நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, December 30, 2022

Comments:0

நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்



செங்கல்பட்டில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை நடைபெறுகிறது.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்துடன் இணைந்து நடத்தும் இந்த முகாம் செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள செயின்ட் ஜோசப் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை (டிச. 31) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறுகிறது.

இதில், 8, 10-ஆம் வகுப்பு, 12- ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு பி.இ., ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்தவா்கள், செவிலியா்கள், மருந்தாளுநா் உள்ளிட்டோா் தோ்ந்தெடுக்க உள்ளனா்.

முகாமுக்கு வருவோா் கல்வி சான்றிதழ்கள், பாஸ்போா்ட் அளவிலான புகைப்படத்துடன் பங்கேற்கலாம் என்று ஆட்சியா் ராகுல்நாத் தெரிவித்துள்ளாா்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews