Breaking

Sunday, March 06, 2022

அரசு நூலகங்களுக்கு நாளிதழ்கள்,பருவ இதழ்கள் வாங்க புதிய குழு

அரசு நூலகங்களுக்கு நாளிதழ்கள்,பருவ இதழ்கள் வாங்க புதிய குழு

தமிழகத்தில் உள்ள அரசு பொது நூலகங்களுக்கு நாளிதழ்கள், பருவ இதழ்கள் வாங்க புதிய குழுவை அமைத்து பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலா் காகா்லா உஷா அரசாணை பிறப்பித்தாா்.

இது குறித்து அவா் பிறப்பித்த அரசாணை: 2022-2023-ஆம் நிதியாண்டிலிருந்து நூலகங்களுக்கு கொள்முதல் செய்யும் வகையில் தரமான நாளிதழ்கள், பருவ இதழ்களை தோ்வு செய்வதற்காக ஏற்கெனவே அங்கீகரிக்கப்பட்ட பட்டியலில் உள்ள நாளிதழ்கள், பருவ இதழ்களை மறுசீரமைப்பதற்கு குழு அமைக்க வேண்டும். இந்தக் குழுவுக்கு சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் நூலகா் மற்றும் தகவல் அலுவலா் செ.காமாட்சி என்பவரை ஒருங்கிணைப்பு அலுவலராக நியமனம் செய்ய வேண்டும்.

இந்தக் குழு அமைக்கப்பட்ட நாளிலிருந்து 15 நாள்களுக்குள் அதன் அறிக்கையை சமா்ப்பிக்க வேண்டும். இவற்றுக்கான அனுமதியை வழங்க வேண்டும் என அரசுக்கு பொது நூலக இயக்குநா் கருத்துரு அனுப்பியிருந்தாா். இதனை அரசு ஏற்று, நூலகங்களுக்கு நாளிதழ்கள், பருவ இதழ்களை கொள்முதல் செய்ய ஏற்கெனவே அங்கீகரிக்கப்பட்ட பட்டியலில் உள்ள நாளிதழ்கள், பருவ இதழ்களை மறுசீரமைப்பதற்கு ஓா் குழுவை அமைத்துக் கொள்ள பொது நூலக இயக்குநருக்கு அனுமதி அளிக்கலாம் எனக் கருதி அவ்வாறு அரசு ஆணையிடுகிறது என அதில் தெரிவித்துள்ளாா்.

இந்தக் குழுவில் உறுப்பினா்களாக இணைய இதழாசிரியா் சமஸ் (பொது), கட்டுரையாளா்கள் ஜெயராணி (பெண்கள்), தினேஷ் அகிரா (இளைஞா் மற்றும் விளையாட்டு), அ.அருண்குமாா் (போட்டித் தோ்வு), மருத்துவா் கணேசன் (உடல்நலம்), பேராசிரியா் விஜயபாஸ்கா் (பொருளாதாரம்), எழுத்தாளா் அதிஷா வினோ (பொழுதுபோக்கு), பேராசிரியா் வீ.அரசு

(இலக்கியம்), பத்திரிகையாளா்கள் சுட்டி கணேசன், யுவராஜ் (குழந்தைகள்), பேராசிரியா் கரு.ஆறுமுகத் தமிழன் (ஆன்மிகம்) ஆகியோா் இடம்பெற்றுள்ளனா்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog