Breaking

Showing posts with label School Morning Worship Activities. Show all posts
Showing posts with label School Morning Worship Activities. Show all posts

Monday, September 18, 2023

September 18, 2023

School Morning Prayer Activities - பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 19.09.23

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 19.09.23

திருக்குறள் :

பால் :அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம் : தவம்

குறள் :262

தவமும் தவமுடையார்க்கு ஆகும் அதனை
அஃதிலார் மேற்கொள் வது.

விளக்கம்:

தவம் செய்வது தவம் செய்ய வல்லவருக்கு மட்டுமே இயலும் மற்றவர் முயற்சிப்பது பயன் தராது.

பழமொழி :

Cut your coat according to your cloth

வரவுக்குத் தக்க செலவு செய்

இரண்டொழுக்க பண்புகள் :

1. எனது நோட்டில் உள்ள காகிதம் அல்லது பேப்பர் கிழிக்க மாட்டேன்.

2 காகிதம் கிழித்தால் எனது இருப்பிடம் அசுத்தம் ஆவது மட்டும் அல்ல மரங்களை அழிக்கவும் அது மறைமுகமாக ஏதுவாகி விடும். 

பொன்மொழி :

மற்றவர்களிடம் பழகும் வித்தையையும், ஒழுக்கத்தையும் சிறு வயதிலேயே ஒருவன் கற்றுக்கொண்டானானால் அவனே வாழ்க்கையில் பெரிய மனிதன். தந்தை பெரியார் 

பொது அறிவு :

1. உலகிலேயே  ஆழமான ஆழி எது?

விடை: மரியானா ஆழி

2.உலகில் மிகப்பெரிய மலர் இனம் எது?

விடை: ரப்லேசியா அர்னால்டி

English words & meanings :

revitalize -restore strength புத்துயிர் ஊட்டு. aggression -violent behaviour வலுச்சண்டைக்குப் போதல்

ஆரோக்ய வாழ்வு : 

கொண்டைக்கடலை: சாதாரணமாக இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் ஒரு உணவாக கொண்டைக் கடலை உள்ளது. அதனால் அதிகப்பட்சமான மக்கள் கொண்டை கடலையை சுவைத்திருப்போம். கார்பன்சோ பீன்ஸ் என அழைக்கப்படும் கொண்டைக் கடலை புரதம், வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து ஆகியவற்றை மிகுதியாக கொண்டுள்ளது.

செப்டம்பர் 19

சுனிதா வில்லியம்ஸ் அவர்களின் பிறந்தநாள்

சுனிதா வில்லியம்ஸ் (பிறப்பு: செப்டம்பர் 19, 1965) ஒரு அமெரிக்க விண்வெளி வீராங்கனையும் கப்பல்படை அதிகாரியும் ஆவார்[1]. இவர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு 14ம் விண்வெளிப் பயணத்திற்கு உறுப்பினராக்கப்பட்டார், பின் அவர் 15ம் விண்வெளி பயணத்தில் இணைந்தார். விண்வெளியில் பயணம் செய்த பெண்களில் அதிக நேரம் விண்வெளியில் பயணம் செய்த சாதனையை (195 நாட்கள்) அவர் கொண்டிருக்கிறார்.

நீதிக்கதை

பழனியாண்டிக்கு சொந்தமாக வயல் ஒன்று இருந்தது. மற்றவர்கள் எல்லாம் வயலில் உழுகின்ற நேரம் பழனியாண்டி தன் வயலைப் பற்றி எந்த எண்ணமும் இல்லாமல் சும்மாவேயிருந்தான். இதனைக் கவனித்த பழனியாண்டியின் மனைவி வயலில் ஏர்கலப்பை பூட்டி உழும்படி கூறினாள். பழனியாண்டி அதனை ஒரு காதில் வாங்கி மறுகாதில் விட்டு விட்டான் . மற்ற விவசாயிகள் எல்லாம் வயலில் நீர் பாய்ச்சி விவசாய வேலையை ஆரம்பித்தார்கள். அதனைக் கண்ட பழனியாண்டி நமது வயலில் பின்னர் விவசாயம் செய்து கொள்ளலாம் என்று சும்மாவே இருந்து விட்டான்.அதனைக் கண்டு பழனியாண்டியின் மனைவிக்கு ஆத்திரமாக வந்தது. பழனியாண்டியை விவசாயம் செய்யும்படி வற்புறுத்தினாள்.சோம்பேறியான பழனியாண்டி அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று சும்மாவே இருந்துவிட்டான். பழனியாண்டியின் வீட்டிலிருந்த அரிசி மூட்டையில் உள்ள அரிசியெல்லாம் காலியாகத் தொடங்க, அவன் சாப்பாட்டிற்கு அரிசி வாங்க பணம் இல்லாமல் திண்டாடினான்.

அறுவடை காலம் நெருங்கியதும் மற்ற விவசாயிகள் தங்கள் வயலில் விளைந்த நெற்கதிர்களை அறுத்து, நெற்குவியல்களை மூட்டை மூட்டையாக எடுத்துச் சென்றார்கள்.அதனைப் பார்த்து பழனியாண்டியால் பொறாமைப் படத்தான் முடிந்தது. குறித்த காலத்தில் விவசாயம் செய்து முடிக்காததால் தன் குடும்பம இன்று வறுமையில் வாடுகிறதே என்று கவலையடைந்தான்.

இனிமேல் எந்த வேலையையும் காலம் பார்த்து செய்ய வேண்டுமென்று தன்னைத் திருத்திக் கொண்டான்.

நீதி:

பருவம் பார்த்து பயிர் செய்வதுபோல் எந்தச் செயலையும் காலம் பார்த்து உடனுக்குடன் செய்து முடிக்க வேண்டும்.

இன்றைய செய்திகள்

19.09.2023

*விடை பெற்றது பாராளுமன்ற பழைய கட்டிடம். புதிய கட்டிடத்தில் இன்று கோலாகல விழா.

*காலாண்டு தேர்வு இன்று தொடக்கம்: பொதுவான ஒரே வினாத்தாள் முறை மீண்டும் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

*நிபா வைரஸ்: கடந்த இரண்டு நாட்கள் பாசிட்டிவ் இல்லை. கேரள மாநில சுகாதாரத்துறை மந்திரி.

*திருப்பதி ரூ. 650 கோடியில் ஆறு கிலோமீட்டர் நீள மேம்பாலம் திறப்பு:
பஸ் நிலையத்தில் இருந்து மலையடிவாரம் வரை எளிதில் செல்லலாம்.

*கரீபியன் பிரீமியர் லீக்: ஒரே ஓவரில் 32 ரன்கள் குவித்த 
சாய்ஹோப்.

*21 ரன்னுக்கு ஆறு விக்கெட் ஒரே போட்டியில் பல சாதனைகளைப் படைத்த சிராஜ்.

Today's Headlines

*Valediction was given to Parliament Old Building. Grand ceremony  will  be there in the new building,Today.

 *Quarterly Exam Starts Today: Common Single Question Paper System is being implemented again.

 * Nipah virus: No positive for last two days.  Kerala State Health Minister.

 * Reopen of Rs.  650 crore  six kilometer long flyover in Tirupathi:
Will have easy access from the bus station to the foothills.

 *Caribbean Premier League: Scored 32 runs in one over
 Saihope.

 * Six wickets in 21 runs , player Siraj who set many records in one match today.

Prepared by

Covai women ICT_போதிமரம்

Thursday, December 01, 2022

December 01, 2022

School Morning Prayer Activities - பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 01.12.2022

  திருக்குறள் :

பால்: அறத்துப்பால் 

இயல்: இல்லறம்; 

அதிகாரம்: அன்புடைமை. 

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.

விளக்கம்:
அன்பு இல்லாதவர் எல்லாப்பொருள்களையும் தமக்கே உரிமையாகக் கொண்டு வாழ்வார்: அன்பு உடையவர் தம் உடமையும் பிறர்க்கு உரிமையாக்கி வாழ்வர்.

பழமொழி :

It is never too late to learn.

கற்பதற்கு காலம், நேரம் கிடையாது

இரண்டொழுக்க பண்புகள் :

1. செல்லும் இடமெல்லாம் ஒழுக்கம், நேர்மை, அன்பு எனும் விதைகளை விதைத்து செல்வேன்.

 2. அதன் மூலம் இவ்வுலகை நாம் நன்கு வாழக் கூடிய இடமாக மாற்ற முயற்சி செய்வேன்.

பொன்மொழி :

கல்வியின் நோக்கம் மாணவர்களின் மனதை உண்மைகளால் நிரப்புவது அல்ல. அவர்களுக்கு சிந்திக்கக் கற்றுக் கொடுப்பதே என்பதை நினைவில் கொள்ள வேண்டும். --ராபர்ட் மேனார்ட் ஹட்சின்ஸ்

பொது அறிவு :

1. காட்டு பூனையின் அறிவியல் பெயர் என்ன? 

பெலிஸ் டைகிரினா. 

2. இண்டிகா என்ற நூலை எழுதியவர் யார்? 

மெகஸ்தனிஸ்.

English words & meanings :

ceiling -top of a room, noun. ஒரு அறையின் கூரை. sealing - setting, closing an important document or things. மூடி சீல் வைத்தல். வினைச் சொல். both homonyms

ஆரோக்ய வாழ்வு :

கஸ்டர்ட் ஆப்பிள் என்று அழைக்கப்படும் சீத்தாப்பழம் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் சிறந்த மூலமாகும். இது பல்வேறு உயிரியல் செயல்முறைகளுக்கு முக்கியமானது. வைட்டமின்கள் ஏ மற்றும் சி உடன், இரும்பு, பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் தாமிரம் ஆகியவற்றின் கணிசமான அளவு இதில் உள்ளது. குளிர்காலத்தில் செரிமானம் குறையும் போது ஏற்படும் மலச்சிக்கலை இந்த உணவில் உள்ள நார்ச்சத்து மூலம் குணப்படுத்தும்

NMMS Q

3,9,27,4,16,64,5,25,______

விடை: 125

டிசம்பர் 01

உலக எய்ட்ஸ் நாள்

உலக எய்ட்ஸ் நாள் ஆண்டுதோறும் டிசம்பர் முதல் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் ஒரு கருப்பொருளின் அடிப்படையில் நிகழ்வுகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். இந்நாள் எய்ட்ஸ் நோய் மற்றும் அதன் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. எய்ட்ஸ் நாள் பற்றிய எண்ணக்கரு முதலாவதாக 1988 இல் நடைபெற்ற, எய்ட்ஸ் பற்றிய உலக சுகாதார அமைச்சர் மாநாட்டில் உருவானது. அதன் பிறகு அரசுகளும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இந்நாளை உலகம் முழுவதும் நடைமுறைப்படுத்தி வருகின்றன. 1981-ஆம் ஆண்டிலிருந்து 2007-ஆம் ஆண்டு வரை எய்ட்ஸ் நோயால் இறந்தவரின் எண்ணிக்கை 250 லகரங்களுக்கு மேல்.[1] மற்றும் 2007-ஆம் ஆண்டு வரை 332 லகரம் மக்கள் இந்நோயுடன் வாழ்ந்து வருகின்றனர்.இதனால் இந்நோய் வரலாற்றிலேயே மிக கொடூரமான தொற்றுநோயாக கருதபடுகிறது. சமீபத்திய சிகிச்சை முறைகளின் முன்னேற்றம் மற்றும் கண்காணிப்பின் கீழ் இருந்தும், எய்ட்ஸ் நோயால் உலகெங்கிலும் 2007-ஆம் ஆண்டில் 20 லகரம் உயிரிழப்பு ஏற்பட்டது
நீதிக்கதை

சிங்கமும் கழுதைப்புலியின் பங்கும்

அன்று ஒரு நாள் சிங்கமும் கழுதைப்புலியும் பசுவைப் பிடித்து வைத்திருந்தன. அடுத்தநாள் சிங்கம் பசுவைக் கொன்றது. கழுதைப்புலி தன் குட்டியை சிங்கத்திடம் அனுப்பி தன் பங்கை வாங்கிவரச் சொன்னது. கழுதைப்புலியின் பங்காக பசுவின் குடலை மட்டும் கொடுத்து அனுப்பியது சிங்கம். 

கழுதைப் புலியோ, நீ ஏன் குடலை மட்டும் கொண்டு வந்தாய்? அரைவாசிப் பங்கு கேட்கவில்லையா என்று கேட்டது. பெரியவர்கள் கொடுப்பதைத்தான் கொண்டு வர முடியும். நான் எப்படி சிங்கத்தோடு விவாதிக்க முடியும் என்றது குட்டி கழுதைப்புலி. 

அதைக்கேட்டு கோபமான கழுதைப்புலி அந்தக் குடலோடு சிங்கத்தைப் பார்க்கப் போனது. சிங்கம் உணவை உண்டு குகைக்குள் ஒய்வெடுத்துக் கொண்டிருந்தது. கழுதைப்புலி வந்ததைக் கண்டு ஏன் இங்கே வந்தாய்? என்று கர்ஜித்தபடி சிங்கம் கேட்டது. 

பசுவில் பாதி கேட்க வந்த கழுதைப்புலி பயந்து தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டு ராஜ சிங்கமே! நீங்கள் குடல் அனுப்பியதற்கு மிக்க நன்றி, ஆனால் அதனை உங்களிடமே சேர்க்க முடிவு செய்து விட்டோம். 

குடலை சிங்கத்திடம் கொடுத்துவிட்டுதிரும்பிய கழுதைப்புலியிடம் பசுவில் பாதி கேட்கப்போன நீங்கள் குடலையும் கொடுத்துவிட்டு வருகிறீர்களே? என்று கேட்டது குட்டி கழுதைப்புலி. 

மகனே! சிங்கம் மிகக் கொடூரமாக இருந்தது. அதைக்கண்டு நடுங்கிவிட்டேன். எனவே எனது பங்கையும் கொடுத்துவிட்டுப் பாராட்டிவிட்டு வந்தேன். எல்லாம் நன்மைக்காக என்றது தாய் கழுதைப்புலி. 

நீதி :
நம்மைவிட வலிமையானவர்களைக் கோபப்படுத்துவதை விட அவர்களை சாந்தப்படுத்துவதே பாதுகாப்பானது.

இன்றைய செய்திகள்

01.12.22

* தமிழக கல்வித்துறை வளாகம் பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம் என அழைக்கப்படும்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.

* தமிழகத்தில் நவம்பர்-29வரை 26.04 லட்சம் மின் இணைப்புகள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

* கங்கைகொண்ட சோழபுரத்தை அடுத்த மாளிகைமேட்டில் கிடைத்த பொக்கிஷங்களைப் பாதுகாக்கும் வகையில், அங்கு அரசு அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

* தமிழகம் முழுவதும் 38 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள 1,635 ஊழல் வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

*எதிரிகளின் ட்ரோன்களை அழிக்க பருந்துகளை பயன்படுத்தும் இந்திய ராணுவம்.

* உலகிலேயே முதல்முறையாக மூக்கு வழி கரோனா தடுப்பு மருந்துக்கு அனுமதி: பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியுள்ளது.

* வாரத்துக்கு 4 நாட்கள் வேலை திட்டம்: இங்கிலாந்து நிறுவனங்கள் அறிமுகம்.

* 48,500 ஆண்டுகள் பழமையான ஜோம்பி வைரஸ்: ஐரோப்பிய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு.

* கடைசி ஒருநாள் போட்டியும் மழையால் ரத்து. 1-0 என தொடரை கைப்பற்றியது நியூசிலாந்து.

* இளவேனில் வாலறிவன், பிரக்ஞானந்தாவுக்கு அர்ஜுனா விருது - ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார்.

* உலகக்கோப்பை கால்பந்து : ஈரானை வீழ்த்தி அமெரிக்க அணி வெற்றி.

Today's Headlines

* Tamil Nadu Education Department Campus to be called Professor Anbazhagan Education Campus: Chief Minister Stalin's announcement.

 * Minister Senthil Balaji said that 26.04 lakh electricity connections have been linked to Aadhaar in Tamil Nadu till November 29.

* Tamil Nadu Chief Minister M.K.Stalin has said that a government museum will be set up there to protect the treasures found in the mansion next to Gangaikonda Cholapuram.

 * 1,635 corruption cases pending for 38 years across Tamil Nadu should be completed expeditiously: Madras High Court orders.

 * Indian Army uses hawks to destroy enemy drones.

 * World's First Nasal Corona Vaccine Approved developed by Bharat Biotech.

 * 4 Days a Week Scheme: Introduction to UK Companies

 * 48,500-year-old zombie virus: discovery by European scientists

 * The last ODI was also canceled due to rain. New Zealand won the series 1-0.

 * Arjuna Award to Pragnananda ,ilavenil and valarivan presented by President Draupathi Murmu.

* Football World Cup: USA team wins by defeating Iran.

Tuesday, November 22, 2022

November 22, 2022

School Morning Prayer Activities - பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 23.11.2022


School Morning Prayer Activities - 23.11.2022

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 23.11.2022

திருக்குறள் :

பால் : அறத்துப்பால், 

அதிகாரம் - மக்கட் பேறு: 

குறள்:62 - 

எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்.

விளக்கம்:

பழி இல்லாத நல்ல பண்பு உடைய மக்களைப்பெற்றால் ஒருவனுக்கு ஏழு பிறவியிலும் தீவினைப் பயனாகிய துன்பங்கள் சென்று சேரா

பழமொழி :
Aspiring people are inspiring people.

ஆர்வம் உடையோரே ஆர்வத்தை தூண்ட முடியும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. நான் பிறருக்கு வலது கையால் செய்யும் உதவி இடது கைக்கு கூட தெரியாமல் செய்வேன்.

 2. உதவி பிறரின் வருத்தம் போக்க, பிறர் என்னை புகழ அல்ல

பொன்மொழி :

வேலை செய்வதற்கு ஏற்ற மிகவும் அமைதியான நேரம் இரவு. இது சிந்தனைக்குத் துணைபுரிகிறது. --அலெக்சாண்டர் கிரஹாம் பெல்

பொது அறிவு :

1. ஐந்து நதிகள் ஓடும் இந்திய மாநிலம் எது ? 

 பஞ்சாப். 

 2. ஆசியா கண்டத்தின் மிகப்பெரிய நகரம் எது? 

 டோக்கியோ.

English words & meanings :

bail -to clear water. நீரை வெளியேற்றுவது. verb. bail -temporary release of the prisoner. பிணை. transitive verb. வினைச் சொல். both homonyms 

ஆரோக்ய வாழ்வு :

பச்சையான பாதாம் வெப்பத்தை உற்பத்தி செய்கிறது., குறிப்பாக இந்தியா போன்ற ஈரப்பதமான, வெப்பமண்டல காலநிலையில், பாதாம் பருப்பை ஒரே இரவில் தண்ணீரில் அல்லது பாலில் ஊறவைத்து காலை உணவுடன் 6-7 பாதாம் சாப்பிடுவது சிறந்தது.

NMMS Q

உலோக பண்புகளையும் அலோக பண்புகளையும் பெற்ற தனிமங்கள் ---- என்று அழைக்கப்படுகின்றன. 

விடை - உலோகப் போலிகள் 

நவம்பர் 23 இன்று

கவிஞர் சுரதா அவர்களின் பிறந்தநாள்

சுரதா (Suratha; 23 நவம்பர் 1921 – 29 சூன் 2006) இயற்பெயர் இராசகோபாலன் தமிழகக் கவிஞரும் எழுத்தாளரும் ஆவார். கவிஞர் பாரதிதாசனிடம் கொண்ட பற்றுதலால்‌ பாரதிதாசனின் இயற்பெயராகிய சுப்புரத்னம் என்பதின் அடிப்படையில் தன் பெயரை சுப்புரத்னதாசன் என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்னும் பெயரில் பல மரபுக் கவிதைத் தொகுப்புகள் தந்தவர். செய்யுள் மரபு மாறாமல் எழுதிவந்த இவர் உவமைகள் தருவதில் தனிப்புகழ் ஈட்டியவர். இதனால் இவரை உவமைக் கவிஞர் என்று சிறப்பித்துக் கூறுவர்.


சர் ஜகதீஷ் சந்திர போஸ் அவர்களின் நினைவுநாள்

சர் ஜகதீஷ் சந்திர போஸ் (Jagadish Chandra Bose) (1858-1937) தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்ற உண்மையை உலகுக்கு வெளிப்படுத்திய இந்திய அறிவியலாளர்.[1] போசு வானொலி அறிவியலின் முன்னோடிகளில் ஒருவர் என ஐஇஇஇ அதிகாரப்பூர்வமாக நூறு வருடங்கள் கழித்து அறிவித்தது.

நீதிக்கதை

வியாபாரியின் கதை

ஒரு ஊரில் ஒரு வியாபாரி இருந்தான். அவன் நன்றாக உழைத்து பணத்தைச் சேர்த்தான். அதனால் அவனுக்கு பண ஆசை அதிகரித்து! மனநிம்மதி போய்விட்டது. 

ஒருநாள் இரவு திடீரென்று அவனுக்கு ஓர்! யோசனை தோன்றியது. சன்யாசியாகி விட்டால் மன நிம்மதி கிடைக்கும் என்று முடிவெடுத்தான். 

மறுநாளே, தன்னிடமிருந்த பணத்தையெல்லாம் ஒரு துணியில் மூட்டையாகக் கட்டிக் கொண்டு ஊரைவிட்டு காட்டுக்கு வந்தான். 

அங்கே ஒரு சன்யாசி தவம் செய்து கொண்டிருந்தார். அவரிடம் பல சிஷ்யர்கள் தொண்டு செய்து கொண்டிருந்தனர். அவர்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதைப் பார்த்து வியாபாரி, அந்த குருவை வணங்கி, சாமி நான் ஒரு வியாபாரி சம்பாதிக்க சம்பாதிக்க பண ஆசை நாளுக்கு நாள் அதிகரித்தது. மன நிம்மதி போய்விட்டது. நான் சேர்த்த பணமூட்டையை பெற்றுக் கொண்டு என்னையும் சிஷ்யனாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பணிவாகக் கேட்டான். 

அவன் கீழே வைத்த பணமூட்டையை, அந்தக் குரு எடுத்துக் கொண்டு, திடீரென்று ஓட ஆரம்பித்தார். வியாபாரிக்கு ஒன்றும் புரியவில்லை! அவனும் அவருக்குப் பின்னே ஓடினான். அவன் தன் பின்னால் ஓடிவருவதைக் கவனித்த குரு, இன்னும் வேகமாக ஓட ஆரம்பித்தார். வியாபாரியும் அய்யோ, என் பணமூட்டை... ! என்று கத்திக் கொண்டே அவர் பின்னால் ஓடினான். 

குரு பணமூட்டையுடன் வெகுதூரம் சென்றுவிட்டு, பிறகு மீண்டும் அவரது இடத்திற்கே வந்து பணமூட்டையை அதே இடத்தில் வைத்துவிட்டு, மீண்டும் சலனமில்லாமல் அமர்ந்து கொண்டார். 

நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு வியாபாரியும் குருவிடம் வந்தான். தனது பணமூட்டை இருப்பதைப் பார்த்து குழம்பிப்போனான். 

குரு அவனைப் பார்த்து மகனே, இன்னும் பண ஆசை உன்னைவிட்டுப் போகவில்லை! அதனால் நீ மீண்டும் வியாபாரம் செய். எனது ஆசிரமத்தில் உனக்கு இப்போதைக்கு இடமில்லை! சென்று வா... ! என்று சாந்தமாக உபதேசம் செய்தார். வியாபாரி தனது பணமூட்டையுடன் ஊர் திரும்பினான். 

நீதி :
அளவோடு சம்பாதித்தால் மனநிம்மதியுடன் இருக்கலாம்.

இன்றைய செய்திகள் - 23.11.22

* மதுரை மாவட்டத்தில், அரிட்டாபட்டி மற்றும் மீனாட்சிபுரம் கிராமங்களிலுள்ள 193.215 ஹெக்டேர் பரப்பிலான பகுதியை அரிட்டாபட்டி பல்லுயிர் பாரம்பரியத் தலமாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது மாநிலத்தின் முதல் பல்லுயிர் பாரம்பரியத் தலமாகும்.

* மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே இணையதளத்தில் மின்கட்டணம் செலுத்த முடியும் என்பதால் மின் நுகர்வோர் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.

* அரசு மருத்துவமனைகளில் செய்யப்படும் அறுவை சிகிச்சைகளுக்கான புதிய வழிகாட்டுதல்கள் வழங்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

* ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டத்தில் அங்கன்வாடி மையங்களில் உள்ள குழந்தைகளுக்கு, இந்த மாதம் முதல் வாரம் 3 முட்டை, சத்துமாவு மற்றும் செறிவூட்டப்பட்ட பிஸ்கெட்கள் வழங்குவதற்கான அரசாணை வெளியிப்பட்டுள்ளது.

* அரசு உத்தரவிட்டால் ஆக்கிரமிப்பு காஷ்மீரை திரும்பப் பெறும் பணியை முடிக்க ராணுவம் தயாராக இருக்கிறது என்று வடக்கு மண்டல ராணுவத் தளபதி லெப். ஜெனரல் உபேந்திர திவேதி தெரிவித்துள்ளார்.

* நடப்பு நிதியாண்டில் மத்திய அரசின் உணவு மானியம் ரூ.3 லட்சம் கோடியைத் தாண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

* இந்தோனேசியா நிலநடுக்கம்: பலி 252 ஆக அதிகரிப்பு; நிவாரண முகாம்களில் ஆயிரக்கணக்கானோர் தஞ்சம்.

* இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை ஆஸ்திரேலிய அணி 3-0 கணக்கில் முழுமையாக கைப்பற்றி உள்ளது.

* 2024 டி20 உலகக்கோப்பை தொடரை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

* கராத்தே 1 சீரியஸ் ஏ பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்தார் பிரனாய் சர்மா.

Today's Headlines

 * The Tamil Nadu government has declared an area of ​​193.215 hectares in Aritapatti and Meenakshipuram villages in Madurai district as Aritapatti Biodiversity Heritage Site.  It is the first Biodiversity Heritage Site in the state.

 * Electricity consumers are in trouble as they can pay electricity bill online only by linking Aadhaar number with electricity connection number.

 * Health Minister Mr.M. Subramanian has said that new guidelines will be issued for surgeries performed in government hospitals.

 * An order has been issued to provide 3 eggs, energy flour and enriched biscuits to children in Anganwadi centers in the Integrated Child Development Scheme from the first week of this month.

* Northern Zone Army Commander Lieut said that the army is ready to complete the task of returning occupied Kashmir if the government orders it.  General Upendra Dwivedi said.

 * It is estimated that the central government's food subsidy in the current financial year will be exceeded by Rs.3 lakh crore.

 * Indonesia earthquake: Death toll rises to 252;  Thousands sheltered in relief camps.

 * Australia has won the ODI series against England by 3-0.

* It has been decided to host the 2024 T20 World Cup in the USA and West Indies.

* Pranai Sharma became the first Indian to win a gold medal in Karate 1 Series A category.

Wednesday, November 16, 2022

November 16, 2022

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - School Morning Prayer Activities - 16.11.2022

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 16.11.2022

திருக்குறள் :

பால் : அறத்து பால்: 

அதிகாரம் - இல்வாழ்க்கை, 

குறள் -41 

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை.

விளக்கம்:
இல்லறத்தில் வாழ்பவனாகச் சொல்லப்படுகிறவன் அறத்தின் இயல்பை உடைய மூவருக்கும் நல்வழியில் நிலை பெற்ற துணையாவான்.

பழமொழி :

Crosses are ladders to heaven.

தடைகள் தான் சொர்க்கத்தின் ஏணிப்படிகள்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. எ‌ந்த காரியம் எ‌ன்றாலு‌ம் கடவுள் மற்றும் மன சாட்சிக்கு பயந்து செய்வேன்.

 2. மனிதர்கள் என்னை பார்க்க வேண்டும் என்று செய்ய மாட்டேன்.

பொன்மொழி :

ஒரு நிமிடம் தாமதமாகச் செல்வதை விட மூன்று மணிநேரம் முன்கூட்டியே செல்வது சிறந்தது. --வில்லியம் ஷேக்ஸ்பியர்

பொது அறிவு :

1. வீடுகளுக்கு நம்பர் கொடுக்கும் முறை எப்போது உருவானது?

 1463ஆம் ஆண்டு.

 2. கைபர் கணவாயின் நீளம் என்ன ? 

 33 மைல்கள்.

English words & meanings :

Homographs - same spelling with different meanings. ஒப்பெழுத்து. பல்பொருள் ஒரு மொழி 

ஆரோக்ய வாழ்வு :

உடலில் இருந்து ஃப்ரீ ரேடிக்கல்களை அகற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் நாவல் பழ விதைகளில் காணப்படுகின்றன. இது உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்க உதவுகிறது. 

NMMS Q

விஜயநகர கட்டிடத் தூண்களில் பெரும்பாலும் காணப்படும் விலங்கு எது? 

விடை : குதிரை

நீதிக்கதை

உழைப்பின் பயன்

ஒரு விவசாயிக்கு மூன்று மகன்கள் உள்ளனர். விவசாயிக்கு வயது அதிகமானதால் இறந்து போகும் நிலையில் இருந்தபோது, தம் பிள்ளைகள் பொறுப்பில்லாமல் இருப்பதை பற்றி கவலையாக இருந்தார். ஒரு நாள், அவர் தம் பிள்ளைகளுக்கு தன்னுடைய நிலங்களை அவர்களுக்குப் பிரித்துக்கொடுத்தார். அது மட்டுமல்லாமல், அந்த நிலங்களிலும் ஓரிடத்தில், ஓரடி ஆழத்தில் புதையல் இருப்பதாகச் சொன்னார். அதைத் தேடி எடுத்துக்கொள்ளும்படிச் சொல்லிவிட்டு இறந்து போனார். 

பிள்ளைகள் மூவரும் தந்தைக்குச் செய்ய வேண்டிய இறுதிக் காரியங்கள் அனைத்தையும் செய்தார்கள். அதன்பின், அவர் சொல்லிய புதையலை எடுப்பதற்காக நிலத்தைத் தோண்ட ஆரம்பித்தார்கள். முதலில் மூத்த மகனின் நிலம் முழுவதையும் ஒரு அடி ஆழத்துக்கு தோண்டினார்கள். புதையல் எதுவும் கிடைக்கவில்லை. 

எப்படியும் புதையலைக் கண்டுபிடித்து விட வேண்டும் என்ற வெறியில், இரண்டாவது மகனின் நிலத்தையும் தோண்டினார்கள். ஏமாற்றம்தான் மிஞ்சியது. இவ்வளவு தூரம் வந்தபின் எப்படி விட முடியும் என்று கடைசி மகனின் நிலத்தையும் தோண்டினார்கள். மறுபடியும் ஏமாற்றமே! மூவரும் சேர்ந்து தோண்டியது வீணாக வேண்டாம் என்று எண்ணி, அந்த நிலங்களில் விதை விதைத்து நீர் பாய்ச்சி உரம் போட்டார்கள். ஆண்டு முடிவில் அவர்கள் நிலத்தில் அமோக விளைச்சல். அறுவடை செய்து விற்றதில் அவர்களுக்குக் கொள்ளை லாபம். இப்படி உழைப்பால் வரும் பயனைத்தான் அப்பா புதையல் என்று குறிப்பிட்டார் என்று பிள்ளைகள் மூவரும் புரிந்து கொண்டார்கள். 

நீதி :
உழைப்பினால் வரும் பணம் அதிஷ்டம் தரும்.

இன்றைய செய்திகள்

16.11.22

* வாக்காளர் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய 7.10 லட்சம் பேர் விண்ணப்பம்.

* பாலாற்றில் 1,460 கனஅடிக்கு நீர்வரத்து அதிகரிப்பு: ஆற்றில் குளிப்பதை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு எச்சரிக்கை.

* தமிழகத்தில் தினசரி மின்தேவை சராசரியாக 2,000 மெகாவாட் குறைந்தது.

* ஆக்கிரமிப்பு கோயில் நிலங்களை மீட்க ஒத்துழைக்காத அதிகாரிகளுக்கு சிறை: உயர் நீதிமன்றம் எச்சரிக்கை.

* காஷ்மீரில் கடும் பனிப் பொழிவு - நெடுஞ்சாலைகள், கிராமங்கள் மாவட்டத் தலைநகரங்களில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளன.

* உலக மக்கள்தொகை எண்ணிக்கை 800 கோடியாக அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

* 2011-ஆம் ஆண்டு சோமாலியாவில் ஏற்பட்ட பஞ்சத்தில் 10 லட்சம் பேர் வரை உயிரிழந்தனர். அதேபோன்ற வறட்சி நிலையை சோமாலியா இந்த ஆண்டும் எதிர்கொண்டுள்ளது. வரும் மாதங்களில் சோமாலியாவின் நிலைமை மேலும் மோசமாகலாம் என ஐ.நா. எச்சரிக்கை விடுத்துள்ளது.

* இந்தியாவுக்கு எதிரான தொடர்; கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி அறிவிப்பு.

* இந்திய தேக்வாண்டோ (தற்காப்பு கலை) சம்மேளன தலைவராக ஐசரி கணேஷ் தேர்வு.

* 2022 பிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் வரும் நவம்பர் 20-ந்தேதி முதல் டிசம்பர் 18-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

Today's Headlines

* 7.10 lakh people applied for addition of their names and correction.

* Water flow rises to 1,460 cubic feet in Balaru: Public were warned to avoid bathing in river

 * Average daily power demand in Tamil Nadu fell by 2,000 MW.

* Jail for non-cooperative officials to recover encroached temple lands: High Court warns.

* Heavy snowfall in Kashmir - highways, villages cut off from district capitals.

 * According to the United Nations, the world population has increased to 8 billion.

 * In 2011 famine in Somalia killed up to 10 lakh people.  Somalia is  facing a similar drought this year also.  The situation in Somalia could worsen in the coming months, the UN warner.

*  Series against India;  New Zealand team announced their team headed by Kane Williamson.

* Aysari Ganesh elected as president of Indian Taekwondo (Martial Art)

* The FIFA World Cup 2022 will be held in Qatar from November 20 to December 18.


Tuesday, November 08, 2022

November 08, 2022

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 08.11.2022


  திருக்குறள் :

பால்: அறத்துப்பால்,

 அ‌திகார‌ம்: அறன் வலியுறுத்தல், 

குறள் :34, 

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற. 

விளக்கம்:
ஒருவன் தன்மனதில் குற்றம் இல்லாதவானாக இருக்க வேண்டும். அறம் அவ்வளவே: மனத்தூய்மை இல்லாத மற்றவை ஆரவாரத் தன்மை உடையவை.

பழமொழி :

It is most blessed to give than to receive.

ஏற்பதைவிட இடுவது சிறப்பு.

இரண்டொழுக்க பண்புகள் :

1. அன்பையும் மரியாதையும் பிறருக்கு தயங்காமல் கொடுப்பேன் 

2. மகிழ்ச்சி என்னும் பெரிய பழத்தை விட நம்பிக்கை என்னும் சிறிய விதை பெரிதாக வளர்ந்து அநேக பழங்கள் கொடுக்கும் எனவே நம்பிக்கை விதை செல்லுமிடமெல்லாம் விதைப்பேன்

பொன்மொழி :

ரோஜாவுக்காக நீங்கள் செலவழித்த நேரமே உங்கள் ரோஜாவை மிகவும் முக்கியமானதாக ஆக்குகிறது. --அந்துவான் து செயிந் தெகுபெறி

பொது அறிவு :

1. உடம்பில் உள்ள எலும்புகளில் மிக நீளமானது எது? 

 தொடை எலும்பு .

 2.காந்திஜி உருவம் பொறித்த அஞ்சல் அட்டையை முதல் முதலில் வெளியிட்ட நாடு எது ? 

 போலந்து.

English words & meanings :

Trichology - study of hair and it's disorders. Noun. முடி மற்றும அதன் தன்மைகள் குறித்த படிப்பு 

ஆரோக்ய வாழ்வு :

இருமல் மற்றும் சளி வராமல் தடுக்கும் குணம் முலேத்திக்கு உண்டு. இது உங்கள் உடலை காய்ச்சலுக்கு எதிராக பாதுகாக்கும். ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் ஒரு டேபிள் ஸ்பூன் முலேத்திப் பொடியைச் சேர்த்து, தினமும் குடித்துவர, குளிர்காலத்தில் தொண்டைத் தொற்று ஏற்படாமல் தடுக்கலாம்.

NMMS Q :

சமணப் பேரவை முதன் முதலில் எங்கு கூடி தங்களின் சமய போதனைகளையும் ஒழுக்க விதிகளையும் தொகுக்க முற்பட்டனர்? 

 விடை: பாடலிபுத்திரம்

நவம்பர் 08

வீரமாமுனிவர் அவர்களின் பிறந்தநாள்


வீரமாமுனிவர் (ஆங்கிலம்: Constanzo Beschi, நவம்பர் 8, 1680 – பெப்ரவரி 4, 1747)[1] என்று அழைக்கப்படும் கான்சுடான்சோ பெசுக்கி என்பவர் இத்தாலிய நாட்டு கிறித்தவ மத போதகர் ஆவார். இவர் இத்தாலி நாட்டிலுள்ள கேசுதிகிலியோன் என்னும் இடத்தில் பிறந்தார். தொன்னூல் விளக்கம் என்ற நூலில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்து இலக்கணங்களை 370 நூற்பாக்களில் எடுத்துரைத்தார்
திருக்குறளில் அறத்துப்பாலையும், பொருட்பாலையும் இலத்தீன் மொழியில் பெயர்த்தவர் வீரமாமுனிவர்.
காவியத்தில் தேம்பாவணி இவர் இயற்றியது. மூன்று காண்டங்களில் 36 படலங்களைக் கொண்டு மொத்தமாக 3615 விருத்தம்|விருத்தப் பாக்களால் ஆனது இந்தக் காவியம். 
நீதிக்கதை

பிச்சைக்காரனும் தங்க நாணயமும்

ஒரு ஊரில் பிச்சைக்காரன் ஒருவன் வீடு வீடாக உணவுக்காக அலைந்தான். அவன் மிகவும் அசிங்கமாக, கிழிந்த உடைகளோடு இருந்தான். ஒரு பழைய கோணிப்பையே அவனுக்கு உடமையாக இருந்தது. ஒவ்வொரு வீடாகப்போய் பார்த்து விட்டு எதுவும் கிடைக்காவிட்டால் அந்த வீட்டின் முன்னே போய் நின்று வீடு மிகப் பெரியது, ஆனால் இங்குள்ளவர்களுக்குப் பணம் நிறைய இருந்தும் இன்னும் அதிகமாகவே எதிர்பார்க்கிறார்கள். கடைசியில் எல்லாவற்றையும் இழப்பார்கள் என்று சொன்னான். 

இன்னொரு வீட்டுக்குப் போனான். உணவு கிடைக்கவிலை. இந்த வீட்டில் உள்ளவன் கோடீஸ்வரன். ஆனால் இருக்கிற பணத்தில் திருப்தியடையாமல் சூதாடினான். கடைசியில் எல்லாவற்றையும் இழந்தான். எனக்கோ கொஞ்சப் பணம் கிடைத்தால் போதும். திருப்தி கொள்வேன். அதிக ஆசைப்படமாட்டேன்! என்று அந்த பிச்சைக்காரன் சொன்னதும் அதிர்ஷ்ட தேவதை அவன் முன்னே தோன்றியது. 

நான் உனக்கு தங்க நாணயங்கள் கொடுத்து உதவுகிறேன் என்றது தேவதை. பிச்சைக்காரன் உடனே அவன் கோணிப்பையை விரித்தான். அப்போது அதிர்ஷ்ட தேவதை கோணிப்பைக்குள் விழுகின்ற நாணயங்கள் தங்கமாக இருக்கும். அவை நிலத்தில் விழுந்தால் தூசியாகிவிடும் என்று சொல்லியது. பிச்சைக்காரன் மிகுந்த மகிழ்ச்சியோடு இருந்தான். அதிர்ஷ்ட தேவதை கோணிப்பை நிரம்பியதும் தங்க நாணயங்களைக் கொட்டுவதை நிறுத்தியது. 

உன் கோணிப்பையில் இருக்கிற நாணயங்கள் உன்னை அரசனை விட பணக்காரனாக்கும். அது போதும்தானே? என்றது அதிர்ஷ்ட தேவதை. போதாது. இன்னும் வேண்டும் என்றான் பிச்சைக்காரன். அதிர்ஷ்ட தேவதை மேலும் சில தங்க நாணயங்களைக் கொடுத்துவிட்டு, உன் கோணிப்பை இதற்கு மேல் தாங்காது என்றது. பிச்சைக்காரன் இன்னும் கொஞ்சம் வேண்டும் என்றான். அதிர்ஷ்ட தேவதை மேலும் தங்க நாணயங்கள் கொடுத்தது. மறுவினாடி கோணிப்பை கிழிந்தது. அதனுள் இருந்த நாணயங்கள் கீழே விழுந்து தூசியாகின. அதிர்ஷ்ட தேவதையும் மறைந்தது. பிச்சைக்காரன் திகைத்துப் போய் நின்றான். 

நீதி :
கிடைத்ததை வைத்து வாழவேண்டும். பேராசைப்பட்டால் உள்ளதும் போய்விடும்.

இன்றைய செய்திகள்

08.11.22

* தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 14-ம் தேதியும், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ஏப்ரல் 6-ம் தேதியும் தொடங்கும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்துள்ளார்.

* கூட்டுறவுச் சங்கங்களின் வரலாற்றில் முதல் முறையாக 10 ஆயிரம் கோடி பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுச் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்தாண்டின் இறுதி சந்திர கிரகணம் இன்று நடைபெற உள்ளது. கொல்கத்தா, சென்னை உட்பட கிழக்கு பகுதிகளில் மட்டும் சந்திரன் உதயத்தின்போது கிழக்கு தொடுவானில் கிரகணத்தின் இறுதி நிலைகளை காணலாம்.

* சிறு வியாபாரிகள் தங்கள் பொருட்களை ஆன்லைன் மூலம் விளம்பரப்படுத்தி விற்பதற்கு வசதியாக, மத்திய அரசு ‘ஓஎன்டிசி’ என்ற டிஜிட்டல் நெட்வொர்க் தளத்தை அறிமுகம் செய்துள்ளது.

* பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

* ஐ.நா. பொதுச் சபையில் நாஜி கொள்கைக்கு எதிராக ரஷ்யா கொண்டுவந்த தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு அளித்தது. 106 நாடுகளின் ஆதரவுடன் ரஷ்யாவின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

* காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளுக்கு இழப்பீடு வழங்க காப் குழுவில் இடம்பெற்றுள்ள 194 நாடுகளும் ஒப்புக்கொண்டன.

* 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி: குரூப் 1ல் இருந்து நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளும், குரூப் 2ல் இருந்து பாகிஸ்தான் மற்றும் இந்தியா அணிகளும் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளது.

* ஆசிய குத்துச்சண்டை: இந்திய வீரர் ஷிவ தபா அரைஇறுதிக்கு முன்னேற்றம்.

* எப்.ஐ.எச் புரோ லீக் ஆக்கி: ஸ்பெயினை வீழ்த்தி இந்தியா வெற்றி.

Today's Headlines

* School Education Minister Anbil Mahes has announced that the 12th standard public examination in Tamil Nadu will begin on March 14th and the 10th standard public examination will begin on April 6th .

 * For the first time in the history of cooperative societies, 10,000 crore crop loans have been given on behalf of the cooperative department - an information from cooperative society.

* The final lunar eclipse of the year will take place today. Only Eastern regions including Kolkata and Chennai can see the final stages of the eclipse in the eastern sky during moonrise.

 * To facilitate small traders to advertise and sell their products online, the central government has launched a digital network platform called 'ONTC'.

 * The Supreme Court has ruled that 10 percent reservation for the economically backward upper classes is acceptable.

 * India supported the resolution brought by Russia against Nazi policy in the UN General Assembly. Russia's resolution was passed with the support of 106 countries.

 * All 194 countries in the COP have agreed to compensate the countries affected by climate change.

 * 20 Overs Cricket World Cup: New Zealand and England from Group 1 and Pakistan and India from Group 2 have advanced to the semi-finals.

 * Asian Boxing: India's Shiva Thapa advanced to semi-finals.

 * FIH Pro League: India beat Spain and won the match
 

Thursday, October 27, 2022

October 27, 2022

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 27.10.2022


  திருக்குறள் :

பால் : அறத்துப்பால்

இயல்: பாயிரவியல்

அதிகாரம்: நீத்தார் பெருமை

குறள் : 26
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.

பொருள்:
பெருமை தரும் செயல்களைப் புரிவோரைப் பெரியோர் என்றும், சிறுமையான செயல்களையன்றிப் பெருமைக்குரிய செயல்களைச் செய்யாதவர்களைச் சிறியோர் என்றும் வரையறுத்துவிட முடியும்.

பழமொழி :
Good to forgive,best to forget.

மன்னிப்பதை விட மறப்பது நன்று.

இரண்டொழுக்க பண்புகள் :

1. எந்த காரியம் செய்தாலும் சிறிதே எ‌ன்றாலு‌ம் மிக அக்கறையுடன் செய்வேன். 

2. அதே போல மற்றவர் பேசும் போது மிக கவனமாக கவனிப்பேன்.

பொன்மொழி :

கடிகாரத்தை நிறுத்தலாம் காலத்தை அல்ல. காலத்தை ஆதாயப்படுத்திக் கொள்

பொது அறிவு :

1. சூரியனின் ஒளிக்கதிர்கள் தரையை வந்தடைய எத்தனை மைல்கள் பயணம் செய்கின்றன?

 6,30,04,000 மைல்கள். 

2. D.D.T யாரால் கண்டுபிடிக்கப்பட்டது ? 

டாக்டர் பால்முல்லர்.

English words & meanings :

Le-pro-lo-gy- study of the disease Leprosy. Leprosy is a infectious disease caused by Mycobacterium leprae. Noun. குஷ்டரோகம் குறித்த படிப்பு
ஆரோக்ய வாழ்வு :

மாதுளை ஜூஸில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் அதிகம் உள்ளதால், இது உடலில் மாயங்களை ஏற்படுத்தும். வேண்டுமானால் இந்த மாதுளை ஜூஸுடன் சிறிது பீட்ரூட் ஜூஸையும் சேர்த்து கலந்து குடித்தால், அது உடலில் உள்ள நச்சுக்களை திறம்பட நீக்க உதவும்.



NMMS Q :

அன்பு ஒரு தேர்வில் 500க்கு 436 மதிப்பெண்கள் பெற்றார் எனில் அவர் பெற்ற மதிப்பெண்களை சதவீதத்தில் கூறுக: 

விளக்கம் : அன்பு பெற்ற மதிப்பெண்களின் சதவிகிதம் = (436 / 500 ) x 100 = 87.2%

நீதிக்கதை

 உண்மைக்குக் கிடைத்தப் பரிசு

ராமன் வசித்து வந்த ஊரில் சோமன் என்ற ஒரு பணக்காரன் இருந்தார். அவர் பணத்தாசைப் பிடித்தவர். 

ஒருமுறை சோமன் தன் தோட்டத்தில் விளைந்த தேங்காய்களை சந்தையில் விற்று விட்டு, கிடைத்த பத்தாயிரம் ரூபாயுடன் தன்னுடைய மாட்டு வண்டியில் காட்டு வழியாக வீட்டுக்கு வரும் போது தனது பணப்பையைத் தொலைத்துவிட்டார். 

வீட்டுக்கு வந்ததும் வண்டியில் பணப் பையை தேடி பார்த்து கிடைக்காமல் புலம்பினார். அப்போது அவரது மனைவி, உங்க பணப்பையை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு தகுந்த சன்மானம் கொடுக்கிறேன் என்று சொன்னால் கண்டிப்பாக யாராவது கொண்டு வந்து கொடுப்பாங்க என்றாள். 

அதேப் போல் சோமன் அடுத்த நாளே ஊர் முழுவதும் தண்டோரா போட்டு சொல்லிவிட்டார். 

இந்த சம்பவம் நடந்து ஒரு வாரத்திற்கு பின்பு அருகில் இருந்த ஊரிலிருந்து அந்த ஊருக்கு ஒரு வழிப்போக்கர் வந்தார். அவர் பெயர் பூபாலன். மிகவும் நல்ல குணமுடையவர். ஏழையாக இந்தாலும் கவுரவமாக வாழ பிரியப்படுபவர். தன்னால் முடிந்தவரை அடுத்தவர்களுக்கு உதவுபவர். 

அவர் காட்டு வழியில் வந்து கொண்டிருக்கும் போது அங்கே ஒரு புறா அடிப்பட்டு கீழே கடந்தது. அதை பார்த்து இரக்கப்பட்ட பூபாலன் அந்த புறாவை தூக்கிக் கொண்டு அருகில் இருந்த குளத்திற்கு கொண்டு சென்று, தண்ணீரை எடுத்து அந்த புறாவின் வாயில் ஊற்றினார். பின்னர் அந்த புறாவை அருகில் இருந்த மரக்கிளையில் வைத்துவிட்டு வந்தார். 

அவர் அப்படி வரும் போது பாதையின் ஓரத்தில் காலில் தட்டுப்பட்டது. அது என்னவென்று பார்த்தார். ஒரு பையில் நிறைய பணம் இருந்தது. அதை எடுத்தவுடன் பூபாலன் மனதில் முதலில் பணத்தை தொலைத்தவரை கண்டுபிடித்து அவரிடம் கொடுத்துவிட வேண்டும் என்று நினைத்து ஊருக்கு விரைந்தார். 

ஊருக்குள் சென்று அங்கு இருந்த கடை வைத்திருந்த கடைக்காரரிடம் விசாரித்தார். அவர் உடனே சோமனைப் பற்றி சொல்லி, அவர் தான் தொலைத்தவர், நீங்கள் இதைக் கொண்டுப்போய்க் கொடுத்தால், கண்டிப்பாக சன்மானம் கொடுப்பார் என்றார். 

உடனே பூபாலனும் சோமன் வீட்டை தேடி பிடித்து சென்று பணப்பை கிடைத்த விபரத்தை சொல்லி சோமனிடம் கொடுத்தார். சோமனுக்கு சந்தோசம் தாங்கமுடியவில்லை. 

ஆனால் கெட்ட மனம் கொண்ட சோமன் பூபாலனைப் பார்த்து, நான் என்னுடைய பையில் வைர மோதிரம் ஒன்றையும் வைத்திருந்தேன், அது காணவில்லை. மரியாதையாக கொடுத்து விடு, உன்னை சும்மா விடமாட்டேன் என்று கத்தினான். 

பூபாலனுக்கு ஒன்றுமே புரியவில்லை. அந்த வேளையில் அந்த ஊர் கடைக்கார், கஞ்சப்பயல் சோமன் அப்படி என்னத்தான் பரிசு கொடுக்கப் போறான் என்று பார்ப்போம் என்று ஊர் மக்கள் அனைவரையும் அழைத்து வந்தார். பூபாலன் ஒரு குற்றவாளி போல நிற்பதை கண்ட ஊரார் சோமனை சும்மா விடக்கூடாது, இந்த பிரச்சினையை மரியாதை ராமனிடம் தான் கொண்டு சென்று தீர்ப்பு கேட்க வேண்டும் என்று சொன்னார்கள். 

சிறிது நேரத்தில் சோமன், பூபாலன், ஊர்மக்கள் அனைவரும் மரியாதை ராமன் முன்னால் போய் நின்றார்கள். நடந்த அனைத்தையும் கூறினான் சோமன். 

ஏற்கனவே சோமன் அறிவித்த தண்டோரா பற்றி மரியாதை ராமனுக்கு தெரியும். அப்போ தண்டோரா போடும் போது வைரமோதிரம் பற்றி ஒன்றும் சொல்லாததும் தெரிந்ததுதான். அதனால் சோமன் தொலைத்த பையில் பணமும், வைர மோதிரமும் இருந்தது என்று சொல்கிறார். இப்போ பூபாலன் கொண்டு வந்த பையில் பணம் மட்டுமே உள்ளது. 

ஆக இது சோமனின் பையே இல்லை, வேறு யாரோ தொலைத்த பை. அப்படி தொலைத்தவர் இதுவரை யாரும் புகார் கொடுக்கவில்லை, அவ்வாறு யாரும் புகார் கொடுக்காதவரை நம்ம ஊரு வழக்குப்படி கிடைத்த பணத்தில் 10 பங்கு அம்மன்கோயிலுக்குக் கொடுத்துவிட்டு, மீதியை எடுத்தவரே வைத்துக்கொள்ளலாம். 

பூபாலன் அந்த பணத்தை தன் சொந்த உபயோகத்துக்கு வைத்துக்கொள்ளலாம், சோமனின் பணம் மற்றும் வைர மோதிரம் கொண்ட பையை கண்டுபிடித்தவுடன் சோமனே சன்மானம் கொடுப்பார், சபை கலையலாம். மரியாதை ராமன் தீர்ப்பு சொன்னதும் சோமனுக்கு இதயமே நின்று போனது போல் ஆகிவிட்டது. 

பூபாலன் கிடைத்த பணத்தில் 10 சதவீதம் அம்மன் கோயிலுக்கு கொடுத்துவிட்டு, மீதியை தன் சொந்த ஊருக்கு கொண்டு சென்று தொழில் செய்து நலமாக வாழ்ந்து வந்தார். 

நீதி :
கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும். அப்படிக் காப்பாற்றாவிட்டால் இருப்பதும் தொலைந்துப் போகும் நிலை வரும்.

இன்றைய செய்திகள்

27.10.22

* ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வில் கலந்துகொள்ளும் வகையில் புதிய அறிவிப்பாணையை வெளியிட தமிழக பள்ளிக் கல்வி துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

* தமிழகத்தில் அக்டோபர் 29-ல் தொடங்குகிறது வடகிழக்குப் பருவமழை; அக்.30-ல் கனமழைக்கு வாய்ப்பு.

* பட்டாசு விற்பனை ரூ.200 கோடியை தாண்டியது: வியாபாரிகள் தகவல்.

* கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம்; தரிசு நில தொகுப்பில் பயன்பெற முன்பதிவு செய்யலாம்: விவசாயிகளுக்கு அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வேண்டுகோள்.

* கரோனா காலத்தில் தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதில் இந்தியா முக்கிய பங்கு வகித்ததாக அமெரிக்கா பாராட்டு தெரிவித்துள்ளது.

* அடுத்து வரும் சில காலம் பொருளாதார ரீதியில் கடினமான காலம் - உலக நாடுகளுக்கு சவுதி எச்சரிக்கை.

* ஐசிசி டி20 தரவரிசை: மீண்டும் டாப்-10க்குள் நுழைந்த கோலி.

* உலக பேட்மிண்டன் தரவரிசை: 3 ஆண்டுகளுக்கு பின் டாப்-5 இடங்களுக்குள் மீண்டும் நுழைந்தார் பிவி சிந்து.

* சுல்தான் ஆப் ஜோகர் ஹாக்கி கோப்பை: ஜப்பான் அணியை வீழ்த்தி இந்திய அணி அபாரம்.

Today's Headlines

* The Madras High Court has ordered the Tamil Nadu School Education Department to issue a new notification so that only those who have passed the Teacher Eligibility Test can participate in the counseling for graduate teachers.

 * Northeast Monsoon begins in Tamil Nadu on October 29;  Chance of heavy rain on Oct 30.

* Firecracker sales cross Rs 200 crore: Traders report.

* Artist's Integrated Agricultural Development Program;  Reservations can be made to benefit from fallow land package: Minister MRK to farmers  Panneerselvam request.

* The US has praised India for its role in producing vaccines during the Corona period.

 *The next few days will be tough economically - Saudi warns the world.

*  ICC T20 Rankings: Kohli returns to top-10.

* Badminton World Rankings: PV Sindhu re-enters top-5 after 3 years.

* Sultan of Johor Hockey Cup: Team India beat Japan.
 


Thursday, October 20, 2022

October 20, 2022

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 20.10.2022

திருக்குறள் :

பால் : அறத்துப்பால்

இயல்: பாயிரவியல்

அதிகாரம்: நீத்தார் பெருமை

குறள் : 22
துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண்டற்று

பொருள்:
உலகில் இறந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று கூற முடியுமா? அதுபோலத்தான் உண்மையாகவே பற்றுகளைத் துறந்த உத்தமர்களின் பெருமையையும் அளவிடவே முடியாது.

பழமொழி :
A true friend is the best possession.

உண்மையான நண்பனே உன்னதச் சொத்து

இரண்டொழுக்க பண்புகள் :

1. பள்ளியின் கட்டளைகளுக்கும் அரசு கட்டளைகளுக்கும் கீழ் படிவேன். 

2. அதுவே நானும், நாமும், நாடும் சிறக்க உதவும் என்று அறிவேன்.

பொன்மொழி :

மணிக்கணக்கில் உபதேசம் செய்வதை விட.. ஒரு கணப் பொழுதாவது உதவி செய்வது மேல்.

பொது அறிவு :

1. மழை நீரில் உள்ள வைட்டமின் எது ? 

பி12. 

2. நம் உடம்பின் செயல்கள் அனைத்திற்கும் முக்கியமாக விளங்கும் சுரப்பி எது? 

பிட்யூட்டரி.

English words & meanings :

Immunology - the study of immunity. Noun. Dr. Greg is a specialist in immunology. நோய் எதிர்ப்பியல். பெயர்ச் சொல்
ஆரோக்ய வாழ்வு :

கொத்தவரங்காய கால்சியத்தின் களஞ்சியமாக கருதப்படுகின்றன. வலுவான எலும்புகளுக்கு கால்சியம் அவசியம். எனவே, கொத்தரவரங்காய்கள் கால்ஷியம் பற்றாக்குறை உள்ளவர்களுக்கு சிறந்த தேர்வாகக் கருதப்படுகின்றன. இதில் உள்ள பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் எலும்புகளை வலிமையாக்குகின்றன.
NMMS Q :

கீழ்க்கண்ட கரைசல்களில் எது மின்சாரத்தை கடத்தாது? 

a) எலுமிச்சை சாறு b)குழாய் நீர் c)வினிகர் d)தாவர எண்ணெய் 

விளக்கம்: எலுமிச்சைச் சாறு சிட்ரிக் அமிலத்தைக் கொண்டுள்ளது. இந்த அமிலமானது நீரில் கரையும் போது நேர்மின் மற்றும் எதிர்மின் அயனிகளாகப் பிரிகிறது. இந்த அயனிகளின் வழியாக அமிலத்தில் மின்சாரம் கடத்தப்படுகிறது. குழாய் நீரானது அதன் கடினத்தன்மையை பொறுத்து மின்சாரத்தை கடத்தும். வினிகரில் சிறிதளவு அசிட்டிக் அமிலம் உள்ளது. இதில் நேர்மின் மற்றும் எதிர்மின் அயனிகள் காணப்படுகின்றன. இந்த மின்னூட்டம் பெற்ற துகள்களின் வாயிலாக மின்சாரத்தை கடத்தும். 

விடை :தாவர எண்ணெய்

அக்டோபர் 20

ஆனி சலிவன் அவர்களின் நினைவுநாள்

ஆனி சலிவன் (Anne Sullivan) (1866 ஏப்ரல் 14 - 1936 அக்டோபர் 20 ) இவர், தலைசிறந்த ஆசிரியரும், பார்க்கவும் கேட்கவும் இயலாத எலன் கெல்லர் வாழ்க்கையில் புதிய விடியல் பிறக்க வழிவகுத்துத் தந்தவருமாகவும் அறியப்படுகிறார். கண் பார்வையற்ற, காது கேளாத தனது ஏழு வயதுக் குழந்தை ஹெலனுக்கு ஆசிரியர் தேவை என ஆர்தர் கெல்லர் என்பவர் இவர் பயின்ற நிறுவனத்தின் இயக்குநரிடம் கேட்க, அவர் அந்த வேலைக்கு இவரை சிபாரிசு செய்தார். எலனை இவர் சந்தித்த கணத்தில் இருவருக்குமிடையே அற்புதப் பிணைப்பு மலர்ந்தது. 49 ஆண்டு காலம் நீடித்த இந்த மகத்தான உறவில் முதலில் எலனுக்கு இவர் ஆசிரியராகவும், பின்னர் நல்ல துணையாகவும் இறுதியில் நண்பராகவும் மாறினார். கண் பார்வையற்ற, காது கேளாத, பேசும் திறனும் அற்ற குழந்தையான ஹெலனுக்கு புரியும் வகையில் தன் போதனை முறையை மாற்றினார். தண்ணீர் கொட்டும் குழாயின் அடியில் அவள் கையை நீட்டிப் பிடித்து, உள்ளங்கையில் w-a-t-e-r என்று மீண்டும் மீண்டும் எழுதி மனதில் அறியவைத்தார்.[5] அப்போதுதான் அந்தக் குழந்தைக்கு, தன் கையில் ஓடிக்கொண்டிருக்கும் பொருளுக்கு ஒரு பெயர் உள்ளது, அதுதான் இது என்பது புரியத் தொடங்கியது. ஆறே மாதங்களில் இவர் ஹெலனுக்கு 575 வார்த்தைகள், ஒரு சில பெருக்கல் வாய்ப்பாடுகளையும் புடையெழுத்து (பிரைய்லி (Braille) முறையையும் கற்றுக்கொடுத்தார். ஹெலன் ரெட்க்ளிஃப் கல்லூரியில் பட்டம் பெறும்வரை அவருக்கு இவர் உறுதுணையாக நின்றார். எஜுகேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஸ்காட்லாந்து சலிவனுக்கு ஃபெலோஷிப் வழங்கியது. டெம்பிள் மற்றும் ஐக்கிய அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் மாநிலத்திலுள்ள ஹார்வேர்ட் பல்கலைக்கழகங்கள் (Harvard University) கவுரவப் பட்டங்களை வழங்கின. இவரைக் குறித்து ஹெலன் கெல்லர் எழுதிய ‘மை டீச்சர்’ என்ற நூல் மிகவும் பிரபலமான ஒன்றாகும். சுய முனைப்பால் மகத்தான உயரங்களை எட்டியவரும் உலகுக்கே ஒரு முன்னுதாரண ஆசிரியராகவும் பரிணமித்த ஆனி சலிவன் 1936-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 10-ம் நாள் 70-வது வயதில் காலமானார்.

நீதிக்கதை

சிட்டுக்குருவியின் கர்வம்

ஒரு கடற்கரையின் அருகில் உள்ள ஒரு செடியில் இரண்டு சிட்டுக்குருவிகள் கூடுகட்டி வாழ்ந்து வந்தது. முட்டையிடும் பருவம் வந்ததும் பெண் சிட்டுக்குருவி, ஆண் சிட்டுக்குருவியிடம், இந்தக் கூடு பாதுகாப்பானது தானா? என்று கேட்டது. 

இந்தக் கூடு பாதுகாப்பானதுதான் என்றது ஆண் சிட்டுக்குருவி. அருகில் கடல் இருக்கிறதே! அது பொங்கிவந்தால் நம் முட்டைகள் அழிந்துவிடுமே! என்றது பெண் சிட்டுக்குருவி. இந்தக் கடலுக்கு என்னிடம் பகைகொள்ளும் அளவுக்குத் துணிவில்லை என்றது கர்வமாக. 

அதற்கு அறிவுரை கூறும் வகையில் பெண் சிட்டுக்குருவி, உனக்கும் கடலுக்கும் வேறுபாடு இருக்கிறது. அதன் வலிமையை உன் வலிமையோடு ஒப்பிடுவது தவறு என்றது. 

இரண்டொரு நாட்களில் கடல் பொங்கி வந்தது. கூட்டிலிருந்த முட்டைகளை அடித்துக்கொண்டு சென்றது. இதனைக் கண்ட பெண் சிட்டுக்குருவி பதறியது. அதற்கு ஆறுதல் கூறிய ஆண் சிட்டுக்குருவி, நீ கவலைப்படாதே! முட்டைகளை நான் மீட்டுக் கொண்டு வருவேன் என்று உறுதியளித்தது. 

ஆண் சிட்டுக்குருவி, பறவைகளின் ராஜாவான கருடனிடம் சென்று முறையிட்டது. கருடராஜா தன் இறைவனான ஸ்ரீ விஷ்ணுவிடம் அறிவித்தார். ஸ்ரீ விஷ்ணு சிட்டுக்குருவியின் முட்டைகளைத் திருப்பிக் கொடுத்து விடுமாறு கடலுக்குக் கட்டளையிட்டார். இறைவனின் கட்டளைக்குப் பணிந்த கடல், அந்தச் சிட்டுக்குருவியின் முட்டைகளை மீண்டும் அதன் கூட்டில் கொண்டு வந்து வைத்தது. 

நீதி :
எவன் ஒருவன் தன் வலிமையையும், மற்றொருவரின்; வலிமையையும் ஒப்பிட்டுப் பார்க்கிறானோ அவன் துன்பப்படுவதில்லை. அவ்வாறு

இன்றைய செய்திகள்

20.10.22

* பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு பிரைய்லி வடிவ திருக்குறள் உட்பட 45 சங்க இலக்கிய நூல்கள் இலவசம்: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்.

* தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையதள சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்வதற்கான அவசர சட்டம் நேற்று சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

* பள்ளிகளுக்கு ரூ.1,050 கோடியில் 7,200 புதிய வகுப்பறைகள்: பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.

* அக்டோபர் 25 ஆம் தேதி பகுதி நேர சூரிய கிரகணம் நிகழும் என்றும், சூரிய கிரகணத்தை வெறும் கண்ணால் பார்க்கக் கூடாது என்றும் புவி அறிவியல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

* டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: கிடாம்பி ஸ்ரீகாந்த் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்.

* டி20 உலகக்கோப்பை : இந்திய - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டம் மழையால் ரத்து.

Today's Headlines

*45 Sangha literature books including Thirukkural in Braille format will be given free for the visually impaired: Tamil Nadu government informs High Court.

* An ordinance to ban online gambling games including online rummy in Tamil Nadu was passed in the Legislative Assembly yesterday.

* 7,200 new classrooms for schools at Rs 1,050 crore: CM Stalin's announcement in Assembly.

* The Ministry of Earth Sciences has said that a partial solar eclipse will occur on October 25 and the solar eclipse should not be viewed with the naked eye.

* Denmark Open Badminton: Kidambi Srikanth advances to 2nd round.

 * T20 World Cup: The practice match between India and New Zealand was canceled due to rain.

Wednesday, September 28, 2022

September 28, 2022

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 28.09.2022

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 28.09.2022

 திருக்குறள் :

பால்: அறத்துப்பால்

அதிகாரம்/Chapter: கடவுள் வாழ்த்து / The Praise of God 

குறள் 5:

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

 விளக்கம்:
கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை.

பழமொழி :

Many hands make light work. 

பல கரங்கள் பணியை இலகுவாக்கும். 

இரண்டொழுக்க பண்புகள் :

1. நான் வலது கையால் செய்யும் உதவி என் இடது கைக்கு கூட தெரிய கூடாது. 

2. பிறருக்கு தெரியும் படி செய்தால் அது உதவி அல்ல விளம்பரம். கடவுளுக்கு பிரியம் இருக்காது . 

பொன்மொழி :

நல்ல வாழ்க்கை நடத்துவதற்கு நல்ல பண்புகளை முறையாகப் பெற்றிருக்க வேண்டும்.

பொது அறிவு :

1. விமானப்படை நாள் எது? 

அக்டோபர் 8. 

 2. உலகில் கடற்கரையே இல்லாத நாடுகள் எத்தனை? 

 26.

English words & meanings :

wind·shield - . A shield placed to protect an object from the wind. Noun. காற்றுத்தடுப்பான். பெயர்ச் சொல் 

ஆரோக்ய வாழ்வு :

வறுத்த கொண்டைக்கடலையில் அதிக அளவிலான நார்ச்சத்துக்கள் இருக்கின்றன. நார்ச்சத்துக்களை உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்வதன் மூலமாக ஜீரண சக்தி அதிகரிப்பதுடன் மெட்டபாலிசமும் அதிகரிக்கும்.

NMMS Q 69:

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆரல்வாய்மொழி என்னும் பகுதியில் உலகின் மிகப்பெரிய ___________ உள்ளது. 

விடை : காற்றாலை நிலையம்

செப்டம்பர் 28

பகத் சிங் அவர்களின் பிறந்தநாள்

பகத் சிங் (Bhagat Singh, செப்டம்பர் 28, 1907[1] – மார்ச் 23, 1931[2][3]) இந்தியாவின் விடுதலைப் போராட்ட வீரரும் இந்திய விடுதலை இயக்கத்தில் ஒரு முக்கிய புரட்சியாளரும் ஆவார். இக்காரணத்துக்காக இவர் சாஹீது பகத் சிங் என அழைக்கப்பட்டார் (சாஹீது என்பது மாவீரர் எனப் பொருள்படும்). இவர் இந்தியாவின் முதலாவது மார்க்சியவாதி எனவும் சில வரலாற்றாசிரியர்களால் குறிப்பிடப்படுவதுண்டு. இந்தியாவின் பிரித்தானிய ஆட்சிக்கெதிராகப் போராடிய குடும்பமொன்றில் பிறந்த பகத் சிங் இளம் வயதிலேயே ஐரோப்பிய புரட்சி இயக்கங்களைப் படிக்க ஆரம்பித்து பொதுவுடமைக் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டார்.[5] பல புரட்சி இயக்கங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார். விரைவிலேயே இந்துஸ்தான் குடியரசு அமைப்பு என்ற புரட்சி அமைப்பின் தலைவர்களில் ஒருவரானார். 63 நாட்கள் சிறைவாசத்தில் இருந்தபோது இந்தியக் கைதிகளுக்கு ஏனைய பிரித்தானியக் கைதிகளுடன் சம உரிமை பெறுவதற்காக உண்ணாநோன்பு இருந்ததில் இவரது செல்வாக்கு மக்களிடையே அதிகரித்தது. முதுபெரும் காங்கிரஸ் தலைவர் லாலா லஜபதி ராய் என்பவரின் இறப்புக்குக் காரணமாயிருந்த காவலதிகாரியைச் சுட்டுக் கொன்ற குற்றத்திற்காக பகத் சிங் 24வது அகவையில் தூக்கிலிடப்பட்டார்.

நீதிக்கதை

மனிதநேயத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு

1893-ஆம் ஆண்டு அமெரிக்காவில், சிகாகோ நகரத்தில் சர்வ சமயப் பேரவை நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு சுவாமி விவேகானந்தர் இந்துமதம் பற்றிச் சொற்பொழிவுகள் செய்தார். அவர் அமெரிக்கா செல்வதற்கு முன்பு, இந்தியாவின் பல பகுதிகளுக்கும் சென்றார். அப்போது அவர் பிரபலமாகவில்லை. அந்த நிலையில் ஒரு சமயம் விவேகானந்தர் ஓர் ஊரில் தங்கினார். அவரைப் பார்ப்பதற்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வந்தார்கள். அவர் அவர்களிடம் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தார். 

இந்த நிகழ்ச்சியைப் பற்றிப் பிற்காலத்தில் சுவாமி விவேகானந்தர் இவ்விதம் கூறியிருக்கிறார் நம்புவதற்கே உங்களுக்குக் கடினமாகத்தான் இருக்கும். ஆனால் மூன்று நாள்கள் இரவும், பகலும் எனக்கு ஒரு விநாடிகூட ஓய்வே கிடைக்கவில்லை. தூக்கம், உணவு எவையும் அறவே எனக்கு இல்லாமல் போய்விட்டன. யாரும் அதைப் பற்றிக் கவலைப்படவும் இல்லை. மக்கள் வந்துகொண்டே இருந்தார்கள். நானும் அவர்களுடன் பேசிக்கொண்டே இருந்தேன். மூன்றாம் நாள் இரவு வந்தது. அநேகமாக எல்லோரும் அங்கிருந்து சென்றுவிட்டார்கள். நான் மட்டும் தனியாக இருந்தேன். அப்போது தாழ்ந்த சாதியைச் சேர்ந்த, செருப்புத் தைக்கும் தொழிலாளி ஒருவன் என்னிடம் வந்தான்.

அவன் என்னிடம், சுவாமிஜி! நீங்கள் மூன்று நாள்களாக உணவு, தூக்கம் எதுவுமே இல்லாமல் பேசிக்கொண்டிருந்ததை நான் கவனித்தேன். அதனால் என் மனம் வேதனையில் துடிக்கிறது. பசியும், களைப்பும் உங்களுக்கும் இருக்கத்தானே செய்யும்! மூன்று நாள்களாக ஒரு டம்ளர் தண்ணீர்கூட நீங்கள் குடிக்கவில்லையே! என்று பரிவுடன் கூறினான். அவனது அன்பு என் மனத்தை நெகிழச் செய்தது. 

நான் அவனிடம், சாப்பிடுவதற்கு நீ எனக்கு ஏதாவது தருகிறாயா? என்று கேட்டேன். அதற்கு அவன், நீங்கள் சாப்பிடுவதற்கு ஏதாவது தர வேண்டும் என்றுதான் என் மனம் ஏங்குகிறது. ஆனால் என்ன செய்வேன்? நான் தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவன். நான் சப்பாத்தி செய்து உங்களுக்குத் தர முடியாது. கோதுமை மாவும், மற்ற பொருள்களும் நான் உங்களுக்குக் கொண்டுவந்து தருகிறேன். நீங்களே சமைத்துச் சாப்பிடுங்கள் என்று கேட்டுக்கொண்டான். நான் அவனிடம், பரவாயில்லை. நீயே சமையல் செய்துகொண்டு வா. நான் சாப்பிடுகிறேன் என்றேன். இவ்விதம் நான் கூறியதைக் கேட்டு அவன் நடுங்கிவிட்டான்.

காரணம், அவன் ஒரு துறவிக்கு உணவளித்தது மற்றவர்களுக்குத் தெரிந்தால் தண்டிக்கப்படுவான். ஏன், நாடு கடத்தவும் செய்வார்கள். ஆனால் நான் அவனைச் சமாதானப்படுத்தி, உனக்குத் தண்டனை கிடைக்காமல் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று உறுதியளித்தேன். அவன் எனது உறுதியை அவ்வளவாக நம்பவில்லை. இருந்தாலும் அவனுக்கு என்மீதிருந்த அன்பு காரணமாகச் சப்பாத்தி செய்து கொண்டு வந்தான். அதை நானும் சாப்பிட்டேன். தேவர்களுக்குத் தலைவனான தேவேந்திரன் ஒரு தங்கக்குவளையில் தேவாமிர்தத்தை எனக்குத் தந்திருந்தால் அதுகூட அப்போது அவ்வளவு ருசியாக இருந்திருக்காது என்றே எனக்குத் தோன்றியது. 

என் இதயம் அன்பாலும், நன்றியாலும் நிறைந்தது. என் கண்கள் கண்ணீரைப் பொழிந்தன. இதற்கிடையில், விவேகானந்தர் தாழ்ந்த சாதியைச் சேர்ந்த ஒருவன் கொடுத்த உணவைச் சாப்பிடுவதைப் பார்த்த உயர் சாதியினர் சிலர் கோபம் கொண்டார்கள். அதை அவர்கள் விவேகானந்தரிடமே தெரிவித்தார்கள். அவர்கள் கூறியதைப் பொறுமையாகக் கேட்டார் விவேகானந்தர். பிறகு அவர்களைப் பார்த்துக் கூறினார் நீங்கள் என்னை மூன்று நாள்கள் தொடர்ந்து பேச வைத்தீர்கள்!

இடையில் நான் ஏதாவது சாப்பிட்டேனா, ஓய்வெடுத்தேனா என்று ஒருமுறைகூட நீங்கள் யாரும் கவலைப்படவில்லை. நீங்கள் பெரிய மனிதர்கள், உயர்ந்த சாதியினர்! ஆனால் இங்கே பாருங்கள், தனக்குத் தண்டனை கிடைக்கும்! என்று தெரிந்திருந்தும், மனிதநேயம் என்ற ஒரே காரணத்தால் அவன் எனக்கு உணவு தந்தான். அவனைத் தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவன் என்று நீங்கள் ஒதுக்குகிறீர்களே! இது உங்களுக்கு வெட்கமாக இல்லையா? சில நாட்களில் விவேகானந்தருக்கு கேத்ரி மன்னருடன் நல்ல பழக்கம் ஏற்பட்டது. 

அப்போது விவேகானந்தர், செருப்புத்தைக்கும் தொழிலாளி தனக்கு உதவியதைப் பற்றி மன்னரிடம் தெரிவித்தார். எனவே மன்னர், உடனடியாகச் செருப்புத்தைக்கும் தொழிலாளியைத் தன் அரண்மனைக்கு வரவழைத்தார். தொழிலாளி, என்னை மன்னர் அழைத்திருக்கிறாரே! என் தவறுக்கு என்ன தண்டனை கிடைக்கப் போகிறதோ! என்று பயந்துகொண்டே வந்தான். ஆனால் கேத்ரி மன்னர் அவனுடைய பயத்தைப் போக்கியதுடன், அவனுடைய செயலைப் புகழ்ந்து பாராட்டினார். மேலும் அரசர் அவனுக்குப் பொன்னும் பொருளும் தாராளமாகக் கொடுத்தனுப்பினார்.

இன்றைய செய்திகள்

28.09.22

* ஃப்ரீ ஃபயரின் ரத்தம் தெறிக்கும் காட்சிகள், குழந்தைகளிடம் வன்முறையைத் தூண்டுகிறது: உயர் நீதிமன்றம் கருத்து.

* இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் வழித்தடங்களை நீட்டிப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஆய்வு: மேலாண் இயக்குநர் தகவல்.

* பொறியியல் படிப்புக்கான 2-ம் சுற்று கலந்தாய்வு: விருப்பப் பதிவுக்கான அவகாசம் நேற்றுடன் நிறைவு.

* தமிழகத்தில் காவிரி டெல்டா உள்ளிட்ட 23 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை தொடர வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

* இந்திய நீதித்துறையில் ஒரு மைல்கல்: சுப்ரீம் கோர்ட்டு வழக்கு விசாரணை நேற்று முதல் நேரடி ஒளிபரப்பு.

* உள்நாட்டு தேவைக்கும், ஏற்றுமதிக்கும் தேஜாஸ் போர் விமானங்களின் உற்பத்தி அதிகரிப்பு - பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தகவல்.

* 36-வது தேசிய விளையாட்டு போட்டிகள் குஜராத்தில்  நேற்று தொடங்கியது.

* டெல் அவிவ் ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடரில் ஆஸ்திரிய வீரர் டொமினிக் தீம் 2-ம் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

* 20 ஓவர் கிரிக்கெட் தரவரிசை: இந்திய அணி முதலிடத்தில் நீடிப்பு.

Today's Headlines

* Free Fire's gory scenes incite violence in children: High Court opined

 * 2nd Round Counseling for Engineering Courses: Deadline for Optional Registration ends yesterday.

 * Chennai: Heavy rains are likely to continue in 23 districts including   Cauvery Delta today and tomorrow in Tamil Nadu, Meteorological Department said.

*  Increase in production of Tejas fighter jets for domestic demand and export - Defence officials inform.

* The 36th National Games started yesterday in Gujarat.

 * Austrian player Dominic Thiem has advanced to the 2nd round of the Tel Aviv Open ATP Tennis Series.

 * 20-over cricket rankings: Indian team continues at the top



Total Pageviews

Search This Blog