Breaking

Showing posts with label இல்லம் தேடிக் கல்வி. Show all posts
Showing posts with label இல்லம் தேடிக் கல்வி. Show all posts

Saturday, July 23, 2022

July 23, 2022

இல்லம் தேடிக் கல்வி ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்கள் எண்ணிக்கை குறைப்பு!

இல்லம் தேடிக் கல்வி ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்கள் எண்ணிக்கை குறைப்பு!

தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையின் வாயிலாக மாதந்தோறும் பள்ளிக்கல்வி ஆணையர் அவர்கள் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெறும். இம்முறை சென்னை மண்டலத்தில் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டத்தில் ( 15.07.2022 ) இல்லம் தேடி கல்விக்கான மாவட்ட மற்றும் வட்டார அளவில் ஒரு ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் நியமிக்கப்பட்டு செயல்படவேண்டும் என்றும் , அதே கருத்தினை வலியுறுத்தி சிறப்பு பணி அலுவலர் அவர்களாலும் அறிவுரை வழங்கப்பட்டது.

அதன்படி மாவட்டத்திற்கு ஒரு ஆசிரியர் ஒருங்கிணைப்பாளரும் , ஒவ்வொரு வட்டாரத்துக்கும் ஒரு ஆசிரியர் ஒருங்கிணைப்பாளரும் நியமிக்கப்பட வேண்டும்.

இதையும் படிக்க | Palli Paarvai TNSED Administrators App - New User Manual - இனி வரும் நாட்களில் விடுப்பு மற்றும் பள்ளி ஆய்வுகள் இவ்வாறு தான் இருக்கும். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் அனைத்திற்கும் இது பொருந்தும் - PDF

தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்கள் இல்லம் தேடி கல்வி மையங்களில் சிறப்பாக செயல்படவும் , ஏனைய மீதமுள்ள ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்கள் மீளவும் பள்ளி பணியில் ஈடுபடவும் அறிவுறுத்தப்படுகிறது. அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள் இதில் தனிக்கவனம் செலுத்தி செயல்படுமாறும் தூத்துக்குடி முதன்மைக் கல்வி அலுவலர் செயல்முறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tuesday, June 14, 2022

June 14, 2022

இல்லம் தேடிக் கல்வி - Reading Marathon வாசிப்பு போட்டியில் வெற்றி பெற்ற ஒன்றியங்கள் பட்டியல் வெளியீடு.



இல்லம் தேடிக் கல்வி மையங்களில் ஜூன் 1 முதல் ஜுன் 12 வரை மாணவர்களுக்கு Reading Marathon வாசித்தல் பயிற்சிக்கான போட்டி நடத்தப்பட்டது.

Reading Along என்ற ஆப் மூலமாக Google நிறுவனத்துடன் இணைந்து பள்ளிக் கல்வித்துறை நடத்திய இந்த Marathon போட்டியில் விடுமுறை நாட்களிலும் ஆயிரக்கனக்கான மாணவர்கள் தமிழகத்தில் அனைத்து ஒன்றியங்களிலும் பங்கேற்றனர்.

இதில் அதிகமான வார்த்தைகளை சரியாக வாசிக்கும் ஒன்றியங்கள் முன்னிலைப்படுத்தப்பட்டு தினந்தோறும் Ranking List ஒன்றியவாரியாக வெளியிடப்பட்டுவந்தது. இறுதில் தமிழக அளவில் வெற்றிபெறும் ஒன்றியத்துக்கு பரிசுகளும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இன்நிலையில் நேற்றுடன் இந்த போட்டி நிறைவடைந்த நிலையில் முன்னிலை பெற்ற ஒன்றியங்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

413 வட்டாரங்களுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் திருச்சிராப்பள்ளி மாவட்டம் லால்குடி வட்டாரம் 62.82 இலட்சம் சொற்களைச் சரியாக வாசித்து முதலிடம் பெற்றுள்ளது.

அடுத்ததாக மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் வட்டாரம் ( 49.19 இலட்சம் ) மற்றும் மேலூர் வட்டாரம் ( 41.72 இலட்சம் ) ஆகியவை இரண்டாவது மூன்றாவது இடங்களைப் பெற்றுள்ளன

CLICK HERE Reading Marathon State Level Final List

Total Pageviews

Search This Blog