Breaking

Monday, January 16, 2023

ரூ.5 லட்சத்திற்கு கீழ் ஊதியம் பெறுபவர்களுக்கு புதிய வரி இருக்காது: நிர்மலா சீதாராமன்

ரூ.5 லட்சத்திற்கு கீழ் ஊதியம் பெறுபவர்களுக்கு புதிய வரி இருக்காது: நிர்மலா சீதாராமன்

ஆண்டுக்கு ரூ.5 லட்சத்திற்கு குறைவான ஊதியம் பெறுபவர்களுக்கு இந்த பட்ஜெட்டில் புதிய வரி விதிப்பு இருக்காது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

ஆர்.எஸ்.எஸ்.,ன் பஞ்ச்ஜன்யா பத்திரிகை நடத்திய விழாவின் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: நானும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்தான். என்னால் நடுத்தர வர்க்கத்தினர் சந்திக்க கூடிய பிரச்னைகளை புரிந்துகொள்ள முடிகிறது.

ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய்க்கு குறைவான ஊதியம் பெறுபவர்களுக்கு இந்த பட்ஜெட்டில் புதிய வரி விதிப்பு ஏதும் இருக்காது. ஸ்மார்ட் சிட்டி, மெட்ரோ ரயில் விரிவாக்கம் போன்ற திட்டங்களுக்கு இந்த பட்ஜெட்டில் கவனம் செலுத்த இருக்கிறோம். மொத்தம் 27 நகரங்களில் மெட்ரோ ரயில் சேவையை வழங்கியுள்ளோம். மக்கள் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த 100 ஸ்மார்ட் நகரங்களை உருவாக்கி வருகிறோம். நடுத்தர வர்க்கத்தினருக்கு அரசு மேலும் பலவற்றைச் செய்ய முடியும் என்பதை ஒப்புக் கொள்கிறேன். அவர்களுக்காக அரசு நிறைய திட்டங்களை அமல்படுத்தியிருக்கிறது.

வரும் காலத்திலும் அவர்களுக்கு உதவும் வகையில் திட்டங்களை முன்னெடுப்போம். 2020ம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு பட்ஜெட்டிலும் அரசு மூலதன செலவுகளை உயர்த்தி வருகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog