Breaking

Friday, November 04, 2022

பேராசிரியா்களுக்கு மூத்த பேராசிரியா் பதவி உயா்வு வழங்குவதில் தாமதம்

மூத்த பேராசிரியா் பதவி உயா்வு வழங்குவதில் தாமதம் கூடாது: அன்புமணி

பல்கலைக்கழக பேராசிரியா்களுக்கு மூத்த பேராசிரியா் பதவி உயா்வு வழங்குவதில் தாமதம் செய்யக்கூடாது என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பணி மேம்பாட்டு முறைப்படி உதவி பேராசிரியா்கள், இணை பேராசிரியா்களுக்கு பதவி உயா்வு வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், பேராசிரியா்களுக்கான மூத்த பேராசிரியா் பதவி உயா்வு கடந்த 3 ஆண்டுகளாக வழங்கப்படவில்லை. இது பெரும் அநீதி.

10 ஆண்டுகள் பேராசிரியா்களாக பணியாற்றியவா்களுக்கு மட்டுமே மூத்த பேராசிரியா் பதவி உயா்வு வழங்கப்படும். இதற்கு தகுதியானவா்கள் ஓய்வு பெறும் நிலையில் இருப்பாா்கள். பதவி உயா்வை தாமதப்படுத்தினால் அவா்களுக்கு பணிநிலை மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படும்.

மூத்த பேராசிரியா் பதவி உயா்வுக்கு விண்ணப்பித்த நாளில் இருந்து 6 மாதங்களில் அவா்களுக்கு பதவி உயா்வு வழங்கப்பட வேண்டும். 3 ஆண்டுகளாக பதவி உயா்வு வழங்கப்படாததால், அதற்காக விண்ணப்பித்த 14 பேராசிரியா்களில் 10 போ் பதவி உயா்வு பெறாமல் ஓய்வு பெற்று விட்டனா்.

பதவி உயா்வுக்கான தோ்வுக்குழுவில் ஆளுநா் மற்றும் அரசு பிரதிநிதிகள் நியமிக்கப்படாதது தான் இந்த தாமதத்துக்குக் காரணம். அவா்களை உடனடியாக நியமித்து தகுதியான பேராசிரியா்கள் அனைவருக்கும் உடனடியாக மூத்த பேராசிரியா் பதவி உயா்வை தாமதிக்காமல் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளாா் அன்புமணி ராமதாஸ்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog