மாநிலத்தில் முதன் முறையாக அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களின் கல்வித்திறனை பெற்றோரும் அறியும் வகையில், 'கியூஆர் கோடு' முறை அறிமுகம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, November 25, 2018

மாநிலத்தில் முதன் முறையாக அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களின் கல்வித்திறனை பெற்றோரும் அறியும் வகையில், 'கியூஆர் கோடு' முறை அறிமுகம்

மாநிலத்தில் முதன் முறையாக, வால்பாறை அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களின் கல்வித்திறனை பெற்றோரும் அறியும் வகையில், 'கியூஆர் கோடு' முறை அறிமுகம் கோவை மாவட்டம், வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 986 மாணவர்கள் படிக்கின்றனர் பிளஸ் 2 வகுப்பில் படிக்கும் மாணவர்களின் கல்வித்திறனை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் கண்டறியும் வகையிஜல் 'கியூஆர் கோடு' முறையில் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளன. இதற்கான பணிகளை, வகுப்பு ஆசிரியர் சிதம்பரக்கண்ணன் செய்துள்ளார் தலைமை ஆசிரியர் சிவன்ராஜ் கூறியதாவது: அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களை உயர்ந்த நிலைக்கு கொண்டுவர வேண்டும் என்பதற்காக, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன
பிளஸ் 2 வகுப்பில், கணக்கு மற்றும் புள்ளியியல் பிரிவில் படிக்கும் மாணவர்களுக்கு, 'கியூஆர் கோடு' அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அடையாள அட்டையின் பின் பக்கத்தில், 'க்யூஆர் கோடு' கொடுக்கப்பட்டுள்ளது. மொபைல்போனில், அதனை 'ஸ்கேன்' செய்தால் மாணவர்களின் படிப்பு, கல்வித்திறன், பள்ளிக்கு எத்தனை நாள் வந்துள்ளனர், மதிப்பெண், தனித்திறன், ரத்த வகை ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம்
கியூஆர் கோடு' திட்டத்தால் மாணவர்களின் கல்வித்திறனை வீட்டில் இருந்தபடியே பெற்றோர் அறிந்து கொள்ள முடியும் முதல் கட்டமாக, பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும் இந்த நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. படிப்படியாக பிற வகுப்புகளுக்கும் விரிவுபடுத்தப்படும் மாநிலத்தில் வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில் முதன் முறையாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு, தெரிவித்தார்
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews