Breaking

Monday, February 13, 2023

TNPSC குரூப் 4 தேர்வு முடிவுகளை வெளியிட கோரிக்கை

TNPSC குரூப் 4 தேர்வு முடிவுகளை வெளியிட கோரிக்கை TNPSC Group 4 Exam Result Release Request

குரூப் 4 தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி உடனே வெளியிட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார். கடந்தாண்டு நடத்தப்பட்ட தேர்வுகளின் முடிவுகள் 7மாதங்கள் ஆகியும் வெளியிடப்படவில்லை என ராமதாஸ் கூறியுள்ளார். மாணவர்களின் எதிர்காலத்தில் தேர்வாணையம் இவ்வளவு அலட்சியமாக நடந்துகொள்வது கண்டிக்கத்தக்கது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசின் வருவாய்த்துறையில் மட்டும் 31 மாவட்ட வருவாய் அலுவலர் பணியிடங்களும், 117 துணை ஆட்சியர் பணியிடங்களும் காலியாக இருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. இதனால் வருவாய் நிர்வாகம் சார்ந்த பணிகள் முடங்கிக் கிடக்கின்றன

தமிழ்நாடு அரசிற்கு முதுகெலும்பாக திகழ்வது வருவாய்த் துறை தான். அத்துறையில் சுமார் 150 உயர்பதவிகள் காலியாக இருப்பதை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. இதன் காரணமாக வளர்ச்சி மற்றும் நலத்திட்ட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இது தமிழகத்தின் வளர்ச்சியையும் பாதிக்கும்

காலியிடங்களில் சுமார் 100 துணை ஆட்சியர் பணியிடங்களை டி.என்.பி.எஸ்.சி முதல் தொகுதி தேர்வு மூலம் தான் நிரப்ப முடியும் என்பதால், உடனடியாக அத்தேர்வை அறிவிக்க வேண்டும். அதேபோல், தகுதியான வட்டாட்சியர், துணை ஆட்சியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்!(

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog