Breaking

Showing posts with label Government College. Show all posts
Showing posts with label Government College. Show all posts

Monday, August 28, 2023

August 28, 2023

அரசு கல்லூரிகளில் சாதி பாகுபாடு காட்டிய 3 பேராசிரியர்கள் பணியிட மாற்றம்: கல்லூரி இயக்ககம் உத்தரவு



அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சாதி பாகுபாடு காட்டிய 3 பேராசிரியர்கள் பணியிட மாற்றம்: கல்லூரி இயக்ககம் உத்தரவு

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சாதி பாகுபாடு காட்டிய 3 பேராசிரியர்களை பணியிட மாற்றம் செய்து கல்லூரி இயக்ககம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மாணவர்களிடையே சாதி பாகுபாடு காட்டி மோதல்களை உருவாக்கும் வகையில் செயல்பட்டதாக 3 பேராசிரியர்கள் மீது புகார் எழுந்தது. இதனையடுத்து சிவகங்கை, வியாசர்பாடி, கும்பகோணம் கலை கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்கள் கூடலூர் கல்லூரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

வியாசர்பாடி கல்லூரியில் பணியாற்றும் ரவி மயிசின், சிவகங்கை கல்லூரியில் பணியாற்றும் கிருஷ்ணன் கும்பகோணம் கல்லூரியில் பணியாற்றும் சரவணபெருமாள் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், கல்லூரிகளில் மாணவர்கள் அமைதியான முறையில் கல்வி கற்கவும், மாணவர்களிடையே ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை உருவாக்கும் வகையில் பேராசிரியர்கள் பணியாற்ற வேண்டும். சாதி பாகுபாடுகளை காட்டி மாணவர்களை தூண்டிவிட கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடும் பேராசியர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்லூரி இயக்ககம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Thursday, September 22, 2022

September 22, 2022

upgrade 41 university affiliated colleges to government colleges - 41 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளை அரசு கல்லூரிகளாக தரம் உயர்த்தி தமிழ்நாடு அரசாணை வெளியீடு

Promulgation of Tamil Nadu Ordinance Upgrading 41 University Affiliated Colleges to Government Colleges*

Chennai: Tamil Nadu Government has issued an ordinance upgrading 41 university member colleges to government colleges. The Tamil Nadu Government has informed that the remuneration of the Honorary Lecturers will be paid through the Zonal Joint Directors

41 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளை அரசு கல்லூரிகளாக தரம் உயர்த்தி தமிழ்நாடு அரசாணை வெளியீடு - Tamil Nadu to issue ordinance to upgrade 41 university affiliated colleges to government colleges

சென்னை: 41 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளை அரசு கல்லூரிகளாக தரம் உயர்த்தி தமிழ்நாடு அரசாணை வெளியிட்டுள்ளது. கவுரவ விரிவுரையாளர்களுக்கான ஊதியம், மண்டல இணை இயக்குநர்கள் மூலம் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது 1 உறுப்பு கல்லூரிகள் தற்பொழுது அரசு கல்லுரியாக மற்றம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் கடந்த 2018-ம் ஆண்டு, அந்த 2018-2019-ம் கல்வியாண்டில் தமிழக அரசுடைய உயர்கல்வித்துறை கீழ் செயல்படக்கூடிய பல்கலைக்கழகங்கள் நேரடியாக உறுப்பு கல்லூரியாக இருக்கக்கூடிய 41 உறுப்பு கல்லூரிகளை ரூ. 152 கோடி செலவில் அதை அரசு கலை அறிவியல் கல்லூரிகளாக மாற்ற அறிவிக்கப்பட்டது.

ஆனால் அன்றிய தினம் நீதிநிலை காரணமாக இந்த முடிவுகள் கைவிடப்பட்டன. தொடர்ச்சியாக இது தொடர்பாக நீதிநிலையை சீரமைக்கும் மாரு பல்வேறு கடிதங்களும் எழுதப்பட்டன. மேலும் இதில் 238 பணியிடங்கள் இன்று அதற்கான வில்லை என்பது சுமார் ரூ.4,53,57,000 சம்பளமானது தொடர்ச்சியாக ஆண்டு ஒன்றுக்கு செலவாகும் என்று வெளியிடப்பட்டது. தொடர்ச்சியாக ரூ. 58,64,14,000 என்று ஒவ்வெரு ஆண்டும் இந்த செலவினங்கள் தொடர்பாக பல்வேறு விதிமுறைகளும், கருத்துக்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.

தனியாக ஒரு அரசு கல்லூரி என்றபோது அதற்கான சுய நீதிதிரட்டல், நீதிநிலையை சீராக்குதல் ஆகிய பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்துள்ளன. சமீபத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்த அடிப்படையில் தற்பொழுது 41 கலை அறிவியல் கல்லூரிகளிலும், உறுப்பு கல்லுரியாக இருந்த கல்லூரிகளிலும் தற்பொழுது கலை அறிவியல் கல்லூரியாக மாற்றம் செய்து உயர்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

மேலும் அந்த கல்லூரிகளில் விதிமுறைகளாக பணியாற்றியவர்களுக்கான சம்பளம் எப்படி குடுப்பது, அதையைப்போல அந்த கல்லூரிகளில் இருக்கக்கூடிய தற்காலிக பணியிடங்களை எப்படி நிரப்புவது என்பது தொடர்பாக ஒரு பல்வேறு வழிகாட்டுதல் நடைமுறைகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. எனவே அவற்றை பின்பன்றி வரும் களங்களில் முழுமையான செயல்படுத்துவதற்கான ஒரு விரிவான உத்தரவை பிறப்பிக்கப்படும் என்று உயர்கல்விதுறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுருக்கிறது.

Tuesday, August 23, 2022

August 23, 2022

கௌரவ விரிவுரையாளா்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்

கௌரவ விரிவுரையாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: ராமதாஸ்

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றி வரும் கௌரவ விரிவுரையாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாட்டில் 108 நேரடி அரசு கல்லூரிகளில் 4,083 கௌரவ விரிவுரையாளா்களும், பல்கலை.களுடன் இணைக்கப்பட்டுள்ள 41 அரசு கல்லூரிகளில் 1500 கௌரவ விரிவுரையாளா்களும் பணிபுரிகின்றனா். மிகக்குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வரும் அவா்களின் நிலை கௌரவமாக இல்லை.

மாணவா்களுக்கு உயா்கல்வி கற்பிக்கும் அவா்களுக்கு ஒரு நாளைக்கு வழங்கப்படும் சராசரி ஊதியம் ரூ.700-க்கும் குறைவு தான். இந்த அளவுக்கு மிகக் குறைந்த ஊதியம் வழங்குவதை நியாயப்படுத்த முடியாது. கௌரவ விரிவுரையாளா்கள் கௌரவமாக பணி செய்ய வேண்டும் என்றால், அதற்கான ஒரே தீா்வு அவா்களை பணி நிரந்தரம் செய்வதுதான்.

தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பல்லாயிரக்கணக்கான காலியிடங்கள் உள்ளன.

எனவே, இனியும் தாமதிக்காமல், கௌரவ விரிவுரையாளா்களில் தகுதியுடைய அனைவரையும் உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளாா் ராமதாஸ்.

Monday, August 22, 2022

August 22, 2022

கடலூா் அரசுக் கல்லூரியில் நாளை( 23-ஆம் தேதி ) 2-ஆம் கட்ட கலந்தாய்வு

கடலூா் அரசுக் கல்லூரியில் 2-ஆம் கட்ட கலந்தாய்வு

கடலூா் அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு வருகிற 23-ஆம் தேதி தொடங்குகிறது.

இதுகுறித்து கல்லூரி முதல்வா் சி.ஜோதி வெங்கடேசுவரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 2022-23-ஆம் கல்வி ஆண்டுக்கான முதல் கட்ட மாணவா் சோ்க்கை கலந்தாய்வு ஆக.20-ஆம் தேதி வரை நடைபெற்றது. முதலாம் கட்ட கலந்தாய்வில் எஞ்சியுள்ள இடங்களுக்கு வருகிற 23-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெற உள்ளது.

23-ஆம் தேதி நடைபெறும் கலந்தாய்வில் 400-க்கு 250 ‘கட்-ஆஃப்’ மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவா்கள் பங்கேற்கலாம். 249 முதல் 235 வரை ‘கட்-ஆஃப்’ உள்ளவா்களுக்கு 24-ஆம் தேதியும், 234 முதல் 215 வரை ‘கட்-ஆஃப்’ உள்ளவா்களுக்கு 25-ஆம் தேதியும் கலந்தாய்வு நடைபெறும். 26-ஆம் தேதி பி.ஏ. தமிழ், பி.ஏ. ஆங்கிலம் பாடங்களுக்கான கலந்தாய்வு நடைபெறும். இதில் தமிழ் அல்லது ஆங்கிலம் பாடங்களில் மட்டும் 60 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற அனைத்து மாணவா்களும் கலந்து கொள்ளலாம்.

கலந்தாய்வில் பங்கேற்போா் இணையவழி விண்ணப்பத்தின் நகல், 10-ஆம் வகுப்பு, பிளஸ்1, பிளஸ்2 வகுப்புகளின் அசல் மதிப்பெண் பட்டியல் மற்றும் 2 நகல்கள், பள்ளி மாற்றுச் சான்றிதழ் அசல் மற்றும் 2 நகல்கள், சாதிச் சான்றிதழ் அசல் மற்றும் 2 நகல்கள், 3 பாஸ்போா்ட் அளவு புகைப்படங்கள், வங்கிக் கணக்குப் புத்தக முதல் பக்க நகல், ஆதாா் அடையாள அட்டை 2 நகல்கள், உரிய சோ்க்கைக் கட்டணம் ஆகியவற்றை கட்டாயம் எடுத்து வர வேண்டும் என அதில் தெரிவித்தாா்.

Total Pageviews

Search This Blog