Breaking

Wednesday, April 05, 2023

12 ஆம் வகுப்பு தேர்வு முடிந்ததும் பள்ளிக்கே வேட்டு வைத்த மாணவர்கள்

12 ஆம் வகுப்பு தேர்வு முடிந்ததும் பள்ளிக்கே வேட்டு வைத்த மாணவர்கள்-மறுபக்கம் வகுப்பறையில் கலாம் படம்

12 ஆம் வகுப்பு தேர்வு முடிந்த உடன் பள்ளிக்கே வேட்டு வைத்த மாணவர்கள் ஒருபக்கம், வகுப்பறையை சொந்த செலவில் சுத்தம் செய்த மாணவர்கள் மறுபக்கம் என இருவேறு சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.

சேலம் ஆத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் 12 ஆம் வகுப்பு தேர்வுகளை முடித்த மாணவர்கள் பள்ளியின் கேட்டில் பிரமாண்ட வெடிகளை தோரணமாக கட்டி வைத்து, அதை வெடிக்கச் செய்த காட்சி அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்தது.

அதே சமயம், பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு தேர்வு எழுதி முடித்த மாணவர்கள், தங்களின் சொந்த செலவில் வகுப்பறையை சுத்தம் செய்து கரும்பலகைக்கு பெயின்ட் அடித்து அடுத்து வரும் மாணவர்கள் படிப்பதற்கு வசதியாக அலங்கரித்து கொடுத்துள்ளனர். தாங்கள் பயின்றதன் நினைவாக வகுப்பறையில் ஏ.பி.ஜே.அப்துல்கலாமின் உருவப்படத்தை அவர்கள் மாட்டி விட்டு சென்றது அனைவரையும் வியக்கவைத்தது. எல்லாம் நம்மூர்தான் ஆனால், ஓரிடத்தில் மாணவர்கள் அதிர்ச்சியடைய வைக்க ஒன்னொரு புறம் மாணவர்கள் நெகிழ்ச்சியடைய வைத்திருப்பது பேசு பொருளாகி உள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog