Breaking

Wednesday, April 13, 2022

இன்ஜி., கல்லுாரிகளில் வகுப்புகள் எப்போது?

இன்ஜினியரிங் வகுப்புகள்

வரும் கல்வியாண்டில், இன்ஜினியரிங் உள்ளிட்ட தொழில்நுட்ப கல்லுாரிகளில் வகுப்புகள் துவங்குவதற்கான கால அட்டவணையை, ஏ.ஐ.சி.டி.இ., வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து, ஏ.ஐ.சி.டி.இ., உறுப்பினர் செயலர் ராஜிவ்குமார் அறிவிப்பு:நாடு முழுதும் உள்ள அனைத்து வகை இன்ஜினியரிங் கல்லுாரிகள் மற்றும் மேலாண்மை கல்லுாரிகள், ஏ.ஐ.சி.டி.இ., என்ற, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலின் அங்கீகாரம் பெற்று செயல்படுகின்றன.

ஒருங்கிணைப்பு பயிற்சி

இந்த கல்லுாரிகள், ஏ.ஐ.சி.டி.இ., வழங்கும் கால அட்டவணைப்படி, தங்கள் வகுப்புகளை நடத்த வேண்டும். வரும் கல்வி ஆண்டுக்கான கால அட்டவணையை, ஏ.ஐ.சி.டி.இ., வெளியிட்டுள்ளது. அதன்படி, தற்போதுள்ள இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி மாணவர்களுக்கு, செமஸ்டர் தேர்வு விடுமுறை முடிந்து, செப்., 15க்குள் புதிய வகுப்புகளை துவங்க வேண்டும்.

முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு, அக்டோபர் 10ம் தேதிக்குள் ஒருங்கிணைப்பு பயிற்சி வகுப்புகளை துவங்க வேண்டும். கவுன்சிலிங் வழியாகவும், தனியார் கல்லுாரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டிலும், மாணவர் சேர்க்கையை முடித்து, அக்., 25க்குள், முதலாம் ஆண்டு வகுப்புகளை துவங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog