Breaking

Friday, March 14, 2025

EL Surrender - அரசு ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்பை சரண் செய்து பண பலனாக பெறலாம் - பட்ஜெட்டில் அறிவிப்பு

EL Surrender - Government employees can surrender earned leave and get it as cash benefit - Announcement in the budget


தமிழக அரசின் 2025 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை இன்று மார்ச் 14ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

நிதிநிலை அறிக்கையை மாண்புமிகு அமைச்சர் திரு தங்கம் தென்னரசு அவர்கள் தாக்கல் செய்தார்

இதில் ஆசிரியர் மற்றும்அரசு ஊழியர்களுக்கான முக்கிய அறிவிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது


அரசு ஊழியர்களுக்கான முக்கிய அறிவிப்புகள்

அரசு அலுவலர்கள் எதிர்பாராத விதமாக விபத்தில் இறந்தாலோ, நிரந்தர ஊனம் அடைந்தாலோ தனி நபர் விபத்து காப்பீட்டுத் தொகையாக ரூ.1 கோடி நிதி வழங்க வங்கிகள் முன்வந்துள்ளன.

விபத்தில் இறந்த அரசு அலுவலரின் குடும்பத்தில் திருமண வயதை எட்டியுள்ள மகள்களின் திருமணச் செலவுகளுக்காக தலா ரூ.5 லட்சம் வீதம் ரூ.10 லட்சம் வரை நிதியுதவியாக வங்கிகள் வழங்கும்

*விபத்தில் இறந்த அரசு அலுவலரின் குடும்பத்தில் உயர்கல்வி படிக்கும் மகளின் உயர் கல்விக்கான உதவித் தொகையாக ரூ.10 லட்சம் வரை வங்கிகள் வழங்கிடும்.

*►அரசு அலுவலர்கள் தங்களது பணிக்காலத்தில் எதிர்பாராமல் இயற்கை மரணம் அடைந்தால் ஆயுள் காப்பீட்டுத் தொகையாக ரூ.10 லட்சம் வங்கிகள் வழங்கிடும்.

*தனிநபர் வங்கிக் கடன், வீட்டுக் கடன், கல்விக் கடன் ஆகியவற்றை அரசு அலுவலர்கள் பெறும் போது, உரிய வட்டிச் சலுகைகள் வழங்கிடவும் முக்கிய வங்கிகள் முன்வந்துள்ளன.


EL Surrender - அரசு ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்பை சரண் செய்து பண பலனாக பெறலாம் - பட்ஜெட்டில் அறிவிப்பு

அரசு ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்பை சரண் செய்து நிதியாக வழங்கப்படும் நிதி அமைச்சர் அறிவிப்பு!

அரசு ஊழியர்களுக்கு அடுத்த ஆண்டு 01.04.2026 முதல் 15 நாட்கள் ஈட்டிய விடுப்பை சரண் செய்து நிதியாக வழங்கப்படும் நிதி அமைச்சர் அறிவிப்பு!

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog