மாநில அரசுகளிடம் சுமார் 1.65 கோடி தடுப்பூசி டோஸ்கள் கையிருப்பில் உள்ளது - மத்திய அரசு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, June 05, 2021

Comments:0

மாநில அரசுகளிடம் சுமார் 1.65 கோடி தடுப்பூசி டோஸ்கள் கையிருப்பில் உள்ளது - மத்திய அரசு

பத்திரிகை தகவல் அலுவலகம் - இந்திய அரசு
மாநிலங்களிடம் சுமார் 1.65 கோடி தடுப்பூசி டோஸ்கள் கையிருப்பு
புதுதில்லி ஜூன் 05, 2021
கொவிட்-19 பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தும் முயற்சியில், மத்திய அரசு இதுவரை, 24 கோடிக்கும் அதிகமான (24,30,09,080) கொவிட் தடுப்பூசி டோஸ்களை, மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும், இலவசமாக வழங்கியுள்ளது. இன்று காலை 8 மணி வரையிலான தரவுகளின் அடிப்படையில், மொத்தம் 22,65,08,508 டோஸ் தடுப்பூசி (வீணானவை உட்பட) பயன்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 1.65 கோடி (1,65,00,572) கொவிட் தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கையிருப்பில் உள்ளன.
ஒவ்வொரு மாதமும் மத்திய மருந்துகள் ஆய்வகம் அனுமதி அளித்த மொத்த தடுப்பூசிகளில் 50 சதவீதத்தை இந்திய அரசு கொள்முதல் செய்து, மாநில அரசுகளுக்கு இலவசமாக வழங்குவது குறிப்பிடத்தக்கது.
IMG_20210605_151141

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84626213