Kalanjiyam App மூலம் Pensioners வீட்டில் இருந்தபடியே Life Certificate அளிக்கும் வழிமுறை
களஞ்சியம் செயலி மூலம் ஓய்வூதியர்கள் வீட்டில் இருந்தபடியே வாழ்நாள் சான்று அளிக்கும் வழிமுறை
Procedure for Pensioners to provide Life Certificate from home through Kalanjiyam Mobile App
ஓய்வூதியர்கள் வீட்டில் இருந்தபடியே வாழ்நாள் சான்று அளிக்க தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்தியுள்ள பாராட்டுக்குரிய வசதி களஞ்சியம் என்ற Mobile App மூலம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. நான் இன்று எனது வாழ்நாள் சான்று அளித்து ஏற்றுக்கொள்ளப்பட்ட செய்தி கருவூலம் ஆணையரிடம் இருந்து பெறப்பட்டுள்ளது.
நாம் செய்ய வேண்டியது play store சென்று களஞ்சியம் என்ற mobile app ஐ பதிவிறக்க வேண்டும்.
https://play.google.com/store/apps/details?id=com.ifhrms.kalanjiyam தங்கள் PPO போன்ற விபரங்களை உள்ளீடு செய்து நான்கு இலக்க PIN ஐ save செய்து உள்ளே சென்று Mustering என்ற option ஐ தெரிவு செய்து அதில் வரும் பச்சை நிற வட்டத்தில் தங்கள் முகத்தை கண்ணாடி இன்றி காண்பித்து இரண்டு அல்லது மூன்று முறை கண்களை சிமிட்டினால் உங்கள் வாழ்நாள் சான்று ஏற்றுக் கொள்ளப்பட்டதற்கு அடையாளமாக SMS உடனே வந்துவிடும். இந்த முயற்சியை பகலில் மட்டும் செய்ய வேண்டும்.
நன்றி.
ஆ.மீ.பார்த்தீபன்
இணை இயக்குநர் ஓய்வு தஞ்சாவூர்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.