Civil Services Mains Exam Results வெளியீடு: தமிழ்நாடு மாணவர்கள் அசத்தல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, November 13, 2025

Comments:0

Civil Services Mains Exam Results வெளியீடு: தமிழ்நாடு மாணவர்கள் அசத்தல்

யு.பி.எஸ்.சி. பிரதானத் தேர்வு முடிவுகள் வெளியீடு: தமிழ்நாடு மாணவர்கள் அசத்தல்

தமிழ்நாடு மாணவர்களின் தேர்ச்சி விகிதம் கடந்தாண்டை விட 13.97% அதிகரித்துள்ளது.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். போன்ற சிவில் சர்வீசஸ் தேர்வுகள் உள்ளிட்ட ஏராளமான போட்டித்தேர்வுகளை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான யு.பி. எஸ்.சி. நடத்துகிறது.

இந்த நிலையில், 2025-ம் ஆண்டு யுபிஎஸ்சி பிரதானத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.

இதில் தமிழ்நாட்டில் இருந்து கடந்தாண்டு 136 பேர் பிரதானத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், இந்தாண்டு 155 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழ்நாடு மாணவர்களின் தேர்ச்சி விகிதம் கடந்தாண்டை விட 13.97% அதிகரித்துள்ளது. அதேவேளையில், 2024ல் மாநில அரசின் பயிற்சி மையத்தில் பயின்றவர்களின் தேர்ச்சி எண்ணிக்கை 48ஆக இருந்த நிலையில், இந்தாண்டு 85ஆக அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டில் இருந்து இந்தாண்டு தேர்ச்சி அடைந்த மாணவர்களில், 54.84% பேர் மாநில அரசின் பயிற்சி மையத்தில் பயின்றவர்கள்.

இது கடந்தாண்டு 35.29% ஆக இருந்தது. 2025 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற யுபிஎஸ்சி பிரதானத் தேர்வில் நாடு முழுவதும் 2.736 பேர் தேர்வாகியுள்ள நிலையில், அவர்கள் அடுத்தக்கட்டமாக நேர்முகத்தேர்வில் பங்கேற்க உள்ளனர்.



சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வு முடிவுகள் வெளியீடு: தேர்ச்சி பெற்ற 2,736 பேரில் 155 பேர் தமிழக மாணவர்கள் Civil Services Mains Exam Results Released: Out of 2,736 who passed, 155 are from Tamil Nadu

ஐஏஎஸ், ஐஎப்​எஸ், ஐபிஎஸ் உள்​ளிட்ட பணி​களுக்​கான சிவில் சர்​வீசஸ் மெயின் தேர்வு முடிவு​களை யுபிஎஸ்சி வெளி​யிட்​டுள்​ளது. இதில் 2,736 பேர் தேர்ச்சி பெற்​றுள்​ளனர். இதில் 155 பேர் தமிழக மாணவர்​கள் ஆவர்.

ஐஏஎஸ், ஐஎப்​எஸ், ஐபிஎஸ், ஐஆர்​எஸ், ஐஐஎஸ் உள்பட 23 வித​மான மத்​திய அரசின் உயர் பதவி​களுக்​கான அதிகாரி​களை நேரடி​யாக நியமிக்​கும் வகை​யில் சிவில் சர்​வீசஸ் தேர்வு என்ற அகில இந்​திய அளவி​லான போட்​டித்​ தேர்வு ஆண்​டு​தோறும் நடத்​தப்​படு​கிறது. இத்​தேர்வை மத்​திய அரசு பணி​யாளர் தேர்​வாணை​யம் (யுபிஎஸ்​சி) நடத்​துகிறது. இது, முதல்​நிலைத் தேர்​வு, மெயின் தேர்​வு, ஆளு​மைத் திறன் தேர்வு என 3 நிலைகளை உள்​ளடக்​கியது. அந்த வகை​யில் சிவில் சர்​வீஸ் பணி​களில் 979 காலி​யிடங்​களை நிரப்​புவதற்​காக யுபிஎஸ்சி முதல் ​நிலைத் தேர்வு கடந்த மே 25-ம் தேதி நடந்தது. இத்தேர்வை 6 லட்​சத்​துக்​கும் மேற்​பட்​டோர் எழு​தினர். தேர்வு முடிவு​கள் ஜூன் 11-ம் தேதி வெளி​யிடப்​பட்​டன. முதல்​நிலைத் தேர்​வில் 14,161 பேர் தேர்ச்சி பெற்​றனர். அவர்​களுக்​கான மெயின் தேர்வு கடந்த ஆக. 22 முதல் 31 வரை சென்னை உள்பட நாடு முழு​வதும் 24 முக்​கிய நகரங்​களில் நடந்​தது.

இந்​நிலை​யில், மெயின் தேர்வு முடிவு​களை யுபிஎஸ்சி தனது இணை​யதளத்​தில் வெளி​யிட்​டுள்​ளது. அதன்​படி, அடுத்​தகட்ட தேர்​வான ஆளு​மைத் திறன் தேர்​வுக்கு 2,736 பேர் தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளனர். அவர்​களில் 155 பேர் தமிழகத்​தைச் சேர்ந்​தவர்​கள். இவர்​களில் 87 பேர் தமிழக அரசின் அகில இந்​திய குடிமைப் பணி​கள் தேர்வு பயிற்சி மையத்​தில் படித்தவ​ர்கள் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

ஆளு​மைத் திறன் தேர்வு நடை​பெறும் நாள் விவரம் விரை​வில் அறிவிக்​கப்​படும் என யுபிஎஸ்சி தெரி​வித்​துள்​ளது. இந்​தத் தேர்வு நடந்து முடிந்த பிறகு, மெயின் தேர்வு மதிப்​பெண், ஆளு​மைத் திறன் தேர்வு மதிப்​பெண் அடிப்​படை​யில் தரவரிசை பட்​டியல் தயாரிக்​கப்​பட்டு அதன்​பேரில் ஐஏஎஸ், ஐஎப்​எஸ், ஐபிஎஸ் மற்​றும் குருப்​-ஏ, குருப்​-பி பணி​களுக்கு தேர்​வர்​கள் ஒதுக்​கீடு செய்​யப்​படு​வர்​கள்​.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews