பள்ளிகளுக்கு ஒழுங்குமுறை சட்டத்தில் விலக்கு – உயர்நீதிமன்றம் தகவல்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, April 11, 2024

Comments:0

பள்ளிகளுக்கு ஒழுங்குமுறை சட்டத்தில் விலக்கு – உயர்நீதிமன்றம் தகவல்!

பள்ளிகளுக்கு ஒழுங்குமுறை சட்டத்தில் விலக்கு – உயர்நீதிமன்றம் தகவல்!

தனியார் பள்ளிகளுக்கான ஒழுங்குமுறை சட்டத்தில் விளக்கு கோரி சமர்ப்பித்த மனுவிற்கு சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய பதிலை அளித்துள்ளது.

ஒழுங்குமுறை விதிகள்:

தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு ஒழுங்குமுறைப்படுத்தும் சட்டங்கள் அமலில் இருந்து வருகிறது. இதன் மூலமாகவே பள்ளிகளுக்கான ஒழுங்குமுறை நடவடிக்கைகள் மற்றும் செயல்பாடுகள் அனைத்தும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறை சட்டம் 2018 விதிகளில் இரண்டின் பல பிரிவுகளின் கீழ் உள்ள அதிகாரங்களில் விலக்கு அளிக்க வேண்டும் என்று சிறுபான்மை பள்ளிகள் கோரிக்கை குறித்து இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதிகள் முன்பு மனுக்கள் விசாரணைக்கு வந்தது.


வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஒழுங்குமுறை சட்டத்தில் விதிவிலக்கு அளிக்கப்பட்டால் பல மனுக்கள் பயனற்றதாகிவிடும் என்று தெரிவித்துள்ளனர். மேலும் இது தொடர்பான விஷயத்தில் அரசு முடிவு எடுத்தால் அது பொருத்தமானது என்று நீதிபதிகள் கூறி தமிழக அரசு தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறை சட்டத்தில் விலக்கு கோரி உள்ள விஷயத்தில் ஜூன் 25, 2024க்குள் முடிவை சமர்ப்பிக்க உத்தரவிடுவதாக தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews