Breaking

Sunday, October 06, 2024

மத்திய படையில் மருத்துவ அதிகாரியாகும் வாய்ப்பு - விண்ணப்பிக்க கடைசி தேதி நவம்பர் 14



மத்திய படையில் மருத்துவ அதிகாரியாகும் வாய்ப்பு - விண்ணப்பிக்க கடைசி தேதி நவம்பர் 14

மத்திய படையில் மருத்துவ அதிகாரியாகும் வாய்ப்பு -

டாக்டர்கள் 345 பேருக்கு வாய்ப்பு இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படையில், காலியாக உள்ள 345 மருத்துவ பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

விண்ணப்பிக்க கடைசி தேதி நவம்பர் 14.

சூப்பர் ஸ்பெஷலிஸ்ட் மருத்துவ அதிகாரி, சிறப்பு மருத்துவ அதிகாரி மற்றும் உதவி மருத்துவ அதிகாரி ஆகிய காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

கல்வித் தகுதி என்ன?

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் எம்.பி.பி.எஸ்., முடித்திருக்க வேண்டும்.

துணை மருத்துவ அதிகாரி பணியிடங்களில் 10% முன்னாள் ராணுவ வீரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. முக்கியமான தேதி

விண்ணப்பதாரர்கள் அக்டோபர் 16ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி நவம்பர் 14.

விண்ணப்பக் கட்டணம்

விண்ணப்பக் கட்டணம் ரூ. 400. ஓ.பி.சி., பொருளாதாரத்தில் பின் தங்கிய வகுப்பை சேர்ந்த ஆண்கள், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog