Breaking

Wednesday, October 04, 2023

புதிய மருத்துவ கல்லுாரி துவங்குவதில் சிக்கல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.



*புதிய மருத்துவ கல்லுாரி துவங்குவதில் சிக்கல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.

தேசிய மருத்துவ ஆணைய அறிவிப்பால் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளை துவங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் அறிவிப்பை நிறுத்தக்கோரி பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

தேசிய மருத்துவ ஆணையம் சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பினால், தமிழகம் போன்ற மாநிலங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் துவங்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பதாவது:

புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடர்பான தேசிய மருத்துவ ஆணைய அறிவிப்பை நிறுத்த வேண்டும்.
மாநில அரசுகளுடன் உரிய ஆலோசனைகளை மேற்கொள்ள மத்திய சுகாதாரத்துறைக்கு அறிவுறுத்த வேண்டும்.

இந்த அறிவிப்பால் தமிழகம் போன்ற மாநிலங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளை துவங்குவதில் சிக்கல் ஏற்படும்.

புதிய மருத்துவமனைகள், புதிய முதலீடுகள் தமிழகத்திற்கு வருவதற்கான வாய்ப்பு இல்லாமல் போய்விடும்.

அரசுகளுடன் உரிய ஆலோசனைகளை மேற்கொள்ளத் தேவையான அறிவுரைகளை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்திற்கு வழங்க வேண்டும்.

இவ்வாறு கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog