பொதுமக்கள் தங்களின் புகார்களை தெரிவிக்க " ஊராட்சி மணி " திட்டத்தை அறிவித்தது தமிழக அரசு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, September 23, 2023

Comments:0

பொதுமக்கள் தங்களின் புகார்களை தெரிவிக்க " ஊராட்சி மணி " திட்டத்தை அறிவித்தது தமிழக அரசு

பொதுமக்கள் தங்களின் புகார்களை தெரிவிக்க " ஊராட்சி மணி " திட்டத்தை அறிவித்தது தமிழக அரசு

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊராட்சிகளில் வசிக்கும் பொது மக்கள் தங்களின் புகார்களை தெரிவிக்கும் விதமாக " ஊராட்சி மணி " அழைப்பு மைய எண் : 155340 வழங்கப்பட்டுள்ளது - மாவட்ட அளவில் தொடர்பு அலுவலராக ( Nodal Officer ) மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ( வார்ச்சி ) நியமிக்கப்பட்டுள்ளது.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பாக 'ஊராட்சி மணி' என்ற அழைப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பாக 'ஊராட்சி மணி' என்ற அழைப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஊராட்சி மணி திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற செப்டம்பர் 26-ந்தேதி தொடங்கி வைக்கிறார்.

தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் வசிக்கும் பொதுமக்கள் தங்களது புகார்களை தெரிவிக்கும் வகையில் இந்த திட்டம் தொடங்கப்பட உள்ளது. மக்கள் தங்களது புகார்களை தெரிவிக்கும் விதமாக மைய அழைப்பு எண் 155 340 வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் வசிக்கும் பொதுமக்கள் தங்களின் புகார்களை தெரிவிக்கும் விதமாக "ஊராட்சி மணி" என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்காக மாவட்ட அளவில் தொடர்பு அலுவலராக மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் நியமிக்கப்பட்டுள்ளார். பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்கள் நேரடியாக மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

அதன்படி பொதுமக்கள் ஊராட்சி மணி என்ற திட்டத்திற்காக வழங்கப்பட்டுள்ள 155 340 என்ற எண்ணில் அழைத்து பொதுமக்கள் தங்கள் புகார்களை நேரடியாக மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் தெரிவிக்கலாம். இந்தத் திட்டத்தினை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் வரும் செப்டம்பர் 26 ஆம் தேதி தொடங்கி வைக்க உள்ளார். ஊராட்சி மணி திட்டத்திற்கான அழைப்பு மையத்தின் செயல்பாடுகள் தொடர்பாக அடிப்படை விவரங்களை தெரிவித்திட கடந்த செப்டம்பர் 21ஆம் தேதி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்க கூடுதல் இயக்குனர் தலைமையில் காணொளி மூலம் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வு கூட்டத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய அலுவலர்களின் விவரம் மற்றும் நடவடிக்கை எடுக்க வேண்டிய காலக்கெடு ஆகியவை குறித்து ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் நேரடியாக தங்கள் புகார்களை மாவட்ட ஆட்சியருக்கு தெரிவிக்கலாம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews