அடுத்தடுத்து வெளிவரும் நீட் தேர்வு மோசடிகள்!
பீகார் மாநிலம் பாட்னாவில் நீட் தேர்வுக்கு முந்தைய நாள் 20 தேர்வர்களுக்கு விணாத்தாள் வழங்கப்பட்டு மோசடி*
போலீசார் விசாரணையில் சிக்கந்தர் யாதவேண்டு என்பவர் தனி வீடு வாடகைக்கு எடுத்து 20 மாணவர்களுக்கு நீட் வினாத்தாள்களை தேர்வுக்கு முன்னதாக வழங்கியது அம்பலம்
இச்சம்பவம் தொடர்பாக 4 தேர்வர்கள், அவர்களின் பெற்றோர் என 13 பேர் கைது செய்யபப்பட்டுள்ளனர்
முன்னதாக நீட் விணாத்தாள் வெளியான புகாரில் பீகார், ராஜஸ்தான், ஜார்கண்ட் மாநிலங்களில் 50 பேர் வரை கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது
நீட் தேர்வில் முறைகேடு நடந்தது அம்பலம்!
நீட் தேர்வு மோசடி தொடர்பாக குஜராத் மாநிலம் கோத்ராவைச் சேர்ந்த ஆசிரியர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு!
தேர்வுக்கு முந்தைய நாள் பாட்னாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கவைக்கப்பட்ட 20 தேர்வர்களுக்கு விடையுடன் கூடிய வினாத்தாள் அளிக்கப்பட்டது அம்பலம். பீகாரைச் சேர்ந்த யாதவேந்து என்பவர் முறைகேட்டை ஒப்புக்கொண்டுள்ளார். இவருக்கு யாருடன் தொடர்பு இருக்கிறது? என விசாரணை நடைபெற்று வருகிறது
மாநிலங்களவை எம்.பி., பி.வில்சன் கண்டனம்!
“பீகாரில் நீட் வினாத்தாள் கசிந்ததாக 13 பேர் கைதாகியுள்ளனர்.
இதனால் இத்தேர்வின் தன்மை குறித்தே சந்தேகம் எழுகிறது. கிட்டத்தட்ட 24 லட்சம் பேர் தேர்வெழுதியுள்ளனர். கஷ்டப்பட்டு படித்து தேர்வெழுதிய மாணவர்களின் எதிர்காலம் என்ன? எனவே முறைகேடு நடந்த இடங்களில் மறுதேர்வு நடத்துமாறு ஒன்றிய அரசைக் கேட்டுக்கொள்கிறேன். கனவுகளுடன் இருக்கும் மாணவச் செல்வங்களின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற எங்கள் கோரிக்கையில் எந்த பாரபட்சமும் இல்லை
Friday, May 10, 2024
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.