Breaking

Monday, August 01, 2022

"மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின்" - பின் வாங்கிய ஜாக்டோ-ஜியோ - போராட்டம் ஒத்திவைப்பு..!

"மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின்" - பின் வாங்கிய ஜாக்டோ-ஜியோ - போராட்டம் ஒத்திவைப்பு..!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஐந்தாம் தேதி நடைபெறவிருந்த போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டதாக ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது.

இம்மாத இறுதியில் நடைபெறும் ஜாக்டோ ஜியோ மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்கிறார் என, தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், முதலமைச்சர் ஸ்டாலினை சென்னை தலைமை செயலகத்தில் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் சந்தித்து பேசினர்.

அப்போது நிதி அமைச்சரின் பேச்சு, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது என்றும், அவரின் செயல்பாடுகள் குறித்து, முதல்வரிடம் நேரடியாக ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன், கோரிக்கைகளை முதல்வர் நிறைவேற்றுவார் என நம்பிக்கை தெரிவித்தார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog