Breaking

Sunday, December 07, 2025

சிறப்பு தகுதித்தேர்வு எப்போது நடைபெறும்? குழப்பத்தில் ஆசிரியர்கள்



சிறப்பு தகுதித்தேர்வு எப்போது நடைபெறும்? குழப்பத்தில் ஆசிரியர்கள் Teachers confused about when the special eligibility test will be held

சிறப்பு தகுதித்தேர்வு நடத்தப்படுமா?நடத்தப் படாதா? என ஆசிரியர் கள் குழப்பத்தில் தவிக் கின்றனர்.

சிறப்பு தகுதித்தேர்வு ஆசிரியர் தகுதித்தேர்வு

விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் ஒரு தோரவை வழங்கியது. அதில் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாமல் பணியில் இருக்கும் ஆசிரியர்களும் அதில் கட்டா யம் தேர்ச்சி பெறவேண்டும் என்று தெரிவித்தது.

இந்த உத்தரவால், அரசு, அரசு உதவிபெறும் பள்ளி களில் சுமார் 1 லட்சத்து 76 ஆயிரம் ஆசிரியர்கள் தேர்வை எழுத வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர்.

இதுதவிர தனியார் பள்ளிகளி லும் இந்த தேர்வை ஆசிரியர் கள் எழுத வேண்டிய நிலை யில் உள்ளனர். இது ஆசிரியர் கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த விஷயத் தில் சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய் யப்பட்டிருக்கிறது. இருப்பினும், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படிபணி யில் இருக்கும் ஆசிரியர்களுக் காக சிறப்பு தகுதித்தேர்வை நடத்த பள்ளிக்கல்வித்துறை இவிப்பையும் அதற்கான அறி விப்பையும் வெளியிட்டது.

அதன்படி 2026-ம் ஆண்டில் டிசம்பர் மாதங்களில் ஏறும் 3 முறை தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. குழப்பத்தில் ஆசிரியர்கள்

இதில் ஜனவரி மாதத்துக் கான தேர்வு அறிவிப்பை கடந்த மாதம் (நவம்பர்) 19-ந் தேதி ஆசிரியர் தேர்வு வாரி யம் வெளியிட்டது.

அதில் ஜனவரி 24, 25-ந் தேதிகளில் நடப்பதாக அறிவிக்கப்பட்டு, பின்னர் உடனடியாக அந்த அறிவிப்பு வாபஸ் பெறப்பட் டது.

இதனையடுத்து தகுதித் தேர்வு குறித்து அதிகாரிகள் மற்றும் ஆசிரியர் சங்க பிரதி நிதிகளுடனும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி ஆலோசனை நடத்தி னார்.

ஆலோசனை நடத்தப் பட்டு, 2 வாரங்கள் கடந்து விட்ட நிலையில் என்ன முடிவெடுக்கப்பட்டிருக்கிறது என்ற விவரங்கள் இதுவரை தெரிந்தவில்லை

இந்த நிலையில், நாடாளு தொடருளிச்கரியதேர்த் தொடரில் ஆசிரியர் தேர்வு தொடர்பாக சட்ட மசோதா ஏதாவது நிறைவேற் றப்படுமா?

சுப்ரீம் கோர்ட் டில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவில் நல்ல பதில் கிடைக்குமா?

சிறப்பு ஆசிரி யர் தகுதித்தேர்வு திட்டமிட் டப்படி நடத்தப்படுமா?

என்ற எதிர்பார்ப்பிலும், குழப் பத்திலும் 1 லட்சத்து 76 ஆயி ரம் ஆசிரியர்கள் தவித்துப் போய் இருக்கின்றனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog