரணங்களைக் காட்சிபடுத்திய தன்னாா்வலருக்கு வட்டாரக்கல்வி அலுவலா் மோசஸ் பெஞ்சமின் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா். பயிற்சி முகாமில் எண்ணும் எழுத்தும் திட்டம் குறித்தும் , எண்ணும் எழுத்தும் பயிற்சி திட்டத்தின் குறைதீா் கற்பித்தல் எப்படி வழங்குவது என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. முகாமில், வட்டார வள மையத்தின் மேற்பாா்வையாளா் ரேகா, மாநில கருத்தாளா் க.சரவணன், ஐ.டி.கே வட்டார வைரமுத்து, ஐடிகே மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ரெ. சிவகுருநாதன் ஆசிரியா் பயிற்றுநா்கள் உமா மகேஸ்வரி , க.முத்துமாரி, சொ. தனமீனாட்சி, கா.ஜெயலெட்சுமி ஆகியோா் கலந்து கொண்டனா்.

Monday, August 22, 2022

August 22, 2022

வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் - 22.08.2022

வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் - 22.08.2022

குடியாத்தம் நெல்லூர் பேட்டை அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி தையல் ஆசிரியை நாகேஸ்வரி தற்கொலை தொடர்பான புகாரில் பள்ளி தலைமை ஆசிரியை பிரமிளா இவாஞ்சலின் சஸ்பெண்ட் வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனிசாமி நடவடிக்கை

Monday, August 08, 2022

August 08, 2022

கலை, அறிவியல் கல்லூரிகளில் பொதுப் பிரிவு கலந்தாய்வு தொடக்கம்: மாநிலக் கல்லூரியில் சேர கடும் போட்டி

கலை, அறிவியல் கல்லூரிகளில் பொதுப் பிரிவு கலந்தாய்வு தொடக்கம்: மாநிலக் கல்லூரியில் சேர கடும் போட்டி

சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் பொதுப் பிரிவு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் மொத்தம் 163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப் படிப்புகளில் 1.3 லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. இதற்கான மாணவர் சேர்க்கை இணையவழியில் நடத்தப்பட்டது.

அதன்படி, விண்ணப்பப் பதிவு கடந்த ஜூன் 20 முதல் ஜூலை 27-ம் தேதி வரை நடைபெற்றது. மொத்தம் 4 லட்சத்து 7,045 மாணவர்கள் சேர்க்கைக்கு பதிவு செய்தனர். கடந்த ஆண்டைக் காட்டிலும் கூடுதலாக 70 ஆயிரம் பேர் வரை கலை, அறிவியல் படிப்புகளில் சேர விண்ணப்பித்தனர். அதில் 3 லட்சத்து 34,765 பேர் முழுமையாக விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து, 2 லட்சத்து 98,056 பேர் விண்ணப்பக் கட்டணம் செலுத்தினர். விண்ணப்பங்களை முழுமையாக பூர்த்தி செய்து, கட்டணம் செலுத்தியவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு கல்லூரி அளவிலான தரவரிசைப் பட்டியல் 3 ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இந்தக் கலந்தாய்வு தரவரிசை பட்டியல் அடிப்படையில் கடந்த 5ம் தேதி தொடங்கியது. இதில் சிறப்பு விளையாட்டு, முன்னாள் ராணுவத்தினர் உள்ளிட்ட சிறப்பு பிரிவினருக்கு கலந்தாய்வு நடைபெற்றது. இந்நிலையில் இன்று முதல் பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடங்கி உள்ளது.

குறிப்பாக சென்னையில் உள்ள மாநிலக் கல்லூரி சேர கடும் போட்டி நிலவி வருகிறது. மொத்தம் 1000 இடத்திற்கு 1 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அண்மையில் வெளியான என்ஐஆர்எஃப் தரவரிசைப் பட்டியலில் தமிழகத்தின் 3 கல்லூரிகள் டாப் 10 பட்டியலில் மாநிலக் கல்லூரி இடம் பெற்றிருந்தது. இந்நிலையில் மாநிலக் கல்லூரியில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Thursday, July 28, 2022

July 28, 2022

பள்ளியில் திடீர் ஆய்வு வகுப்பறை ஓட்டைகளை சீரமைக்க கூட மதிப்பீடா? அதிகாரிகளுக்கு மேயர் பிரியா கிடுக்கிப்பிடி கேள்வி

சிறுசிறு வேலைக்கு கூட மதிப்பீடு வேண்டுமா என அரசு பள்ளியில் ஆய்வுக்கு சென்ற மேயர் பிரியா அதிகாரிகளிடம் கிடுக்கிபிடி கேள்வி கேட்டார். மேலும், உடனே வகுப்பறைகளை சீரமைக்கவும் அதிரடியாக உத்தரவிட்டார். பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 44வது வார்டு, நியூ காமராஜர் நகர் பகுதியில் உள்ள நடுநிலைப்பள்ளியில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா நேற்று மாலை திடீரென ஆய்வு செய்தார். அவர், ஒரு வகுப்பறைக்குச் சென்றபோது வகுப்பறையில் ஆங்காங்கே ஓட்டையாக சரியாக கலவை பூசாமல் இருந்தது. இதை பார்த்த மேயர், குழந்தைகள் படிக்கும் பள்ளியில் ஏன் இந்த இடத்தை இப்படி வைத்துள்ளீர்கள் என கேட்டார். அதற்கு அதிகாரிகள், இதற்காக மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது என்றனர்.
அதற்கு மேயர், இந்த சிறிய வேலைக்கு கூட மதிப்பீடு செய்து அதன் பிறகுதான் வேலையை செய்வீர்களா என கேட்டார். உடனே அதிகாரிகள் உடனே முடித்து விடுகிறோம் என கூறினர். இன்று (நேற்று) இரவுக்குள் பணியை முடித்து எனது மொபைலுக்கு போட்டோ அனுப்பி வையுங்கள் என்று கூறினார். அடுத்த வகுப்பில் ஒரு மாணவன் பள்ளி சீருடை அணியாமல் வண்ண சீருடையில் இருந்தான். அந்த சிறுவனிடம், ஏன் பள்ளி சீருடை அணியவில்லை என கேட்டதற்கு, எனக்கு சீருடை தரவில்லை என கூறினான். இதுகுறித்து அருகில் இருந்த ஆசிரியரிடம் மேயர் விசாரிக்கையில், சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு மட்டுமே சீருடை வழங்க வேண்டும் என்ற ஆணை உள்ளது. இந்த சிறுவன் சத்துணவு சாப்பிடவில்லை என கூறினார். பிறகு பெரம்பூர் பழனி ஆண்டவர் கோயில் தெருவில் உள்ள மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்தார். அங்கு குறைவான அளவில் ஆட்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். ஏன் முக்கியமான சாலையில் இவ்வளவு குறைவாக ஆட்களை வைத்து வேலை செய்கிறீர்கள். அதிக ஆட்களை வைத்து வேலை செய்ய வேண்டியதுதானே என கேட்டு யார் உங்கள் கான்ட்ராக்டர் என கேள்வி கேட்டார். அதற்கு அங்கிருந்த அதிகாரிகள், நாளையிலிருந்து அதிக ஆட்களை வைத்து வேலை செய்கிறோம் என்று பதில் அளித்தனர். தொடர்ந்து, முத்தமிழ் தெரு பகுதியில் உள்ள மழை நீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்தார். அங்கும் பொதுமக்கள் பாதுகாப்பு இல்லாமல் பணிகள் நடப்பதாக குற்றம்சாட்டினர். இதையடுத்து, அதிகாரிகளை கடிந்துகொண்ட மேயர், தகுந்த பாதுகாப்புடன் பணிகளை செய்யுமாறு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது பெரம்பூர் எம்எல்ஏ ஆர்.டி.சேகர், தண்டையார்பேட்டை மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன், 44வது வார்டு கவுன்சிலர் சர்ப ஜெயாதாஸ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.
July 28, 2022

மகளை பள்ளிக்கு அனுப்பியதால் பெற்றோருக்கு நேர்ந்த துயரம்

16 வயது தலித் மாணவியை பள்ளிக்கு அனுப்பியதைக் கண்டித்து, ஒரு பிரிவினர், அவரது பெற்றோர் உள்ளிட்ட குடும்பத்தினரைக் கடுமையாக தாக்கிய விடியோ சமூக வலைத்தளங்களில் பரவியிருக்கிறது.

மத்தியப் பிரதேச மாநிலம் ஷாஜாபூரைச் சேர்ந்த கிராமத்தில், பெண்களை பள்ளிக்கு அனுப்பக் கூடாது என்ற விதியைத் தாண்டி, தங்களது மகளை பள்ளிக்கு அனுப்பியதால், பெற்றோர் மீது ஒரு பிரிவினர் கடும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அந்த விடியோவும், பள்ளிக்குச் சென்ற மாணவி, தன்னை அந்தப் பிரிவினர் எவ்வாறு மிரட்டுகிறார்கள் என்று கூறும் விடியோவும் அதிகம் பேரால் பகிரப்பட்டு வருகிறது.

இது குறித்து மாணவி கூறுகையில், பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த என்னை, கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு பிரிவினர் தடுத்து நிறுத்தி, என்ன தைரியம் இருந்தால் பள்ளிக்குச் செல்வாய் என்று கேட்டு மிரட்டியதாகவும், அவர்கள் தாக்கியதில் தன் குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் கடந்த வாரம் நடந்துள்ளது. இது குறித்த விடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதையடுத்து தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

காவல்துறை தரப்பில் கூறப்படுவது என்னவென்றால், இரு பிரிவினருக்கு இடையே இருந்த முன்விரோதம் காரணமாகவே இந்த சம்பவம் நடந்திருப்பதாகவும், விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறுகிறார்கள்.

Tuesday, July 26, 2022

July 26, 2022

தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழக கோட்பாடுகள் மற்றும் விதிமுறைகள் - TN PTA Rules And Regulations - PDF

Saturday, July 09, 2022

July 09, 2022

மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு செய்தி!

மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு செய்தி!


இடைநிலை ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு 11.07.2022 திங்கட்கிழமை காலை 8.30 மணிக்கு தொடங்கி தொடர்ந்து நடைபெறும் எனவும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு குறித்து பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கலாகிறது.

(இன்று 753 எண் வரைக்கும் கலந்தாய்வு நடந்து முடிந்துள்ளது)

Monday, April 11, 2022

April 11, 2022

பள்ளிக் கல்வி மானியக் கோரிக்கை முக்கிய தகவல்கள்

பள்ளிக் கல்வி மானியக் கோரிக்கை முக்கிய தகவல்கள்

1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர் சேர்க்கையில் தமிழ்நாடு முழுமையடைந்துள்ளது

100% மாணவர்கள் 1 முதல் 8-ம் வகுப்பு வரை சேர்ந்து படித்து வருகின்றனர்

9, 10-ம் வகுப்புகளில் மாணவர் சேர்க்கை விகிதம் 94.20%

11, 12-ம் வகுப்புகளில் மாணவர் சேர்க்கை விகிதம் 88.60% -

பள்ளிக்கல்வித்துறையின் சேவைகளை கணினி மயமாக்க நடவடிக்கை

அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் Smart Classes ஏற்படுத்தப்படும் -

பள்ளி நூலகங்களில் உள்ள புத்தகங்கள் பற்றி மாணவர்கள் அறிந்துகொள்ள தனி Mobile App உருவாக்கப்படும் - பள்ளிக்கல்வித்துறை

இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் சேர இதுவரை 6.72 லட்சம் தன்னார்வலர்கள் பதிவு செய்துள்ளனர் - பள்ளிக்கல்வித்துறை.

Wednesday, April 06, 2022

Sunday, April 03, 2022

April 03, 2022

கோடைவிடுமுறை நாட்கள் குறைப்பு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு

Last year due to Corona Plus 2 students were not selected and the score was calculated by the new calculation method. Examinations for 10th class were also canceled. Minister Mahesh Poyamozhi has assured that the general examination for Plus 2 and 10th class students will not be canceled this time. The summer vacation for students usually lasts more than a month and a half after the exams each year. But for the past one and a half years, students have been paralyzed at home and are now going to school to learn lessons.

Thus summer vacation has been reduced this academic year. The general examination for PL2 students usually starts in March. It is usually followed by Class 10 examinations and examinations for other classes.

But the general exams and final exams are going on till the end of May as the school live classes started late. Accordingly, the general examination for class 12 will begin on May 5 and end on May 28. Similarly, 11th class students will be able to walk from May 9th to 31st and 10th class students from 6th to 30th May. In addition, students in grades 6 to 9 will be required to take the final exam from May 5 to May 13.

May 13 has been declared as the last working day for students from 1st to 5th class. The Department of Education has announced that all classes for the next academic year (2022-23) will begin on June 13th. It has been informed that the first classes will be held on the 24th only for the 11th class students. Thus it is noteworthy that the school summer vacation period this year has been greatly reduced. மீண்டும் ஜூன் 13ம் தேதி பள்ளிகள் திறப்பு நடப்பு கல்வியாண்டில் கோடைவிடுமுறை நாட்கள் குறைப்பு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு கடந்த ஆண்டு கொரோனா காரணமாக பிளஸ் 2 மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படாமல் புதிய கணக்கீட்டு முறை மூலம் மதிப்பெண் கணக்கிடப்பட்டது. 10ம் வகுப்புகளுக்கும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இந்த முறை பிளஸ் 2, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படாது என அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி உறுதியாக தெரிவித்தார்.இந்த சூழ்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்து பொது தேர்வுக்கான அட்டவணைகளும் கல்வித் துறையால் வெளியிடப்பட்டன. வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் தேர்வுகள் முடிந்து மாணவர்களுக்கான கோடை விடுமுறை ஒன்றரை மாதங்களுக்கு மேல் இருக்கும். ஆனால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மாணவர்கள் வீடுகளில் முடங்கி கிடந்த சூழ்நிலையில் இப்போதுதான் பள்ளிகளுக்கு சென்று பாடங்களை கற்று வருகின்றனர்.எனவே, இந்த கல்வியாண்டில் கோடை விடுமுறையை குறைத்து உடனடியாக அடுத்த வகுப்புகளுக்கான பாடத்திட்டத்தை தொடங்கும் வகையில் விரைவாக பள்ளிகளை திறக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதனால் இந்த கல்வியாண்டில் கோடை விடுமுறை குறைக்கப்பட்டுள்ளது. பிளல் 2 மாணவர்களுக்கு பொதுத் தேர்வு மார்ச் மாதத்தில் தொடங்குவது வழக்கம். அதை தொடர்ந்து 10ம் வகுப்பு தேர்வுகளும் பிற வகுப்புகளுக்கான தேர்வுகளும் நடைபெறுவது வழக்கம். ஆனால் பள்ளி நேரடி வகுப்புகள் தாமதமாக தொடங்கியதால் பொதுத் தேர்வுகள் மற்றும் இறுதி தேர்வுகள் மே இறுதி வரை நடக்கிறது. அதன்படி 12ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு மே 5ம் தேதி தொடங்கி 28ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. அதேபோல், 11ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 9ம் தேதி தொடங்கி 31ம் தேதி வரையும் 10ம் வகுப்புகளுக்கு மே மாதம் 6ம் தேதி தொடங்கி 30ம் தேதி வரையிலும் நடக்க இருக்கிறது. இதுதவிர 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5ம் தேதி முதல் 13ம் தேதி வரை ஆண்டு இறுதித் தேர்வு நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மே 13ம் தேதி கடைசி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த கல்வியாண்டுக்கான (2022-23) அனைத்து வகுப்புகளும் ஜூன் 13ம் தேதி தொடங்கும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது. 11ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் 24ம் தேதி முதல் வகுப்புகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த ஆண்டு பள்ளி கோடை விடுமுறை காலம் வெகுவாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Total Pageviews

Search This Blog