தொலைதூரக் கல்வி: செப்.15-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் Distance Education: Applications accepted until September 15.
மாநில அரசு பல்கலைக்கழகமான தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் தொலைதூரக் கல்வி திட்டத்தின் வாயிலாக பல்வேறு பாடப்பிரிவுகளில் இளங்கலை, முதுகலை, டிப்ளமா,முதுகலை டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்புகளை வழங்கி வருகிறது.
பள்ளி,கல்லூரி கல்வியைத் தொடர முடியாதவர்கள், பணிபுரியும் நபர்கள், இல்லத்தரசிகள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் உயர்கல்வியை நெகிழ்வு முறையில் தொடர விரும்புவோர் அனைவருக்கும் தொலைதூரக் கல்வி படிப்புகள் வரப்பிரசாதமாக அமைகின்றன.
இந்நிலையில், 2026-27-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கை கடந்த ஜூன் மாதம் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தொலைதூரக் கல்வி படிப்புகளில் சேர விரும்புவோர் செப்டம்பர் 15-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களை www.tnou.ac.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம் என தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக பதிவாளர் ஜி.ஆர்.செந்தில் குமார் தெரிவித்துள்ளார்
பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) தொலைதூரக் கல்விப் பணியக (DEB) வழிகாட்டுதலின்படி, தொலைதூரக் கல்வி மற்றும் ஆன்லைன் பாடப்பிரிவுகளுக்கான சேர்க்கை பெற செப்டம்பர் 15-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் (TNOU), பாரதியார் பல்கலைக்கழகம், புதுச்சேரி பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல முன்னணி உயர்கல்வி நிறுவனங்கள் 2026-2027 கல்வியாண்டின் ஜூலை/ஆகஸ்ட் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை வெளியிட்டுள்ளன
முக்கியக் குறிப்பு: தொலைதூரக் கல்வியில் இணைய விரும்புபவர்கள், தாங்கள் விண்ணப்பிக்கும் பல்கலைக்கழகம் மற்றும் பாடப்பிரிவு UGC-DEB அங்கீகாரம் பெற்றவையா என்பதை UGC-DEB இணையதளத்தில் சரிபார்த்து விண்ணப்பிப்பது அவசியமாகும்
Monday, July 20, 2026
தொலைதூரக் கல்வி: செப்.15-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.