தமிழகத்து தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்பென ஆட்சி மாறினாலும் அதனைத் தொடர்ந்த காட்சிகள் மட்டும் மாறாதது ஏன்? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, December 26, 2022

3 Comments

தமிழகத்து தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்பென ஆட்சி மாறினாலும் அதனைத் தொடர்ந்த காட்சிகள் மட்டும் மாறாதது ஏன்?

25 Dec 2022*

_*தமிழக பள்ளிக் கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களே, தமிழகத்து தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்பென ஆட்சி மாறினாலும் அதனைத் தொடர்ந்த காட்சிகள் மட்டும் மாறாதது ஏன்?*_

*தேர்வு விடுமுறையிலும் பள்ளிக் கல்வி உத்திரவை ஒரு பொருட்டாக மதிக்காமல் சிறப்பு வகுப்புகள் நடந்து வருவதை உற்று நோக்கும் போது, கல்வியை பணம் படைத்த மாணவர்களின் தனியார் பள்ளி கல்வி,சாமானிய மாணவர்களின் அரசு பள்ளி கல்வி என பதம்,பணம், பாகுபாடு எனதாக பிரித்து பார்ப்பதால், தேனி மாவட்டத்தை பொறுத்தவரை கல்வி துறையில் மாணாக்கர்களுக்கு உண்டான கல்வியில் சமநிலையைத் தொடர்ந்த ஒற்றுமை இல்லாத சூழல்தான் காலம்காலமாக காட்சியளித்து வருவதாக மாவட்ட வாழ் கல்வி நலன் சார்ந்த சமூக நல பற்றாளர்கள் புலம்பி வருகின்றனர்.*

*எக்காலமும் கல்வியில் முக்கியத்துவம் வாய்ந்த சிறப்பு வகுப்பு நடத்த எதிர்ப்பான நிலைபாடு எப்போதுமில்லை. மாறாக, சிறப்பு வகுப்புக்கள் என்பது தனியார், அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணாக்கர்களுக்கும் சமமாக நடத்தப்பட வேண்டும்.அதை விடுத்து,வசதி படைத்த தனியார் பள்ளிகளுக்கு மட்டும் சிறப்பு வகுப்பென்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.* *என்பது ஒருபுறம் இருந்தாலும், தேர்வு விடுமுறை என்பது மாணாக்கர்களை மனவலிமை அளவிலும், உடலளவிலும் உள்ள சோர்வை போக்கி புத்துணர்ச்சி ஊட்டவே இது மாதிரியான தேர்வு விடுமுறைகள் விடப்படுகிறதென மன நல வல்லுநர்கள் கருத்துதெரிவித்து வருகின்றனர் என்பதும் தமிழக அரசு மற்றும் பள்ளிக்கல்வித் துறை கவனத்தில் கொள்ளத்தக்கது.*

*அரையாண்டு தேர்வு விடுமுறைகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாதென பள்ளிக் கல்வித்துறை தமிழக,மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்திரவு என்பதும், தனியார் பள்ளிகள் டிச.26, திங்கள்கிழமை, நாளை முதல் சிறப்பு வகுப்புகள் தொடக்கம் என்பதும் காலம்காலமாக பள்ளிக் கல்வித்துறையின் உத்திரவானது பிள்ளையை (மாணவர்களை) கிள்ளிவிட்டு, தனியார் பள்ளிகள் மூலம் மாணவர்களை தொட்டிலில் ஆட்டுவது என்ற பழமொழிக்கேற்ப நீங்க உத்திரவு போடுங்க... நாங்க கண்டும் காணாம சிறப்பு வகுப்பு நடத்திக் கொள்கிறோம் எனவாக மேற்கண்ட பழமொழியானது தமிழக அரசு மற்றும் பள்ளிக்கல்வி துறைக்கும், தனியார் பள்ளிகளுக்கும் தற்போது மட்டுமல்ல தனியார் பள்ளிகள் காலூன்றிய காலகட்டத்தில் இருந்தே சமக்கச்சிதமாக பொருந்தி வருவதாகத்தான் உற்று கணிக்கப்பட்டு வருகிறது.*

*தமிழகஅரசு மற்றும் பள்ளிக் கல்வித்துறை அறிவித்த 9 நாள் அரையாண்டு விடுமுறை உத்திரவினை தேனி மாவட்ட ஒரு சில தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் ஒரு பொருட்டாக மதிக்காமலும், விடுமுறை எனும் தமிழக அரசு அறிவித்த அரசாணையினை கை கழுவும் (டிஸ்யூ பேப்பர்) காகிதகழிவாக கசக்கி தூக்கி குப்பையில் போட்டு தேனி மாவட்ட குறிப்பிட்ட ஒரு சில தனியார் பள்ளி நிர்வாகங்கள் அரையாண்டு விடுமுறையிலும் மாணவர்களை சிறப்பு வகுப்பு என பள்ளிக்கு வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதோடு,*

*அரையாண்டுத் தேர்வினைத் தொடர்ந்த தொடர் 9 நாட்கள் விடுமுறையில், தாத்தா,பாட்டி, உற்றார், உறவினரை பார்த்து விட்டு வருவோம் என மாணாக்கர்களோடு விடுமுறை கனவு கண்ட பெற்றோர்களையும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கி வருவதாகவும் தமிழக பள்ளிக்கல்வித் துறைக்கு எதிராக தனி அரசாங்கமே தளபதியாரின் அரசில் அரங்கேற்றி வருவதாகவும் குற்றச்சாட்டுக்களை மாணாக்கர்களது பெற்றோர்கள் எழுப்பி வருகின்றனர்.* *மேற்கண்ட, அரசின் எந்த வித கட்டுப்பாட்டை தொடர்ந்த உத்திரவையும் மதிக்காமல் தொடர் அராஜக, அத்துமீறலில் ஈடுபட்டு குற்றச்சாட்டிற்கு உள்ளாகி வரும் தேனி மாவட்ட ஒரு சில தனியார் பள்ளிகள் அதி புத்திசாலித்தனமாக பள்ளி வாகனம், வாட்ஸ் அப் மற்றும் குறுந்தகவல், குறுஞ்செய்தி, ஆடியோ செய்தி இது மாதிரியாக தகவல் கொடுத்து சிக்கிக் கொள்ளாமல் தடம் தெரியாதபடி, மாணாக்கர்களிடத்தில் நேரிடையாக ஒரு வித தனி மிரட்டலோடு பள்ளியானது அரசு விடுத்த விடுமுறையை மீறி சிறப்பு வகுப்பாக 10,11, மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பள்ளி செயல்படும் என்றும்,*

*அதுவும் மாணவர்களை பெற்றோர்கள் டூவிலரில் வந்து இறக்கி விட்டு பின்,பள்ளி நேரம் முடியும் போது பெற்றோர் டூவிலரில் வந்து தங்களது குழந்தைகளை அழைத்து செல்ல வேண்டுமென தங்களது பள்ளி மாணவர்களையும், மாணவர்களது பெற்றோர்களையும் மென்மேலும் அரசிற்கு கட்டுப்படாத தேனி மாவட்ட சில தனியார் பள்ளிகள் நிர்பந்தம் செய்வதாக பெற்றோர்கள் இதுகுறித்து, வெளியில் சொல்லவும், மெல்லவும் முடியாத சிரமத்திற்கு உள்ளாகி வருகிறோம் எனவும் ஆதங்கம் தெரிவித்து வருகின்றனர்.*

*அராஜகத்தோடு, தனி அரசாங்கம் நடத்தி வரும் அரசிற்கு கட்டுப்படாத சில தனியார் பள்ளிகளின் அத்துமீறல் குறித்து, தேனி மாவட்ட சமூக நல ஆர்வலர்கள் ஒரு சிலரிடத்தில் முறையிட்ட போது, தேனி மாவட்டத்தில் கடந்த காலங்களில் அரசும் பள்ளிக்கல்வித் துறையும் அறிவித்த தொடர் மழை விடுமுறை, சனிக்கிழமை விடுமுறை அதனைத் தொடர்ந்து தற்போது, 9 நாள் அரையாண்டு விடுமுறையினை ஒரு பொருட்டாக மதித்து நடக்காத இது மாதிரியான சில தனியர் பள்ளிகளினால் கல்வியை தனியார் பள்ளி மற்றும் பணம், பகட்டு என்ற நோக்கத்தினை மையப்படுத்தி கல்வியை பணம் படைத்த மாணவர்களின் கல்வி,சாமானிய மாணவர்களின் கல்வி என பிரித்து பதம் பார்ப்பதால் தேனி மாவட்ட கல்வி துறையில் மாணவர்களுக்கு உண்டான கல்வியில் ஒற்றுமை இல்லாத சூழல் நிலவி வருவதாகவும்,*

*தனியார் பள்ளிகளை கண்டு(ம்) கொள்ளாமல் இருக்க கல்வி சார்ந்த முக்கிய துறைகளுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும், மாவட்ட சில முக்கியப் புள்ளிகளுக்கும் கைமாறியதா, மாற்றப்பட்டதா, கரன்சி என சமூக நல ஆர்வலர்கள் தங்களது ஆதங்கத்தை தெரிவித்து வருவதாக கூறி வருகின்றனர்.

*அதுசமயம், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தனிக்கவனத்தில் கொண்டு தேனி மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் தமிழக அரசின், பள்ளிக் கல்வித்துறையின் விடுமுறை உத்திரவை மதிக்காமல் இது மாதிரியாக தன்னிச்சையாக செயல்படும் தனியார் பள்ளிகளை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுத்து தனியார் பள்ளிகளின் ஆணவத்தை அடக்கி, சாமானிய மாணாக்கர்கள் மற்றும் பெற்றோர்களது மத்தியில் தமிழக அரசிற்கு அவப்பெயர் ஏற்படுவதை கட்டுக்குள் கொண்டு வர வேண்டுமென தேனி மாவட்ட சமூக நல ஆர்வலர்கள், பெற்றோர்களைத் தொடர்ந்த மாணாக்கர்கள் மதிப்பிற்குரிய தமிழக முதல்வர் அவர்களுக்கும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தேனி மாவட்ட நிருபர் வேப்பம்பட்டி சுகன்யா த.முரளிதரன்

3 comments:

  1. தெரிந்தே அந்த பள்ளியில் தான் தன் பிள்ளையை சேர்க்க வேண்டும் என்று அதிகாலை நான்கு மணிக்கு வரிசையில் நின்று சேர்கிறார்கள். பிறகு ஏசுகிறார்கள். இது நியாயமா?
    Then why are the parents admitting their children in that schools.

    ReplyDelete
  2. அனைத்து தனியார் பள்ளிகளையும் அரசுடைமையாக்கினால் மட்டுமே விடுமுறை சாத்தியம்... அதுவரை தனியார் பள்ளி மாணவர்களும் , ஆசிரியர்களும் மீளாத துயரில்... விடுமுறை என்பது சூரியனை கண்டு பணி போல்தான்...

    ReplyDelete
  3. Miga sirappana pathivu.Theni mattumalla.. tamilnadu muzhuvathum not only private schools including sila govt.schls la kooda special classes edukranga.Students got depression.pls take action and save our younger generation..

    ReplyDelete

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews