Breaking

Monday, May 16, 2022

உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி: பட்டியல் அனுப்ப உத்தரவு

உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி: பட்டியல் அனுப்ப உத்தரவு

அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவிக்கு தகுதியான வட்டாரக் கல்வி அலுவலர்கள் பட்டியலை அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இது குறித்து தொடக்கக் கல்வி இயக்ககம் சார்பில் மாவட்ட முதன் மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியி ருப்பதாவது:

அரசாணையின்படி தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணியின் கீழ் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பணியிடங்க ளில் 3 சதவீத காலிப் பணியிடங்களை வட்டாரக்கல்வி அலுவலர்க ளைக் கொண்டு நிரப்பிடவேண்டும்.

எனவே வட்டாரக் கல்வி அலுவலர்களை பதவி உயர்வு, பணிமா றுதல் மூலமாக அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி யில் நியமனம் செய்ய 1.1.2022 நிலவரப்படி 31.12.2008-ஆம் தேதிக்கு முன்னர் பணியில் சேர்ந்த தகுதி வாய்ந்த வட்டாரக் கல்வி அலுவலர் களின் விவரங்களை மே 20-ஆம் தேதிக்குள் தொடக்கக் கல்வி இயக்க கத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog