பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்து ஆணை வெளியிட வேண்டும்' - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, February 03, 2025

Comments:0

பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்து ஆணை வெளியிட வேண்டும்'

பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்து ஆணை வெளியிட வேண்டும்'

பள்ளிக் கல்வித்துறை யில், 47ஆயிரம் தற்காலிக பணியிடங்களை நிரந்தரம் செய்து ஆணை வெளியிட்டு இருப்பதை போல, 12 ஆயி ரம் பகுதிநேர ஆசிரியர்களை யும் பணி நிரந்தரம் செய்து ஆணையிட வேண்டும் என, பகுதிநேர ஆசிரியர் சங்கம், தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.

இது குறித்து, பகுதிநேர ஆசிரியர்சங்கம் மாநில ஒருங் கிணைப்பாளர் செந்தில்கு மார் கூறியிருப்பதாவது:

தமிழத்தில், 14 ஆண் டுகளாக, 12 ஆயிரம் பகு திநேர ஆசிரியர்கள் தற் காலிகமாக பணிபுரிந்து வருகின்றனர். இன்னும் நிரந்தரம் செய்யவில்லை.


பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்து ஆணை வெளியிட வேண்டும்'

பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்வதாக,தி.மு.க., தேர்தல் வாக்குறுதியில் கூறப் பட்டது. ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டு முடியவுள் ளது.

இன்னும் வாக்குறு தியை நிறைவேற்றவில்லை. பள்ளிக்கல்வித்துறை யில், 47ஆயிரம் தற்காலிக பணியிடங்களை நிரந்தரம் செய்து அரசாணை வெயி டப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஒதுக்கிய நிதி யில் இருந்து, காலமுறை சம்பளத்தோடு தொடர் பணி நீட்டிப்புடன் பணி புரிந்து வந்த பட்டதாரி, முதுகலை, தொழிற்கல்வி, கணினி ஆசிரியர்கள் உள் பட பணியாளர்கள் என, 47 ஆயிரம் பேர் இதனால் பலன் அடைந்து உள்ளனர். இந்நிலையில், 2011ம் ஆண்டு முதல் 12 ஆயி ரத்து, 500 ரூபாய் தொகுப் பூதியத்தில் பணி செய்து வருகின்ற, 12 ஆயிரம் ஆசிரியர்கள் 14 ஆண்டுக ளாக தற்காலிகமாக பணி செய்து வருகின்றனர். இவர் களையும் நிரந்தரம் செய்து ஆணையிட வேண்டும்.

இவ்வாறு, அவர் தெரி வித்துள்ளார்

தமிழத்தில், 14 ஆண்டுகளாக, 12 ஆயிரம் பகு திநேர ஆசிரியர்கள் தற்காலிகமாக பணிபுரிந்து வருகின்றனர். இன்னும் நிரந்தரம் செய்யவில்லை. பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்வதாக, தி.மு.க., தேர்தல் வாக்குறுதியில் கூறப்பட்டது. ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டு முடியவுள்ளது. இன்னும் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews