நாளை தாய்மொழி தினத்தை கொண்டாட கல்லூரிகளுக்கு யுஜிசி அறிவுறுத்தல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, February 20, 2025

Comments:0

நாளை தாய்மொழி தினத்தை கொண்டாட கல்லூரிகளுக்கு யுஜிசி அறிவுறுத்தல்

1351507


தாய்மொழி தினத்தை கொண்டாட வேண்டும்: கல்லூரிகளுக்கு யுஜிசி அறிவுறுத்தல் - Mother Language Day should be celebrated: UGC instructs colleges

பல்கலைக்கழக மானியக்​குழு (யுஜிசி) செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி, அனைத்து உயர்​கல்வி நிறு​வனங்​களுக்​கும் அனுப்பிய சுற்​றறிக்கை விவரம்: ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (யுனெஸ்கோ) முன்​மொழிந்த பிப்​ரவரி 21-ம் தேதி ஆண்டு​தோறும் உலக தாய்​மொழி தினமாக கொண்​டாடப்​பட்டு வருகிறது. எனவே, பல்கலைக்​கழகங்கள் மற்றும் கல்லூரி​களில் தாய்​மொழி தினத்தை விமரிசையாக கொண்டாட வேண்​டும்.

இந்தியா​வில் பல்வேறு மொழிகள் பேசப்​படும் சிறப்பை மாணவர்​களுக்கு எடுத்​துரைக்க வேண்​டும். மொழிசார்ந்த கலை நிகழ்ச்​சிகள், குழு விவாதங்​கள், பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டி மற்றும் கண்காட்சி ஆகிய நிகழ்ச்​சிகளை நடத்​தலாம். மேலும், தாய்​மொழி தின கொண்​டாட்டம் தொடர்பான அறிக்கையை யுஜிசி இணையதளத்​தில் (www.ugc.ac.in/uamp) ப​திவேற்​றம் செய்ய வேண்​டும். இவ்​வாறு அ​தில் கூறப்​பட்​டுள்​ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84608643