Breaking

Thursday, July 23, 2026

‘நீர் எழில் பள்ளி’ திட்டம்: எழும்பூர் அரசுப் பள்ளியில் அமைச்சர் தொடங்கி வைத்தார்



கழிவுநீரை மறுசுழற்சி செய்யும் ‘நீர் எழில் பள்ளி’ திட்டம்: எழும்பூர் அரசுப் பள்ளியில் அமைச்சர் தொடங்கி வைத்தார்

‘நீர் எழில் பள்ளி’ திட்டம்: எழும்பூர் அரசுப் பள்ளியில் அமைச்சர் தொடங்கி வைத்தார் 'Neer Ezhil Palli' scheme: Minister inaugurates it at Egmore Government School.

தமிழகத்​தில் அரசுப் பள்​ளி​களில் தண்​ணீரை மறுசுழற்சி செய்து மீண்​டும் பயன்​படுத்​தும் வித​மாக கழி​வுநீர் மூல​மாக தோட்​டம் உரு​வாக்​கு​வது மற்​றும் நிலத்​தடி நீரை உயரச் செய்​வது உள்​ளிட்ட வழி​முறை​களு​டன் கூடிய நீர் எழில் பள்​ளி' எனும் திட்​டம் தனி​யார் நிதி​யுத​வி​யுடன் உரு​வாக்​கப்​பட்​டுள்​ளது.

இதன்​மூலம் பள்​ளி​களில் தின​மும் சுமார் 25,000 லிட்​டர் கழி​வுநீர் பாது​காப்​பாக சுத்​தி​கரிக்​கப்​பட்டு மறு​பயன்​பாட்​டுக்கு கொண்​டு​வரப்​படும். முதல்​கட்​ட​மாக சென்னை எழும்பூர், அசோக் நகர், போரூர், அம்​பத்​தூர், வில்​லி​வாக்​கத்​தில் உள்ள 5 அரசு பெண்​கள் மேல்​நிலைப் பள்​ளி​களில் இத்​திட்​டம் அமல்​படுத்​தப்​பட்​டுள்​ளது.

அதன்​படி சென்னை எழும்​பூரில் உள்ள அரசு மகளிர் மேல்​நிலைப் பள்ளி வளாகத்​தில் நீர் எழில் பள்​ளி' திட்​டத்தை பள்​ளிக்​கல்​வித் துறை அமைச்​சர் ராஜ்மோகன் நேற்று தொடங்கி வைத்​தார். இந்​நிகழ்​வின்​ போது பள்​ளிக்​கல்​வித் துறை இயக்​குநர் ச.கண்​ணப்​பன், தொடக்​கக்​கல்​வித் துறை இயக்​குநர் பூ.ஆ.நரேஷ் உள்​ளிட்ட துறை சார்ந்த அலு​வலர்​கள் கலந்​து​கொண்​டனர்.

அதன்​பின்​னர் அமைச்​சர் ராஜ் மோகன் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: நீட் தேர்​வில் மறுசீரமைப்பு வேண்​டாம். நிரந்​தர​மாக ரத்து செய்​யப்பட வேண்​டும் என்​பது​தான் தவெக​வின் இலக்​கு.

நீட் தேர்​வுக்கு எதி​ராக அறவழி​யில் போராடும் மாணவர்​களுக்கு நாங்​கள் ஆதரவு கொடுக்​கிறோம். சட்​டப்​பூர்​வ​மான நடவடிக்​கைகளை மேற்​கொண்டு நிரந்​தரத் தீர்வு காண முயன்று வரு​கிறோம்.

அதே​நேரம் சாலைகள் போராடு​வதற்​கான இடமல்ல. ஜனநாயக முறைப்​படி அனு​மதி பெற்று போராட்​டம் நடத்​தி​னால் ஆதரிக்​கிறோம்.

நீட் தேர்​வுக்கு எதி​ராக உரிய அனு​மதி பெற்று மாணவர்​கள் அறவழி​யில் போராடி​னால் பிரச்​சினை இல்​லை. சாதாரண மக்​களுக்கு இடையூறு செய்​யும் வித​மாக போராட்​டம் நடத்​தப்​பட்​ட​தால்​தான் நடவடிக்கை எடுக்​கப்​பட்​டது.

டெல்​லி​யில் ஜனநாயக முறைப்​படி போராடும் இடத்​தில் மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி கைது செய்​யப்​பட்​டுள்​ளார்.

ஆனால் தமிழகத்​தில் அனு​மதி பெறாமல் பொது​மக்​களுக்கு இடையூறு ஏற்​படும் வகை​யில் போராட்​டம் நடத்​தப்​பட்​ட​தால் கைது நடவடிக்கை எடுக்​கப்​பட்​டது. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog