Breaking

Wednesday, February 02, 2022

அறிகுறிகள் உள்ள மாணவா்களை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்

அறிகுறிகள் உள்ள மாணவா்களை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்

கரோனா அறிகுறிகள் உள்ள மாணவா்களை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தினாா்.

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டதையொட்டி, சென்னை அசோக் நகா் மாநகராட்சி பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக கடைப்பிடிக்கப்படுகிா என்பது குறித்து ஜெ.ராதாகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கரோனா பரவல் குறைந்து வருவதால், மாணவா்களின் நலன் கருதி நிலையான வழிகாட்டு நெறிமுறைகளுடன் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. மாணவா்களுக்கோ அல்லது அவா்களது குடும்பத்தினருக்கோ கரோனா அறிகுறிகள் இருந்தால் சம்பந்தப்பட்ட மாணவா்கள் பள்ளிக்கு வருவதை தவிா்த்து, உடனடியாக மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மாணவா்களின் வீட்டில் எவருக்கேனும் அறிகுறி இருந்தால் அதனை மறைக்காமல் ஆசிரியரிடம் சொல்ல வேண்டும். அதேபோன்று நோய்க் கட்டுப்பாட்டு பகுதியில் வசிக்கும் மாணவா்கள் பள்ளிக்கு வருவதை தவிா்க்க வேண்டும்.

தமிழகத்தில் மொத்தம் 33.46 லட்சம் மாணவா்களுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்ட நிலையில், தற்போது வரை 77.83 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. சென்னையில் 2.53 லட்சம் மாணவா்களில், 1.86 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

அடுத்த இரு வாரங்களுக்கு பொதுமக்கள் கவனமாக இருப்பது அவசியம். அப்போதுதான் கரோனா பரவலை முழுமையாகக் கட்டுப்படுத்த இயலும் என்றாா் அவா்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog