TET தேர்வு சான்றிதழ் ஆயுள் வரை செல்லும்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, August 24, 2021

Comments:0

TET தேர்வு சான்றிதழ் ஆயுள் வரை செல்லும்!

TET தேர்வு சான்றிதழ் ஆயுள் வரை செல்லும்!

ஆசிரியர் தகுதி தேர்வு சான்றிதழ் தேர்ச்சி பெற்றவரின் ஆயுள் வரை செல்லுபடியாகும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்ற, டெட் TET எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம். தேர்ச்சி பெற்ற சான்றிதழ் 7 ஆண்டுகள் வரை மட்டுமே செல்லுபடியாகும் என்ற விதிமுறை இருந்தது. அந்த காலக்கெடு முடிந்ததும் மீண்டும் தேர்வு எழுத வேண்டியிருந்தது. இதில் மாற்றம் கொண்டு வந்த மத்திய கல்வி அமைச்சகம் டெட் சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும் என்று அறிவித்தது. இந்நிலையில், தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 2011ல் இருந்து டெட் தேர்வு எழுதியவர்களுக்கு இது பொருந்தும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews