கல்வி உதவித்தொகைக்கான 'பிஎம் யாசஸ்வி’ திட்டத்தில் விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு Deadline extended for applications for 'PM Yasasvi' scholarship scheme
சென்னை
மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் நலத்துறை இயக்கு நரகம் சார்பில் மாவட்ட அலுவலர்களுக்கு அனுப்பப்பட் டுள்ள சுற்றறிக்கை விவரம்:
'பிஎம் யாசஸ்வி திட்டத்தின்கீழ் பட்டியலிடப்பட்ட பள்ளிகளில் 9, 11-ம் வகுப்பு ஓபிசி, இபிசி, டிஎன்டி பிரிவை சேர்ந்த மாணவர்களுக்குஆண்டுதோறும் ரூ.4 ஆயிரம் கல்வி உதவித் தொகையாக வழங்கப்படுகிறது.
நடப்பாண்டு இதற்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் அக்.31 வரை தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. தகுதியான மாணவர்கள் https://scholarships.gov.in என்ற இணைய வழியில்விண்ணப்பிக்கவேண்டும்.இத்திட்டத்தில் விண்ணப் பிக்கும் மாணவர்களின் பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சமாக இருக்கவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
Monday, October 27, 2025
கல்வி உதவித்தொகைக்கான 'பிஎம் யாசஸ்வி’ திட்டத்தில் விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
SCHOLARSHIP
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.