Breaking

Monday, September 05, 2022

LLM சட்டப்படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்!

எல்எல்எம் படிப்பில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

திருச்சி: ஸ்ரீரங்கம் சட்டப்பள்ளியில் எல்எல்எம் படிப்பில் சேர திங்கள்கிழமை(செப்.5) முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

கடந்த 2012-2013 கல்வி ஆண்டு முதல் திருச்சி நவலூர் குட்டப்பட்டியில் தேசிய சட்டப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு ஒருங்கிணைக்கப்பட்ட ஐந்தாண்டு இளநிலை சட்டப் படிப்புகளும், இரண்டாண்டு முதுநிலை பட்டப்படிப்புகளும் பயிற்றுவிக்கப்படுகிறது. இச்சட்டப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிப்பதற்கு பொது சட்ட நுழைவுத் தேர்வில் (CLAT) தேறியிருக்க வேண்டும்.

இந்நிலையில், எல்எல்எம் படிப்பில் சேர திங்கள்கிழமை(செப்.5) முதல் www.tndalu.ac.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog