Breaking

Tuesday, September 06, 2022

'அரசு பள்ளிகளில் தரமான இலவச கல்வி வேண்டும்!'

'அரசு பள்ளிகளில் தரமான இலவச கல்வி வேண்டும்!'

"ஏழை, பணக்காரர் என அனைத்து மாணவர் களுக்கும், தரமான இலவச கல்வி வழங்கப்பட வேண்டும்." என, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.

சென்னையில் நடந்த, 'புதுமைப் பெண்' திட் டம் மற்றும் மாதிரி பள்ளிகள் துவக்க விழாவில் கெஜ்ரிவால் பேசியதாவது:

கல்லுாரி செல்லும் மாணவியருக்கு மாதம், 1,000 ரூபாய் வழங்கும், 'புதுமைப் பெண்' திட் டம் புரட்சிகரமானது. மாணவியர் பொருளாதார பற்றாக்குறையால், உயர் கல்வியை இடையி லேயே நிறுத்துவது, இந்த திட்டத்தால் குறையும். இந்தியாவில், 27 கோடி மாணவ - மாணவியர் படிக்கின்றனர்.

அவர்களில், 66 சதவீதமான, 18 கோடி பேர். அரசு பள்ளிகளில் தான் படிக்கின்றனர். ஆனால், தமிழகம், டில்லி உட்பட சில மாநிலங்களை தவிர, மற்ற மாநிலங்களில், பள்ளிகளின் உள் கட்டமைப்பு மிகவும் மோசமாக உள்ளது.

தனியார் பள்ளிகளை போன்ற தரமான கல் வியை, அரசு பள்ளிகளில் வழங்கும் வரை, வளர்ந்த நாடாகும் கனவு நனவாகாது. போது, அனைத்து மாநிலங்களும், மத்திய அரசும் தற் இணைந்து, கல்வி திட்டங்களை செயல்படுத்து கின்றன. இதேநிலை நீடித்தால், இன்னும் ஐந்து ஆண்டுகளில், நாட்டில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் தரமான கல்வி கிடைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog