ஓய்வு பெற்றோரை பொறுப்பில் இருந்து விடுவிக்க வேண்டும்: ஜாக்டோ ஜியோ தீர்மானம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, January 02, 2023

Comments:0

ஓய்வு பெற்றோரை பொறுப்பில் இருந்து விடுவிக்க வேண்டும்: ஜாக்டோ ஜியோ தீர்மானம்

ஓய்வு பெற்றோரை பொறுப்பில் இருந்து விடுவிக்க வேண்டும்: ஜாக்டோ ஜியோ தீர்மானம்

ஓய்வு பெற்ற ஒருங்கிணைப்பாளர்களை பொறுப்பில் இருந்து விடுவிக்க வேண்டும்' என, மதுரையில் நடந்த ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மதுரையில் அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பாபு பிரேம்குமார், நீதிராஜா, பொற்செல்வன் தலைமை வகித்தனர். கூட்டத்தில், ஜாக்டோ ஜியோ அமைப்பின் மாநில, மாவட்ட அமைப்புகளில் ஓய்வு பெற்றோர் பொறுப்பில் உள்ளனர். அவர்களை விடுவித்து அவர்களுக்கு மாற்றாக தற்போது பணியில் உள்ள ஆசிரியர், அரசு ஊழியர்களை ஒருங்கிணைப்பாளர்களாக சம்பந்தப்பட்ட சங்கங்கள் அறிவிக்க வேண்டும்.

அதுபோல் உயர்மட்ட குழுவில் பொறுப்பில் உள்ள ஓய்வு பெற்றோரையும் விடுவித்து பணியில் உள்ளோருக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வது உள்ளிட்ட நிலுவையில் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி ஜன.5 ல் நடத்த வேண்டிய ஆர்ப்பாட்டம் தொடர்பாக ஆயத்த கூட்டம் நடந்தது. பல்வேறு சங்க நிர்வாகிகள் சந்திரன், மூர்த்தி, முத்துக்குமார், பிரபாகரன், தமிழ்செல்வம், தமிழ்செல்வி பங்கேற்றனர்.

ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் செல்வம் நிறைவுரையாற்றினார். நிதி காப்பாளர் சீனிவாசன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews