Breaking

Saturday, July 15, 2023

மகளிர் கலைக்கல்லூரியில் ஆசிரியர் வேலை: 27 இல் நேர்முகத் தேர்வு

பழனி அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலைக்கல்லூரியில் ஆசிரியர் வேலை: 27 இல் நேர்முகத் தேர்வு.

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் நிர்வாகத்திற்கு உட்பட்ட அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலைக்கல்லூரியில் தற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில் ஆசிரியர்கள் (பெண்கள் மட்டும்) பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: ஆசிரியர்

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:

1. ஆங்கிலம் - 2

2. கணினி அறிவியல் - 3

3. கணிதம் - 2

4. வேதியியல் - 2

5. வணிகவியல்(தமிழ்வழிக்கல்வி) - 1

6. வணிகவியல் - 1

7. பொருளியில் - 2

8. இயற்பியல் - 2

9. தாவரவியல் - 2

இதற்கும் விண்ணப்பிக்கலாம். தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் முனைவர் பட்டம் அல்லது நெட், ஸ்லெட், செட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

கணினி அறிவியல் பாடத்திற்கு முனைவர் பட்டம் அல்லது நெட், ஸ்லெட், செட் தகுதி பெற்றவர்கள் வராத பட்சத்தில் முதுநிலை பொறியியல்(எம்.இ கணினி அறிவியல்) தகுதி பெற்றவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களது சுய விபரக்குறிப்பினை www.apacwomen.ac.in என்ற வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களை பதிவேற்றம் செய்து நேர்முகத் தேர்வுக்கு வரும்போது பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அசல் சான்றிதழ்களையும் கொண்டுவருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரி, பழனி. 

நாள்: 27.7.2023 காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog