Breaking

Tuesday, March 14, 2023

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பிளஸ் 2 தேர்வில் 3 ஆயிரம் பேர் ஆப்சென்ட் - தேர்வுக் கூடங்களில் ஆட்சியர்கள் ஆய்வு

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பிளஸ் 2 தேர்வில் 3 ஆயிரம் பேர் ஆப்சென்ட் தேர்வுக் கூடங்களில் ஆட்சியர்கள் ஆய்வு செய்தனர்

காஞ்சிபுரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு செய்கிறார் ஆட்சியர் மா.ஆர்த்தி. (அடுத்த படம்) திருவள்ளூர் ஆர்.எம். ஜெயின் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் பார்வையிட்டார்

தமிழகத்தில் நேற்று பிளஸ் 2 பொதுத் தேர்வு தொடங்கிய நிலையில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் 2,912 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வை 13,242 பேர் எழுதினர். 13619 பேர் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் 377 பேர் தேர்வு எழுத வில்லை. காஞ்சிபுரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடை பெற்ற பொதுத் தேர்வை மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி நேற்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது னர் செயலர் கண்ணப்பன், முதன்மைக் கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி உட்பட பலர் உடன் இருந்ததனர்.தேர்வு மையங்களில்ஜபோலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பறக்கும் படையினர். நிலையான கண்காணிப்பு அலுவலர்கள் மூலம் தேர்வு எழுதும் மாணவர்கள் கண் காணிக்கப்பட்டனர்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog