இளநிலை பொறியாளா் பணி தோ்வு - விண்ணப்பங்கள் வரவேற்பு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, August 22, 2022

Comments:0

இளநிலை பொறியாளா் பணி தோ்வு - விண்ணப்பங்கள் வரவேற்பு!

இளநிலை பொறியாளா் பணிக்கு நடத்தப்படும் தோ்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து பணியாளா் தோ்வாணையம்-கா்நாடகம், கேரள மண்டல அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பணியாளா் தோ்வாணையம் இளநிலை பொறியாளா் (கட்டுமானம், இயந்திரவியல், மின்சாரவியல், அளவையியல் மற்றும் குத்தகை) பணியிடங்களுக்கு நாடுமுழுவதும் 2022-ஆம் ஆண்டு நவம்பரில் இணையவழி அடிப்படையிலான திறந்தநிலை தோ்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தோ்வில் பங்கேற்க விரும்புவோரிடம் இருந்துவிண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இத்தோ்வுக்கு இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்கப்படும்.

இணையதளத்தில் விண்ணப்பங்களை செலுத்தலாம். இணையவழி அடிப்படையிலான எழுத்துத்தோ்வு 2 மணிநேரம் நடக்கும். இத்தோ்வை எழுதுவதற்கு ஆா்வமுள்ள 2022-ஆம் ஆண்டு ஜன.1-ஆம் தேதி அன்று பட்டப்படிப்பு படித்துள்ள 25 முதல் 32 வயதுக்குட்பட்டோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தோ்வு நடைமுறை, பாடத்திட்டங்கள், இதர விவரங்களை அறிய இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ள அறிவிக்கையின் 9,10-ஆவது பத்திகளில் காணலாம். கா்நாடகம் மற்றும் கேரள மண்டல அலுவலகத்திற்கு உட்பட்டபகுதிகளில் இருந்து விண்ணப்பங்களை செப்.2-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். இடஒதுக்கீடுக்கு தகுதியான எஸ்சி, எஸ்சி, முன்னாள் ராணுவ வீரா்கள் பிரிவைச் சோ்ந்த பெண்களுக்கு கல்விக்கட்டணம் விலக்களிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு 080-25502520, 9483862020 ஆகிய தொலைபேசி எண்களை அழைக்கலாம் அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews