காஞ்சிபுரம் மாவட்டத்தில் 20.01.2026 அன்று திருக்குறள் ஒப்பித்தல் மற்றும் ஓவியப் போட்டி - முதற்பரிசு ரூ.5000/இரண்டாம் பரிசு ரூ.3000/மூன்றாம் பரிசு ரூ.2000/ - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, January 15, 2026

Comments:0

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 20.01.2026 அன்று திருக்குறள் ஒப்பித்தல் மற்றும் ஓவியப் போட்டி - முதற்பரிசு ரூ.5000/இரண்டாம் பரிசு ரூ.3000/மூன்றாம் பரிசு ரூ.2000/

Thirukkural Recitation and Painting Competition on 20.01.2026 in Kanchipuram District - First Prize Rs.5000/Second Prize Rs.3000/Third Prize Rs.2000/ - காஞ்சிபுரம் மாவட்டத்தில் 20.01.2026 அன்று திருக்குறள் ஒப்பித்தல் மற்றும் ஓவியப் போட்டி

காஞ்சிபுரம், ஜன.14-காஞ்சிபுரம்மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 31.12.2024 ஆம் நாளன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற அய்யன் திருவள்ளுவர் சிலை நிறுவிய வெள்ளிவிழா நிகழ்ச்சியில் ஒவ்வோர் ஆண்டும் அனைத்து மாவட்டங்களிலும் குறள்வாரம் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டது.



மேற்கண்ட அறி விப்பினை செயற்படுத்தும் வகையில் குறள் வார விழாவின் ஒரு நிகழ்வாக 2026 சனவரி 20 அன்று முற்பகல் காஞ் சிபுரம். ஆந்திரசன் மேல்நிலைப்பள்ளியில் பொதுமக்கள் மட்டும் பங்கேற்கும் வகையில் குறள் ஒப்பித்தல் போட்டி நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. குறள் ஒப்பித்தல் போட்டி பொதுமக்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் அவரவர் தெரிந்த குறளை ஒப்பித்தல் செய்யலாம். குறள் போட்டிக்கான பரிசு ஒப்பித்தல் செய்த குறள்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் வழங்கப்படும் முதற்பரிசாக ரூ.5000/வீதம் ஐந்து நபர்களுக்கும், இரண்டாம் பரிசாக ரூ.3000/ வீதம் ஐந்து நபர்களுக்கும், மூன்றாம் பரிசாக ரூ.2000/ வீதம் ஐந்து நபர்களுக்கும் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். குறள் ஓவியப்போட்டி வித்துள்ளார்கள்

பொதுமக்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். இப்போட்டி 20.01.2026 அன்று மாலை 2.00 एली ए5 3.00 மணி வரை காஞ்சிபுரம் ஆந்திரசன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும். ஓவியப் போட்டி தலைப்பு "திருக்குறள் சார்ந்த ஓவியம்" ஆக கட்டாயம் இருத்தல் வேண்டும். இதில் சிறந்த ஓவியங்களை காட்சிப்படுத்தப்படும். ஓவியப் போட்டிக்கு முதற்பரிசு ரூ.5000/இரண்டாம் பரிசு ரூ.3000/மூன்றாம் பரிசு ரூ.2000/என மூன்று நபர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். எனவே, பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு குறள் வாரவிழாவினை சிறப்பிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தெரி

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews