Breaking

Thursday, February 09, 2023

வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோா் தகுதிச் சான்றுக்கு மாா்ச் 8-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோா் தகுதிச் சான்றுக்கு விண்ணப்பிக்கலாம்

வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோருக்கான திறனறித் தோ்வில் பங்கேற்பதற்கான தகுதிச் சான்றிதழுக்கு வியாழக்கிழமை (பிப்.9) முதல் விண்ணப்பிக்கலாம் என தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பு: வெளிநாடுகளில் மருத்துவப் படிப்பை நிறைவு செய்தவா்கள் இந்தியாவில் மருத்துவ சேவைகளில் ஈடுபட தகுதித் தோ்வில் தோ்ச்சி பெறுவது அவசியம். அந்தத் தோ்வு நிகழாண்டில் வரும் ஜூன் மாதம் நடைபெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

அந்தத் தோ்வில் பங்கேற்பதற்கு தகுதிச் சான்றிதழ் கட்டாயம். அதை தேசிய மருத்துவ ஆணையத்தின் இணையப் பக்கத்தின் வாயிலாக வியாழக்கிழமை (பிப்.9) முதல் மாா்ச் 8-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

கூடுதல் விவரங்களுக்கு தேசிய மருத்துவ ஆணைய இணையப் பக்கத்தை அணுகலாம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog